ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு (5/12/22-09/12/22)

 நாள்: (5.12.22 - 9.12.22)

வகுப்பு : பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 8 

    •மொழித்திறன் பயிற்சிகள் 

கற்றல் நோக்கங்கள்

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்துப் பொருளுணர்தல் . 

பத்தியை உரையாடலாக மாற்றுதல். 

ஏற்புடைய நயங்கள் அறிந்து பாராட்டல். 

கற்றல் விளைவுகள்

பத்தியைப்படித்து பொருளுணர்ந்து விடையளித்தல்.

உரையாடல் வடிவில் எழுத அறிதல்.

பாடலின் ஏற்புடைய நயங்கள் அறிந்து பாராட்டக்கற்கின்றனர். 

கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

விளக்க அட்டைகள்

கரும்பலகை 

ஆயத்தப்படுத்தல்

எளிய பத்தியைப் படித்து மையப்பொருள் கூறச்செய்தல்.

செய்தி-உரையாடல் வேறுபாடு என்ன? 

முன்னறிவு

முந்தைய வகுப்பில் கற்ற செய்யுள் நயங்களை நினைவூட்டல். 

எதுகை, மோனை ,இயைபு, முரண் போன்றவற்றை நினைவூட்டல். 

பாட அறிமுகம்

பத்தியைப் பொருளோடு வாசிக்கச்செய்தல். 

உரையாடல் பற்றிய எளிய அறிமுகம். 

இலக்கிய நயங்கள் எவையென்று அறிமுகம் செய்தல்.

பாட வளர்ச்சி

திரு.வி.க.பற்றிய பத்தியை நுட்பமாக வாசிக்கச்செய்தல். 

தொடர் மாற்றங்கள் குறித்து விளக்குதல்.

வினைமுற்று வகைகளை இனம்காணக் கற்பித்தல்.

உம்மைத்தொகை,எண்ணும்மை போன்ற இலக்கணக்குறிப்பு கண்டறிய கற்பித்தல்.

புணர்ச்சி விதிகள் கூறுதல்.

செய்யுளின் மையப் பொருள், சொல் நயம் ,பொருள் நயம் ,தொடை நயம், ஒலிநயம், போன்றவற்றை கண்டு பாடலின் நயங்களைப் பாராட்டக்கற்பித்தல். 

ஆசிரியர் செயல்பாடு

பத்தியைப் பொருளோடு வாசித்துக் காட்டுதல். 

தொடர் மாற்றங்கள், இலக்கணக்குறிப்புகள், புணர்ச்சி விதிகளை கரும்பலகையில் எழுதி விளக்குதல். 

ஹெச்.ஜி.ரசூலின் கவிதையை மடிக்கணினியில் காட்டி, ஏற்புடைய நயங்களை வண்ணச் சொற்களால் குறிப்பிட்டுக் காண்பித்தல்.

மடிக்கணினியில் படங்களைக்காட்டி அதற்கு ஏற்புடைய கவிதைகள் கூறச்செய்தல். 

மாணவர் செயல்பாடு

பத்தியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்தல். 

தொடர் மாற்றங்களைச் செய்தல்.

குறிப்பிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு கூறுதல். 

ஏற்புடைய நயங்கள் சுட்டிக்காட்டுதல்.

படத்திற்குப் பொருத்தமான கவிதைகள் எழுதுதல்

வலுவூட்டல்

தொடர் மாற்றங்களை வெவ்வேறு தொடர்கள் மூலம் பயிற்சி தருதல். 

இலக்கணக்குறிப்புக்கான வெவ்வேறு சொற்கள் தந்து பாடத்தை வலுவூட்டல். 

மதிப்பீடு

'தமிழ்த் தென்றல்' என்று திரு.வி.க.அழைக்கப்படுகிறார்.- செய்வினைத்தொடராக்குக.

ஞாயிற்றொளி- புணர்ச்சி விதி கூறுக.

முன்னிலைப்பன்மை வினைமுற்றுச்சொற்களைப் பயன்படுத்தி தொடரமைக்க. 

குறைதீர்க்கற்றல்

கடினப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல். 

எளிய பயிற்சிகள் தருதல்.

பல்வேறு வினாக்கள் கேட்டல். 

தொடர் பணி

பாடப்புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து உரையாடல் வடிவில் மாற்றுக.

நன்றி 🙏



இராம்முருகன் தமிழாசிரியர் அரசூர்.




சனி, 3 டிசம்பர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 5/12/2022 - 09/12/2022

நாள்: (5.12.22 - 9.12.22)
வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 
பாடம்: தமிழ்
தலைப்பு: இயல் 8 
    •மொழித்திறன் பயிற்சிகள் 
கற்றல் நோக்கங்கள்
விடைக்கேற்ற வினா அமைக்க கற்றல்.
செய்யுளின் நயங்களை அறிந்து பாராட்ட கற்றல். 
கற்றல் விளைவுகள்
கொடுக்கப்பட்ட விடைக்குப் பொருத்தமான வினா அமைக்க அறிகின்றனர். 
செய்யுளின் ஏற்புடைய நயங்களை அறிந்து, இன்புற்றுச்சுவைத்தல். 
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்.
   மடிக்கணினி, விளக்க அட்டைகள், கரும்பலகை 
முன்னறிவு 
முந்தைய வகுப்பில் கற்ற பாடச் செய்திகளை நினைவூட்டல். 
எதுகைநயம் பற்றிக்கூறுக.
மோனை நயம் பற்றி நீ அறிந்ததைக்கூறு. 
பாட அறிமுகம்
கொடுக்கப்பட்ட விடைக்கேற்ற வினாக்கள் அமைத்தலை அறிமுகம் செய்தல்.                                              ஏற்புடைய நயங்களால் பாடல் சுவைக்கத்தக்கதாக மாறுவதைக்கூறல்.
ஆயத்தப்படுத்தல்
என் பெயர் கண்ணன். இத்தொடரை எவ்வாறு வினாவாக அமைக்கலாம்? 
பட்டம் -தட்டு இதில் இடம்பெற்றுள்ள நயம் எது? 
இது போன்ற எளிய கேள்விகளால் மாணவர்களை ஆயத்தப்படுத்தல். 
பாட வளர்ச்சி
விடையிலிருந்து வினாவை மூன்று வகைகளில் உருவாக்கலாம். 
    1.எழுவாய்
    2.செயப்படுபொருள் 
    3.பயனிலை 
மேற்கண்ட மூன்றில் ஒன்று விடையாக அமையும் படி நாம் வினாவை அமைக்கலாம். 
இலக்கிய நயம் பாராட்டலில் தொடை நயங்களான எதுகை, மோனை, இயைபு இந்த மூன்று நயங்களையும் விளக்குதல் சந்தநயம், அணிநயம், சொல் நயம், பொருள் நயம் இவற்றையும் மாணவர்களுக்கு விளங்கும்படியாக விளக்குதல். 

ஆசிரியர் செயல்பாடு
விளக்க அட்டைகளின் மூலம் ஒவ்வொரு வகை வினாவையும் உருவாக்குதலை கற்பித்தல்.
மடிக்கணினியில் ஒரு செய்யுளை காண்பித்து ஏற்புடைய நயங்களை வண்ணச் சொற்களால் குறிப்பிட்டு காண்பித்தல்.
மாணவர் செயல்பாடு
கொடுக்கப்பட்ட விடைக்கு மூன்று வகையான வினாக்களை உருவாக்குதல்.
கொடுக்கப்பட்ட பாடலில் எதுகை நயம், மோனை நயம், இயைபு நயம், சொல்நயம் பொருள்நயம் போன்றவற்றை குறியிட்டோ, அடிக்கோடிட்டோ காட்டுதல்.
வலுவூட்டல்
விடைக்கேற்ற வினா அமைத்தலை பல்வேறு பயிற்சிகளின் மூலம் வலுவூட்டல். 
எளிய பாடல்களை கொடுத்து ஏற்புடைய ஒன்று, இரண்டு நயங்களை சுட்டிக்காட்டி வலுப்படுத்துதல். 

மதிப்பீடு.
விடைக்கேற்ற வினா அமைக்க.
1.திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது? 
2.சாலைகளில் இடம்பெற்று இருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினை சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
3.நமது பாடப்பகுதியில் உள்ள பாடலில் ஏற்புடைய நயங்களை சுட்டிக்காட்டி இந்த இலக்கிய நயங்கள் பாடலை எவ்வாறு சுவையுள்ளதாக மாற்றுகிறது எனக் கூறுக.
குறைதீர்க்கற்றல் 
மீண்டும் எளிமையாக படப்பகுதியை கற்பித்தல். எளிய பயிற்சிகள் மூலம் பாடப் பகுதியை விளக்குதல். 
தொடர்பணி 
ஏற்புடைய நயங்கள் அமைந்த புதுக்கவிதை எழுதி வரவும். 
மாணவர்களுக்கான உரையாடலில் இடம்பெறும் விடைகளுக்கு ஏற்ற வினாக்களை அமைத்து தொகுத்து வருக.
நன்றி 🙏
இராம்முருகன், தமிழாசிரியர், அரசூர்.

திங்கள், 28 நவம்பர், 2022

முக்கிய வினாக்கள் -பன்னிரண்டாம்வகுப்பு

 இயல்1       மதிப்பெண்கள் 30

குறுவினா.                                       3×2=6

1.நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக. 

2.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்? 

3.விடியல் வனப்பு இரு சொற்களையும் இணைத்து தொடரமைக்க. 

சிறுவினா                                      3×4=12

சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க பண்பாகும் விளக்குக. 

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக.

பொருள் வேற்றுமை அணியை விளக்குக

நெடுவினா                                 1×6=6

பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க. 

தமிழின் சீரிளமை திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக. 

மனப்பாடப்பாடல்.                             1×4=4

ஓங்கலிடை எனத் தொடங்கும் பாடலை அடி பிறழாமல் எழுதுக 

இயல்2 

குறுவினா 

இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக. 

நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக. 

வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பை தேடினர்? 

மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை? 

பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக. 

நெடுவினா 

நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வர்ணனையை சொல்லில் வடிக்க.

இயல்3 

குறுவினா 

1.புக்கில் தன்மனை சிறுகுறிப்பு எழுதுக. 

2.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

3.சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை? 

சிறுவினா. 

4.சடாயுவை தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக. 

5.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடம் சுட்டிப் பொருள் விளக்குக. 

6.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் -விளக்கம் எழுதுக. 

நெடுவினா

குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு விளக்குக. 

மனப்பாடப் பாடல் 

துன்பு உளதெனின்  எனத் தொடங்கும் கம்பராமாயண பாடல்.






ஞாயிறு, 27 நவம்பர், 2022

சிறுதேர்வு

 சிறுதேர்வு.     15 மதிப்பெண்கள் 

குறுவினா               3×2=6

1.புக்கில் தன்மனை சிறுகுறிப்பு எழுதுக. 

2.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

3.சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை? 

சிறுவினா.     3×3=9

4.சடாயுவை தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக. 

5.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடம் சுட்டிப் பொருள் விளக்குக. 

6.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் -விளக்கம் எழுதுக.

வெள்ளி, 25 நவம்பர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு (28.11.22 - 3.12.22)

 நாள்: (28.11.22 - 3.12.22)

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 8 

சிறுபாணாற்றுப்படை(கவிதைப் பேழை)

கோடை மழை(விரிவானம்)

குறியீடு(கற்கண்டு)

கற்பித்தல் நோக்கங்கள்

ஆற்றுப்படை நூல்கள் குறித்து அறிதல்.

கடையேழு வள்ளல்களின் பண்புநலன்களை அறிதல். 

சிறுகதையில் வெளிப்படும் மனிதநேயத்தை அறிதல்.படைப்பாக்கத் திறன் பெறுதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

விளக்கப்படங்கள்

இணையம்

பார்வைநூல்கள் 

தமிழிணையக்கல்விக்கழகக்குறிப்புகள்

கரும்பலகை

ஆர்வமூட்டல் 

நீ அறிந்த வள்ளல்களின் பெயர்களைக் கூறுக. 

உனக்குத்தெரிந்த பெண் படைப்பாளிகளின் பெயர்களைப்பட்டியலிடுக. 

சிறந்த கவிதையை எவ்வாறு கண்டறிவாய்? 

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு: 

சிறுபாணாற்றுப்படை 

பத்துப்பாட்டு நூல்கள் பற்றிக்கூறுதல்.

ஆற்றுப்படை பற்றி விளக்குதல். 

சிறுபாணாற்றுப்படை நூலமைப்பு கூறுதல். 

கடையேழு வள்ளல்களின் பண்புநலன்களைக் கூறுதல். 

விளக்கப்படங்கள் மூலம் வள்ளல்தன்மையை விளக்குதல்.

ஒய்மாநாட்டு நல்லியக்கோடனின் சிறப்புகளைக் கூறுதல். 

அரும்பதங்களுக்குப்பொருள் கூறுதல். 

பாடலைப் பொருளோடு வாசித்துக்காட்டுதல். 

கோடை மழை 

படைப்பாளி சாந்தா தத் பற்றிக் கூறுதல். 

முதுமையின் வலியும்,குழந்தையைக் காப்பாற்ற ஆறுமுகம் படும் சிரமத்தையும் உணர்வோடு கூறுதல். பிள்ளையைத்தத்துக்கொடுக்கும் முடிவும் தத்தெடுக்க வந்த தம்பதியினரின் மனிதநேயத்தையும் கூறுதல். 

குறியீடு

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை குறிப்பிடுவது குறியீடு.

ஒன்று மற்றொன்றை குறிப்பாக வெளிப்படுத்துவது பொருள் உணர்த்துவது குறியீடு எனப்படும். 

குறியீடு உள்ளுறையுவமம் இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கூறுதல்.

குறியீடு பொதிந்துள்ள இலக்கியச் சான்றுகள் காட்டுதல். 

குறியீடு என்னும் உத்தியின் அடிப்படை இலக்கணங்களை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிடல். 

வள்ளல்களையும் அவர்களின் வள்ளல் தன்மையையும் தொகுத்துக் கூறுதல். 

பாடலைப் பொருளோடு படித்தல்.

கோடை மழை சிறுகதையை உணர்வுபூர்வமாகப்படித்தல். 

கதையின் மையப் பொருள் குறித்து கலந்துரையாடல். 

குறியீடு என்னும் உத்தியை அறிந்து கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வரும் குறியீட்டு உத்தியை இனம் காணல். 

மதிப்பீடு

சிறுபாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? 

கடையேழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயல்களையும் அட்டவணை படுத்துக.

மறைத்து சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது? 

கற்றல் விளைவுகள். 

கடையேழு வள்ளல்களின் வள்ளல் தன்மையை அறிந்து தாமும் வாழ்வில் பின்பற்ற அறிந்து கொள்ளுதல். 

மனிதர்களிடம் அன்பு காட்டவும் கருணை காட்டவும் சிறுகதையின் வழியாக அறிந்து கொள்ளுதல். 

கவிதையின் உத்திகளுள் ஒன்றான குறியீடு பற்றி அறிந்து அதனை பயன்படுத்தி படைப்பாக்க திறன் பெறுதல். 

தொடர்பணி

எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க. 

பொது இடங்களில் நீர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறை சூழலில் பகிர்ந்து கொள்க. 

குறியீட்டு உத்தியைப் பயன்படுத்தி புதுக்கவிதை ஒன்றை எழுதி வருக.

நன்றி 🙏

இராம்முருகன்,தமிழாசிரியர்,அரசூர் 




பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு (28.11.22- 3.12.22)

 நாள்: 28.11.22- 3.12.22

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம் : தமிழ் 

தலைப்பு:இயல்8 

            • மனோன்மணியம்

            •செவ்வி(விரிவானம்) 

            •மெய்ப்புத்திருத்தக்குறியீடுகள் 

கற்பித்தல் நோக்கங்கள்

இயற்கை ஈடுபாடும் இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை மனோன்மணியம் மூலம் அறிதல் 

பாலின சமத்துவத்தை புரிந்து கொண்டு சமூகவாழ்வியலில் நடைமுறைப்படுத்துதல்.

பிழையின்றி எழுதுவதற்கும் பிழைகளைத் திருத்தி எழுதுவதற்கும் பயிற்சி பெறுதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

இணையம்

வலையொளி 

காணொளிகள்

விளக்கப்படங்கள்

கரும்பலகை

ஆர்வமூட்டல்

மனோன்மணியம் கதையினைக்கூறுதல்.

திருநங்கைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

அச்சுப்படிதிருத்துபவர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? 

பாட அறிமுகம்

தமிழின் முதல் பா வடிவ நாடகநூலை அறிமுகம் செய்தல். 

சாதனை புரிந்த திருநங்கைகள் பெயர்களைப்பட்டியலிடல்.

அச்சகங்களில் பொறுப்பு மிகுந்த பணியைப்பற்றிக் கலந்துரையாடல். 

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு 

மனோன்மணியம் 

மனோன்மணியம் நாடகநூல் அமைப்பைக் கூறுதல். 

முழுக்கதையையும் கூறுதல்

பேராசிரியர் சுந்தரனார் பற்றிக் கூறுதல். 

சிவகாமியின் சரிதம் பற்றிக் கூறுதல்.

அங்கம்,களம் விளக்குதல்

எல்லா உயிர்களுக்கும் இலக்கு வேண்டும் என்பதை விளக்குதல் புல்லின் பரிவு, வாய்க்காலின் விசித்திரம், நாங்கூழ்ப் புழுவின் பொது நலம் இவற்றை பாடல் வழி விளக்குதல்.

செவ்வி 

நர்த்தகிநடராஜின் நடனக்காணொளிகள் காட்டுதல் . 

நேர்காணல் வடிவிலான பாடத்தை மாணவர்களைக் கொண்டே நடிக்க செய்தல். 

பாடக் கருத்துக்களை மாணவர்கள் குழுவாகக்கூடித் தொகுக்கச் செய்தல். 

மாணவர்கள் தொகுத்த கருத்துக்களை ஒவ்வொருவராக கூறச் செய்தல்.

மெய்ப்புத்திருத்தக்குறியீடுகள்.

பிழையின்றி எழுத வேண்டிய அவசியத்தைக்கூறுதல். 

அச்சுப்படி திருத்துபவரின் பணிகள், குறியீடுகள் இடுதல், திருத்தக் குறியீடுகளின் பிரிவுகள், பொதுவான குறியீடுகள், நிறுத்தற்குறியீடுகள், இடைவெளி தர வேண்டியவை,இணைக்க வேண்டியவை, எழுத்து வடிவம் போன்றவற்றை ஒவ்வொரு பகுதியாக விளக்கப்படங்களுடன் மாணவர்களுக்கு கற்பித்தல். 

மாணவர் செயல்பாடு

மனோன்மணியம் நூல் குறித்த அமைப்பை தொகுத்துக் கூறுதல். 

மனோன்மணியம் கதையினைக் கூறுதல்

இயற்கையை நேசிக்கும் புதுக்கவிதைகளைப் பட்டியலிடுதல். 

பாடலைப் பொருளோடு வாசித்துக் காட்டுதல்.  

திருநங்கைகள் குறித்து அறிந்து கொள்ளுதல்.

 நேர்காணலை மாணவர்களாக நடத்துதல் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல் நர்த்தகி நடராஜ் குறித்த செய்திகளைக் கட்டுரையாக்குதல். 

குறிப்பிட்ட பிழையான பத்தியைத் திருத்தக் குறியீடுகளின் மூலம் திருத்திக் காட்டுதல். 

திருத்தக் குறியீடுகளையும் அவற்றின் பெயர்களையும் சரியான முறையில் தொகுத்து எழுதுதல்.

மதிப்பீடு

மனோன்மணியம் எந்நூலைத்தழுவி தமிழில் எழுதப்பட்டது? 

நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள் யாவை? 

திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக. 

கற்றல் விளைவுகள்

மனோன்மணியம் நூலின் வழியாக இயற்கையோடு இயைந்த தமிழர்களின் வாழ்வு குறித்து அறிதல்.

பாலின சமத்துவத்தைப் பேணி திருநங்கைகளை மதிப்புடன் நடத்தக் கற்றல். 

பிழைகளைத் திருத்தி சரியான முறையில் குறியீடுகள் இட அறிந்துகொள்ளுதல். 

தொடர்பணி

நாங்கூழ்புழு நடராசனிடம் பேசி இருந்தால் கற்பனையாக ஒரு பக்க அளவில் உரையாடலை எழுதுக. 

பாலின சமத்துவம் குறித்து வகுப்பில் கலந்துரையாடுக. 

மெய்ப்புத் திருத்தங்களை அறிவது எத்துறை வேலைவாய்ப்புக்கு உதவும்? வகுப்பில் கலந்துரையாடுக. 

நன்றி 🙏

இராம்முருகன்,தமிழாசிரியர். அரசூர் 






வெள்ளி, 18 நவம்பர், 2022

பாடக் குறிப்பு இயல்8

 நாள்: (21.11.22 - 25.11.22)

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 8 

            • நமது அடையாளங்களை மீட்டவர் 

           • முகம் 

           • இரட்சணிய யாத்திரிகம் 

கற்பித்தல் நோக்கங்கள்

தமிழாய்வின் முன்னோடியாக திகழ்ந்த ஆளுமைகளின் பன்முகத்தன்மையை அறிந்து ஆய்வு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல். 

கொடையின் இன்றியமையாமையை அறிந்து கொடை வழங்கும் பண்பினை வளர்த்துக் கொள்ளுதல். 

காப்பிய நாயகர்களின் வழி வெளிப்படுத்தப்படும் பண்பு நலன்களை போற்றிப் பின்பற்ற முயலுதல். 

கற்பித்தல் உபகரணங்கள் 

இணையம், மடிக்கணினி, கரும்பலகை, படங்கள். 

ஆர்வமூட்டல் 

தமிழ் மொழிக்கு பாடுபட்ட தமிழறிஞர்களின் பெயர்களைக் கூறுக. 

உனக்கான தனித்தன்மை என்று நீ எதை கருதுகிறாய்? 

இயேசுநாதர் பற்றிய செய்திகளை கூறுக.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு.

ஆசிரியர் செயல்பாடு 

மயிலை சீனி வேங்கடசாமி பற்றிய செய்திகளை கூறுதல் தமிழறிஞர்களோடு இவருக்குள்ள தொடர்பை விளக்குதல். தொடக்க கால ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள், வரலாற்று ஆய்வுகள், கலையியல் ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், ஆராய்ச்சி புலமை பற்றி விரிவாக விளக்குதல். 

காலத்தால் மறைந்த தமிழரின் அடையாளங்களை மீட்ட விதம் பற்றி நயமுடன் எடுத்துரைத்தல். 

இணையம் வாயிலாக இவரின் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைக் காட்டுதல். 

வாசிப்பு பயிற்சி தருதல். ஒவ்வொருவரின் தனித்தன்மையும் சமூகத்தின் இறுக்கமான சூழலில் சிதையும் நிலையை விளக்குதல். தனித்தன்மையான முகத்தை மீட்கும் வேட்கையை உணர்த்தும் கவிதையை பொருளோடு வாசித்தல். 

 இரட்சணியயாத்திரிகம் நூல் அமைப்பை கூறுதல். எச் ஏ கிருட்டிணனார் பற்றிக் கூறுதல். 

இயேசுவின் இறுதிக் கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து கூறுதல் பாடலை இராகத்தோடு பாடிக் காட்டுதல் அருஞ்சொற்பொருள், இலக்கணக்குறிப்பு ,உறுப்பிலக்கணம், போன்றவற்றை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு 

மயிலை சீனி வேங்கடசாமி குறித்த செய்திகளை அறிந்து தொகுத்தல்.

 அறிஞர்களின் பெயர்களைப்பட்டியலிடல் உரைநடையை வாசித்து பொருள் கூறுதல் .

குறியீட்டு வடிவிலான கவிதைகளை கூறுதல். தங்களின் தனித்தன்மைகள் பற்றி கூறுதல் 

இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை கூறுதல் பாடலை இராகத்தோடு இணைந்து பாடுதல். இலக்கணக்குறிப்பு உறுப்பிலக்கணம் கூறுதல். 

மதிப்பீடு 

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பன்மொழிப் புலமையை விளக்குக. 

தொலைந்த முகம் - குறிப்பிடுவது எதை?

இறைமகனார் நிலை கண்டு மக்கள் புலம்பியதை விவரிக்க. 

கற்றல் விளைவுகள். 

தமிழ் அறிஞர்களின் உழைப்பையும் தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த நிலையையும் அறிந்து இன, மொழி உணர்வு பெறுதல். 

தனித்தன்மையோடு வாழக் கற்றல்.

பொறுமை அனைவரிடமும் அன்பு செலுத்துதல் இரக்கம் போன்ற உணர்வுகளைப் பெறுதல். 

தொடர்பணி.

தமிழறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாக்குக. 

உங்களின் நிறை, குறைகளைப் பட்டியலிடுக. 

பொறுத்தாரை இவ்வுலகம் பொன் போல் போற்றும் என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.

நன்றி

இராம்முருகன்,

அரசூர்.




வியாழன், 17 நவம்பர், 2022

பதினோராம் வகுப்பு பாட குறிப்பு

 நாள்: 21.11.22- 25.11.22

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம் : தமிழ் 

தலைப்பு:இயல்8  

    • தாகூரின் கடிதங்கள் 

    • ஒவ்வொரு புல்லையும் 

    • தொலைந்து போனவர்கள் 

கற்பித்தல் நோக்கங்கள் 

•கடிதம், எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் என்பதை கற்று, கடிதம் எழுதுதல் .

•இலக்கியம் வழி இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் அறிந்து மதிப்பளித்தல்‌. 

•மெய்யியல் உண்மைகளை அறிந்து வாழ்வின் இலக்கை தேட அறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

தாகூரின் உருவப்படம். 

ஆளுமைகளின் கடிதங்கள்

இன்குலாப் கவிதை நூல்கள் 

அப்துல் ரகுமான் கவிதை நூல்கள். 

மடிக்கணினி 

கரும்பலகை 

ஆர்வமூட்டல்

உனது நண்பனுக்கு, உறவினருக்கு நீ கடிதம் எழுதியது உண்டா? 

மனிதநேயத்தை வலியுறுத்தும் கவிதை ஒன்றைக்கூறுக. 

நீ அறிந்த புதுக்கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிடு. 

பாட அறிமுகம்

கடித இலக்கியம் குறித்து பேசுதல் அண்ணா மூவா திருவிக போன்றோரின் கடிதங்கள் குறித்து உரையாடுதல். 

இன்குலாப் குறித்து உரையாடுதல். 

அப்துல் ரகுமானின் புகழ்பெற்ற கவிதை வரிகளைக்கூறுதல். 

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்.

ஆசிரியர் செயல்பாடு 

தாகூர் குறித்த செய்திகளை கூறுதல்.

 கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.ஆங்கிலேய அரசு வழங்கிய சர் பட்டத்தை திருப்பி அளித்தார். 

தாகூரின் இரண்டு கடிதங்களை வாசித்துக் காட்டுதல். 

இயற்கையின் மீது தாகூர் கொண்டிருந்த பற்றை எடுத்துக்கூறுதல். 

பறவைகள் மீதும் மலர்கள் மீதும் தாகூர் கொண்டிருந்த அன்பை இந்த இரண்டு கடிதங்களும் வெளிப்படுத்துவதை விளக்குதல். 

கவிஞர் இன்குலாப் குறித்துக் கூறுதல். 

இன்குலாபின் பிற கவிதைகளை இணையம் மூலம் காட்டுதல். 

கவிதைகளை நயத்தோடு வாசித்துக் காட்டுதல். 

அப்துல் ரகுமான் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் இணையம் மூலமாக மாணவர்களுக்குக் கற்பித்தல். 

சூஃபி பற்றிக் கூறுதல். 

தொலைந்து போனவர்கள் பாடலை பாடிக் காட்டுதல். 

மாணவர் செயல்பாடு

தாகூர் பற்றிய செய்திகளைத் தொகுத்தல். 

கடித இலக்கியத்தின் முன்னோடிகளைக் கண்டறிதல். 

இணையம் வாயிலாக அண்ணாவின் கடிதங்கள் மு.வ. எழுதிய கடிதங்கள் போன்றவற்றைக் கண்டறிதல். 

மனித நேயத்தை உணர்த்தும் கவிதைகள் கூறுதல். 

இன்குலாப் அவர்களின் பிற கவிதைகளை தொகுத்தல். 

தொலைந்து போனவர்கள் பாடலை இராகத்தோடு பாடுதல். 

இலக்கண குறிப்பு உறுப்பிலக்கணம் போன்ற மொழி பயிற்சிகளைச் செய்தல்.

மதிப்பீடு 

1.தாகூர் எந்தநூலுக்கு நோபல் பரிசு பெற்றார்? 

2. தாகூரால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? 

3. இயற்கையுடன் கற்பனையாக உரையாடல் ஒன்றை நிகழ்த்துக. 

கற்றல் விளைவுகள். 

தம்மைச் சுற்றியுள்ள சிறு உயிரினங்கள், இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்கின்றனர். 

சமயம் கடந்து மானுடத்தை மதிக்க கற்றுக் கொள்கின்றனர். 

தம் வாழ்வை அகப்புறமாய் கண்டு உணரக்கூடிய தன்மையைப் பெறுகின்றனர். 

இன்குலாப், அப்துல் ரகுமான் போன்ற புதுக்கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிந்து கொள்கின்றனர். 

தொடர்பணி

சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர்களின் பட்டியலையும், அவர்களின் நூல்களையும் தொகுத்து அட்டவணை உருவாக்குக. 

உங்களது சுவையான பயண அனுபவத்தை கடிதமாக எழுதுக. 

இயற்கையும் மனிதனும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக. 

நன்றி 🙏

இராம்முருகன்,

முதுகலைத்தமிழாசிரியர், 

அரசூர். 

இலக்கணங்கற்க

தமிழ்நதி 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w 


புதன், 16 நவம்பர், 2022

 ரவ்விற்கு அம்முத லாம்முக் குறிலும் 

லவ்விற்கு இம்முதல் இரண்டும் யவ்விற்கு

இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே(நன்:148) 


வடமொழிச் சொற்களின் முதல் எழுத்தானது ரகரமாக வந்தால் அதற்கு முதல் எழுத்தாக அ இ உ இம்மூன்றில் இடத்திற்கேற்ப ஓரெழுத்து வரும். 


சான்று

இராமன் 

அரங்கன்

உரோம்


லகரத்திற்கு இ உ இவ்விரண்டு எழுத்தில் ஏதேனும் ஒன்று வரும்


சான்று


இலக்குமி 


உலோபம்(பேராசை)


யகரத்திற்கு இ மட்டும் வரும். 


சான்று


இயக்கர்  


இராம்முருகன்

அரசூர்

செவ்வாய், 15 நவம்பர், 2022

நிருவாக மேலாண்மை

 நிருவாக மேலாண்மை குறித்து இறையன்பு: 

உயர் பதவிகளில் இருப்போர் திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். 

"கல்லாரே யாயினும் கற்றாரை சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலை படுவார்" என்கிறது நாலடியார். 

சிறந்த நிர்வாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். 

வரவைத் தாண்டிய செலவு செய்பவன் நல்ல நிர்வாகியாக இருக்க முடியாது . 

ஷேக்ஸ்பியரின் டைமண்ட் பற்றிய நாடகம் நிதிநிலைமை பற்றிய மிகச்சிறந்த வாழ்வியல் விளக்கமாகும். 

அவ்வையாரும் நல்வழிப்பாடலில் வரவைத் தாண்டிய செலவு இருந்தால் மானம் அழிந்து, மதிகெட்டு, எல்லாருக்கும் பொல்லாதவனாய், ஏழ்பிறப்பும் தீயனாய் வாழும் நிலைவரும் என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.


திங்கள், 14 நவம்பர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு அலகுத்தேர்வு(இயல்-6)

                     அலகுத்தேர்வு 

                             இயல்6.  மதிப்பெண்கள்:35

 ஒரு மதிப்பெண் வினாக்கள் 1×5=5

1. 'ஏழ்ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னருக்கு காட்டல்' தொடரில் வெளிப்படும் செய்திகள் 

1.மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்

 2ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள். 

அ) 1சரி 2தவறு        ஆ) 1தவறு 2சரி              இ) 1தவறு 2தவறு    ஈ)1சரி 2சரி 

2. பொருத்துக. 

அ)உருவங்களைப்படம்பிடிக்கும்கருவி-                                                     1)ஜார்ஜ் மிலி 

ஆ)திரையிடும் கருவி-  2)சாப்ளின் 

இ)திரையில் கதை சொல்லும் முறை -                                   3)லூமியர் சகோதரர்கள் 

ஈ)மாடர்ன் டைம்ஸ்-    4)எடிசன் 

அ)3,4,1,2 ஆ)4,3,1,2 இ) 2,3,4,1 ஈ) 4,3,2,1 

3. நாடகம் என்பது----------- 

அ) ஒற்றைக்கோணக்கலை ஆ)இருபரிமாணக்கலை இ)முப்பரிமாணக் கலை                     ஈ)அழகுக் கலை 

4.  ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் 

அ)சிவஞான முனிவர் ஆ) மயிலை நாதர் இ)ஆறுமுக நாவலர் ஈ)இளம்பூரணர் 

5) பொருத்துக. 

அ)காதை - 1)கந்தபுராணம்.              ஆ)சருக்கம் -2)சீவக சிந்தாமணி இ)இலம்பகம் -3)சூளாமணி                ஈ)படலம் 4)சிலப்பதிகாரம்

 அ)4,3, 2,1 ஆ)3,4 ,1,2 3இ)4,2,1,3ஈ)4,3, 1,2 


எவையேனும் ஐந்து மட்டும் 5×2=10

6)ஒருமுக எழினி,பொருமுக எழினி -குறிப்பு எழுதுக.                                                

7) 'மூச்சு நின்று விட்டால்                                         பேச்சும்                                                                  அடங்கும்' கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

8) கலைப்படங்கள் பற்றி எழுதுக. 

9) காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் யாவை? 

10) பாவிகம் விளக்குக. 

11)  ஆடலும்பாடலும், தொல்நெறி இலக்கண குறிப்பு தருக. 

12) பகுபதஉறுப்பிலக்கணம் தருக.                       நகை,வெகுளி 

எவையேனும் மூன்று மட்டும் 3×4=12

13) நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

14) திரைப்படத்தில் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

15) கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்பு படுத்திச் சொற்சிமிழில்  அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையை கொண்டு நிறுவுக. 

16) விளக்குக:                                                            சேய்மை காட்சித் துணிப்பு                               நடுக்காட்சி துணிப்பு                                           அண்மை காட்சித் துணிவு                               மீ அண்மை காட்சித் துணிப்பு  

17) அடி பிறழாமல் எழுதுக. 1×3=3

குழல் வழி நின்றது...,. சிலப்பதிகாரம் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

எவையேனும் ஒன்று மட்டும்  1×5=5

18) மகா நடிகரைக் கண்ட பாலசந்தரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.    

19) உங்கள் ஊர் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக. 





சனி, 5 நவம்பர், 2022

இயல்6

 குறு வினாக்கள் 

எண்வகை மெய்ப்பாடுகள் யாவை

1.நகை 

2.அழுகை 

3.இளிவரல் 

4.மருட்கை 

5.அச்சம்

6.பெருமிதம்

7.வெகுளி

8.உவகை  

ஒருமுக எழினி ஒருமுக எழினி குறிப்பு எழுதுக 

மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்வது ஒருமுக எழினி.

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் வந்து பொருந்துவது பொருமுக எழினி.

'மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்' கவிதைக்கு பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

'எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' 

சிறுவினா 

நாட்டிய அரங்கின் அமைப்பு: 

சிற்பநூலிலுள்ளபடி  நன்னிலத்தைத் தேர்வு செய்தனர். 

• இருபத்துநான்கு விரலளவு கொண்ட கோலை உருவாக்கினர்.

• எழுகோல் அகலம் ,எண்கோல் நீளம் ஒருகோல் உயரத்தில் அரங்கமைத்தனர். 

•உத்தரப்பலகை இடைநிலம் அறுகோல்‌ அளவில் இருந்தது. 

• அரங்கிற்கேற்ப இருவாயில்களை அமைத்தனர்.

• தூணின் நிழல் மேடையில் விழாதவாறு அழகிய விளக்குகளையும் அமைத்தனர். 

• மேல்நிலையில் ஐம்பூதங்களையும் எழுதி ஓவியவிதானத்தையும் முத்துமாலைகளையும் அமைத்தனர். 

• ஒருமுக எழினி,பொருமுக எழினி,கரந்துவரல் எழினியைப் பொருத்தினர்.

 மகா நடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.

• பாலசந்திரன் சுள்ளிக்காடு மலையாளத்துக்கவிஞர். 

• நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் இரவு விருந்துக்கு ஜான்பால், ராஜீவ்நாத், பாலசந்திரன் மூவரும் சென்றனர்.

• வீடு அரண்மனை போல் இருந்தது. 

• வீரபாண்டிய கட்டபொம்மன் , சத்ரபதி சிவாஜி, இராஜராஜ சோழன் வேடங்களில் கம்பீரமாக நிற்கும் சிவாஜி கணேசனின் ஓவியங்கள் வீட்டை அலங்கரித்தன.

• மூவரையும் நோக்கி, சிவாஜி கணேசன் இராஜநடை நடந்துவந்து, தன் இருக்கையில்  அமர்ந்தார். 

• இராஜீவநாத் கதையைக் கூறும்போது அதற்கேற்றபடி சிவாஜி கணேசனின் உடலில் தோன்றும் தாள, லய, அபிநயங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பாலசந்திரன். 

• சிவாஜி நடித்த ருத்ரன், கர்ணன், காளிதாசன்,பாரதி போன்ற கதாபாத்திரங்கள் பாலச்சந்திரனின் மனத்தில் தோன்றி மறைந்தனர்.  

•  சிவாஜிகணேசன் திரைத்துறையில் தான் பெற்ற அனுபவங்களையும் விருதுகளையும் புகைப்படங்களையும் இவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

 • நாடக அனுபவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசுமாறு ராஜீவநாத் கேட்க, அந்த வசனத்தை கொஞ்சமும் மறக்காமல் ஏற்ற இறக்கத்துடன் ஒரே மூச்சில் விஸ்வரூபம் எடுத்து நடித்துக் காட்டினார். மூவரும் வியந்து போயினர்.

 • சிவாஜிகணேசன் பாலச்சந்திரனிடம், இராவணன் வசனத்தை பேசுமாறு  கூறினார். 

• பாலச்சந்திரனும் தயங்கியவாறே இராவணன் வசனத்தை பேசி முடிக்கவும் சிவாஜிகணேசன் பாராட்டினார். 

• தன்னால் மலையாள சினிமாவில் நடிக்க இயலாமல் போனதற்காக வருந்தினார். 

•சினிமாவை விட நாடகத்தையே தான் மிகவும் விரும்புவதாகக் கூறினார். 

•அனைவரும் விருந்துண்டனர்.

சிவாஜியிடம் விடை பெற்று கிளம்பும்போது வாசல் வரை வந்து மூவரையும் வழியனுப்பி வைத்தார்.

உங்கள் ஊர் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்து கட்டுரையாக்குக. 

எங்கள் ஊரில் வாழும் நாடகக் கலைஞர் கந்தசாமி. இவர் பல்வேறு நாடகங்களில் தெருக்கூத்துகளில் வேடமேற்று நடித்துள்ளார். 

வள்ளி திருமணம், அரிச்சந்திரன் போன்ற நாடகங்களில் முதன்மை வேடமேற்று உச்சகுரலில் பாடி, நடித்ததை இவர் பெருமையாகக் கூறினார். 

திருவிழாக்காலங்ளில் நாள்தோறும் ஒவ்வொரு ஊராகச் சென்று நாடகம் நடித்ததையும் தற்போது திரைப்பட மோகத்தில் நாடகம் நலிந்து வருவதையும் கூறி வருத்தப்பட்டார். 

ஒருமுறை, இவருடைய நாடகத்தைப் பார்த்த கலைவாணர் இவருக்கு ஆயிரம்ரூபாய் பரிசளித்த நிகழ்வை பெருமையுடன் கூறினார். 

கிராமங்களில் மக்கள் விடிய விடிய நாடகத்தை இரசித்துப் பார்த்த காலங்களை நினைவுகூர்ந்தார். 

தற்போது நாடகக்கலையானது அழிந்து நாடகக் கலைஞர்கள் வறுமையில் வாடுவதையும் அரசு நாடகக் கலைஞர்களுக்கு உதவ முன்வரவேண்டுமென்று கண்கலங்கப்பேசினார். 

நாடகக்கலை அழிந்து வந்தாலும் கலைஞனான தன்னால் கலையை விட்டுவிட்டு வேறுபணிக்கு செல்ல இயலாத நிலையை எண்ணி வருந்தினார்.

நாடகத்திற்காகவே வாழ வேண்டும் ; நாடக மேடையிலேயே தன் உயிர் பிரிய வேண்டும் என்ற தனது கடைசி விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஒரு மகத்தான கலைஞனைச் சந்தித்த மனமகிழ்ச்சியுடனும் ,  நாடகக் கலையின் அழிவை எண்ணி வருந்தியபடியும் அந்த இடத்தை விட்டுக்கிளம்பினேன்



வெள்ளி, 4 நவம்பர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு - 7.11.22- 11.11.22

 நாள்: 7.11.22- 11.11.22

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம் : தமிழ் 

தலைப்பு:இயல்7 

        • மொழிப்பயிற்சிகள் 

தமிழாக்கம் தருதல்.

வரைபடத்தை விவரித்தல்.

மரபுச்சொற்களைத்தொடரில் அமைத்தல் 

இலக்கியநயம் பாராட்டுதல் . 

கலைச்சொல் காணல். 

கற்பித்தல் நோக்கங்கள்

மொழியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல். 

மொழியாளுமை பெறுதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

விளக்க அட்டைகள்

கரும்பலகை

ஆர்வமூட்டல்

சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.- இதில் 'தாளம் போடுகிறான்' என்பதன் பொருளைக் கூறுக.

நீ சுவைத்த பாடலை நயங்களுடன் விவரி. 

ஆசிரியர் செயல்பாடு 

வரைபடத்தைச் செய்தியாகத்தொகுக்கும் முறையைக் கூறுதல். 

மரபுச்சொற்கள் பற்றி விளக்குதல் 

மரபுச்சொற்களைத் தொடரில் அமைக்கும் முறையை விளக்க அட்டைகள் மூலம் விளக்குதல் 

பாடலின் நயங்களை எடுத்துக்காட்டுதல்

எதுகை, மோனை, இயைபு, முரண் பற்றி விளக்குதல். 

சந்தநயம் அணிநயம் காண்பது குறித்து விளக்குதல்

கலைச்சொல் காண்பது குறித்து விளக்குதல்

மின்னட்டைகள் மூலம் கலைச்சொற்கள் காணும் பயிற்சி தருதல். 

மாணவர் செயல்பாடு

மரபுச் சொற்களைப் பட்டியலிடல்.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்தல் 

வரைபடத்தையோ, விளம்பரத்தையோ பார்த்து பத்தியாகத் தொகுத்து எழுதுதல். 

பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் எதுகை, மோனை, இயைபு, முரண் போன்றவற்றை கண்டறிந்து அடிக்கோடிடுதல். 

கொடுக்கப்பட்ட பாடலின் இலக்கிய நயத்தை அறிந்து ஏற்புடைய நயங்களைச் சுட்டிக்காட்டி விளக்குதல் 

கலைச்சொற்களுக்கு உரிய பொருளையும் சொல்லையும் குறிப்பிடுதல் 

மதிப்பீடு

முதலைக்கண்ணீர் - மரபுச் சொல்லுக்குரிய பொருள் யாது? 

மதில் மேல் பூனை மரபுச் சொல்லை தொடரில் அமைத்து எழுதுக. 

'சுதந்திரம் தருகிற                                                                          மகிழ்ச்சியைக்காட்டிலும் 

சுகம் தரும் உணர்ச்சியும் உண்டோ?' பாடலில்  இடம் பெற்றுள்ள நயங்களை எடுத்து எழுதுக.

கற்பித்தல் நோக்கங்கள் 

மரபுச் சொற்களின் பொருள் அறிகின்றனர் 

மரபுச் சொற்களை தொடரில் அமைக்கக் கற்கின்றனர் 

பாடலில் அமையக்கூடிய ஏற்புடைய நயங்கள் பற்றி அறிகின்றனர்

 கலைச்சொற்களைக் கண்டறிய கற்கின்றனர் 

ஒரு செய்தியைப் பத்தியாக எழுதுவதற்கான திறன் பெறுகின்றனர்.

தொடர்பணி 

நடைமுறையில் உள்ள மரபுச்சொற்களைத் தொகுத்துப் பட்டியலிடவும். 

உனது வீட்டிலிருந்து பள்ளிக்கு வரக்கூடிய வழியினை வரைபடமாக வரைந்து வரவும்

நல்ல சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பற்றிய செய்திகளை திரட்டி ஒப்படைவு உருவாக்குக

நன்றி 🙏

இராம்முருகன் 

தமிழாசிரியர், அரசூர் 8012906557 



பன்னிரண்டாம் வகுப்பு பாடக் குறிப்பு (-7.11.22 11.11.22)

 நாள்:7.11.22  11.11.22

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல்7 

• சங்க கால கல்வெட்டும் என் நினைவுகளும் 

• மொழிப்பயிற்சி 

கற்பித்தல் நோக்கங்கள்:

 கல்வெட்டுகளைப் படித்து உண்மைகளை அறிதல். 

கடந்த கால வரலாற்றை அறிய கல்வெட்டுகள் துணை புரிவதை அறிந்து அத்துறையில் ஆர்வம் கொள்ளுதல். 

மொழியைப் பயன்படுத்தும் திறன்அறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

•  மடிக்கணினி

 •  கரும்பலகை

 •  கல்வெட்டுகள் குறித்த இணையக் குறிப்புகள். காணொளிகள். 

• வலையொளி(youtube) 

ஆர்வமூட்டல் 

உங்கள் ஊரிலோ அல்லது வேறு ஏதேனும் பகுதிகளிலோ கல்வெட்டுகளை பார்த்ததுண்டா? அதில் உள்ள செய்தியை வாசிக்க முயன்றதுண்டா?  மாணவர்களிடம் கலந்துரையாடல். 

 வாழைக்காடு, ஆட்டுத்தொழுவம் இந்தச் சொற்கள் எல்லாம் சரியா? இந்த சொற்களை எவ்வாறு நாம் சரியாகப் பயன்படுத்துவது என மாணவர்களிடம் கேட்டல். 

ஆசிரியர் செயல்பாடு 

ஐராவதம் மகாதேவன் குறித்த காணொளிகளைக் காட்டுதல்.        ஐராவதம் மகாதேவனின் இளமைப் பருவத்தைக் கூறுதல்.                கல்வெட்டுத் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாய் அமைந்த நிகழ்வைக் குறிப்பிடுதல்.            புகளூர்க்கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைக் கூறுதல்.               

சேர மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகளையும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பற்றியும் கூறுதல். 

தமிழி எழுத்துக்கள் பற்றியும் கல்வெட்டுச் செய்திகள் குறித்த இவரின் ஆய்வு நூலான எர்லி தமிழ் எபிகிராபி நூலைப் பற்றியும் கூறுதல். 

நீலகண்ட சாஸ்திரியார், கே.வி சுப்பிரமணியனார் இருவருடன் இவர் நிகழ்த்திய சந்திப்பைக் குறித்துக்கூறுதல். 

விளம்பரத்தைப் படித்து நாளிதழ் செய்தியாக மாற்றுதல்.                          

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்.                                            

இலக்கிய நயம் பாராட்டுதல்.               

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுதல். 

பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தற்குறியிடுதல் 

கலைச்சொற்கள் அறிதல் போன்ற         பகுதிகளில் மாணவர்களுக்கு பயிற்சி தருதல்.

மாணவர் செயல்பாடு

கல்வெட்டுகள் குறித்து தாங்கள் அறிந்த செய்திகளை வகுப்பில் கூறுதல். 

ஐராவதம் மகாதேவன் குறித்த செய்திகளைச் சேகரித்தல். 

கல்வெட்டியல் குறித்த இணையக் குறிப்புகளைக் காணுதல். 

மரபுப் பிழைகளை அறிந்து சரியான சொற்றொடர் அமைத்தல். 

பாடலின் பொருளறிந்து அதில் உள்ள நயங்களை எடுத்துக்காட்டுதல். 

கொடுக்கப்பட்ட விளம்பரத்தைச் செய்தியாக மாற்றிக் காட்டுதல். 

மதிப்பீடு 

கல்வெட்டியல் துறையில் ஐராவதம் மகாதேவன் பெற்றுள்ள விருதுகள் யாவை? 

தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்து நீ அறிந்ததைக் கூறு. 

முருகன் சோறு சாப்பிட்டுப்பால்குடித்தான் -தொடரில் உள்ள மரபுப் பிழைகளை நீக்குக. 

ஆறஅமர ,கண்துடைப்பு -மரபுச்சொற்களை தொடரில் அமைத்து எழுதுக. 

கற்பித்தல் நோக்கங்கள்

கல்வெட்டியல் துறை குறித்து அறிகின்றனர்.                                    ஐராவதம் மகா தேவனின் பணிகளை அறிகின்றனர்                       கல்வெட்டியலின் மூலமாக பண்டைய வரலாற்றை அறிகின்றனர்.                     சேர மன்னர்கள் குறித்த கல்வெட்டுகளை அறிகின்றனர்                                             தமிழி எழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துகள் குறித்து அறிகின்றனர். 

மரபுச் சொற்கள் பற்றி அறிகின்றனர். மரபுப் பிழைகள் நீக்க கற்கின்றனர். பாடலின் நயம் பாராட்ட அறிகின்றனர். 

சரியான இடத்தில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்த கற்கின்றனர். 

தொடர்பணி 

உங்கள் பகுதியில் உள்ள பழங்கால கல்வெட்டுகள் குறித்த செய்திகளை தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக. 

மரபுச்சொற்களைத் தொகுத்துப் பட்டியலிடுக. 

வெள்ளி, 28 அக்டோபர், 2022

இலக்கியநயம் பாராட்டல்



இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி

சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!

                                               - கண்ணதாசன் 

திரண்ட கருத்து 

கல்வியில் சிறந்த புலவர்களால் முச்சங்கத்தை அமைத்து, அச்சங்கத்தில் சொற்சுவை,பொருட்சுவை மிகுந்த கவிதைகளை உருவாக்கி, அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியவள் தமிழ்த்தாய். 

மோனைநயம்

முதலெழுத்து ஒன்றிவருவது மோனை.

முச்சங்கம்-முதுபுலவர் 

அச்சங்கம் -அளப்பரிய 

சொற்சங்கம் - சுவைமிகுந்த 

அற்புதங்கள் - அமைத்த 

எதுகைநயம் 

இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.

முச்சங்கம் - அச்சங்கம்

சொற்சங்கம் - அற்புதங்கள்

இயைபுநயம்

இறுதி எழுத்து,சீர் ஒன்றி வருவது.

கூட்டி,பெருமாட்டி 

சந்தநயம்

எதுகை, மோனைகளால் பாடலானது இசை நயம் , சந்தநயம் மிகுந்து வந்துள்ளது. 



பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: 31.10.22 - 4.11.22 

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம் : தமிழ் 

தலைப்பு:இயல்7(நாடு, சமூகம்,அரசு, நிருவாகம்) 

•பதிற்றுப்பத்து

•ஆக்கப்பெயர்கள் 

கற்பித்தல் நோக்கங்கள்

சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக்கற்றல். 

ஆக்கப் பெயர்களின் இன்றியமையாமை, நடைமுறைத்தேவை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

இணையம் 

வலையொளி 

கரும்பலகை 

ஆர்வமூட்டல்

எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் கேட்டல் . 

முந்தைய வகுப்பில் கற்ற எட்டுத்தொகைப் பாடல்களை நினைவூட்டல். 

இடுகுறிப்பெயர்,காரணப்பெயர் குறித்து முந்தைய வகுப்பில் கற்ற செய்திகளை நினைவூட்டல். 

ஆசிரியர் செயல்பாடு 

பதிற்றுப்பத்து 

பதிற்றுப்பத்து நூலமைப்பு கூறுதல். சேரர்களில் புகழ்பெற்ற மன்னர்களை அறிமுகம் செய்தல். 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,குமட்டூர்க்கண்ணனார் பற்றிக் கூறுதல். 

' நிரையவெள்ளம்' பாடல்தலைப்பின் பொருளை விளக்குதல்.

இரண்டாம் பத்து பாடியமைக்கு புலவர் பெற்ற பரிசிலைக்கூறுதல். 

பதிற்றுப்பத்து பாடலின்கருத்து குறளின் கருத்தோடு பொருந்திவருவதை விளக்குதல் . 

பதவுரை கூறி,பாடற்பொருளை விளக்குதல். 

இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் பற்றி விளக்குதல். 

விழாக்கள் நிறைந்த நாட்டை காணொளிகள் காட்டி விளக்குதல். 

ஆக்கப்பெயர்கள் 

இடுகுறிப்பெயர், காரணப்பெயர் குறித்து விளக்குதல். 

தமிழின் ஆக்கப்பெயர் பற்றியும், அதன் விகுதிகள் பற்றியும் விளக்குதல். 

ஆக்கப்பெயர்கள் எழுதப்பட்ட அட்டைகளைக்காட்டி விகுதிகளைச்சுட்டிக்காட்டச்செய்தல். 

பெயர்+விகுதி, தொழிற்பெயர்+விகுதி,வினை+விகுதி, எச்சம்+விகுதி அடிப்படையில் ஆக்கப்பெயர்களை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

பாடலை பதம்பிரித்துப் படித்தல். 

அருஞ்சொற்பொருள் கூறுதல்

பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள நாட்டுவளத்தைத்தொகுத்துக்கூறுதல். 

பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள மன்னர்களையும் புலவர்களையும் வரிசைப்படி பட்டியலிடல்.

தமிழில் வழங்கும் ஆக்கப்பெயர்களைக் கூறுதல் . 

ஆளி,ஆளர் விகுதிகள் பெறும் ஆக்கப்பெயர்களை உருவாக்குதல். 

பெயர்களைப் பிரித்து அதில் இடம்பெற்ற ஆக்கப்பெயர்விகுதிகளை இனம்காணல். 

மதிப்பீடு

இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்? 

பதிற்றுப்பத்து நூலின் கருத்தோடு பொருந்தும் குறளைக்குறிப்பிடுக. 

ஆக்கப்பெயரை உருவாக்குக. 

வந்தால் மகிழ்ச்சி இது;உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) 

படிப்பவர்,படிப்பாளி வேறுபாடு கூறுக.

கற்றல் விளைவுகள்

பதிற்றுப்பத்து நூல் குறித்து அறிகின்றனர். 

வளமான நாட்டின் அமைப்பு பற்றி அறிகின்றனர்.

சேரமன்னர்கள் பற்றி அறிகின்றனர். 

பசி,பிணி,பகை மூன்றும் நாட்டிற்குக் கேடு என உணர்கின்றனர். 

ஆக்கப்பெயர் பற்றி அறிகின்றனர். 

நாம் வாழும் சூழலில் பயன்படுத்தும் ஆக்கப்பெயர்களை இனம்காண்கின்றனர். 

தொடர்பணி

நாட்டிற்கு அழகுசேர்ப்பன எவையென்று கலந்துரையாடுக. 

மாணவர்களுடன் கூடி புதிய ஆக்கப்பெயர்களை உருவாக்குக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம்முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq



பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 31.10.22 - 4.11.22

 நாள்: 31.10.22 - 04.11.22 

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 7(நாடு, அரசு, சமூகம், நிருவாகம்) 

 • தேயிலைத்தோட்டப்பாட்டு

• புறநானூறு

கற்பித்தல் நோக்கங்கள்

  • தமிழரின் புலம்பெயர் வாழ்வையும், அவர்தம் துயரங்களையும் அறிய முற்படுதல். 

• சான்றோரின் பட்டறிவு, ஆட்சி முறைக்குப் பயன்பட்டதை புறநானூற்று பாடல் வழியாக புரிந்து கொள்ளுதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

காணொளிகள்

விளக்கப்படங்கள்

மடிக்கணினி

இணையக்குறிப்புகள் 

கரும்பலகை

ஆர்வமூட்டல் 

எளிய மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புறப்பாடல் பாடுதல். 

பண்டைக்கால ஆட்சிமுறை, வரிவிதிப்பு முறை குறித்துக் கலந்துரையாடல். 

ஆசிரியர் செயல்பாடு: 

தேயிலைத்தோட்டப்பாட்டு

பாடலை இராகத்தோடு பாடுதல்.

மாணவர்களை இணைந்து பாடச்செய்தல். 

பஞ்சத்தினால் தமிழர்கள் கூலிகளாகப்புலம்பெயர்ந்த வரலாற்றைக் கூறுதல். 

அவர்தம் வலிகளை, துயரங்களை, எளிய பாடல்களில் பாடியமுறையை விளக்குதல். 

முச்சந்தி இலக்கியம்,தெருப்பாடல்கள் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் கூறாத இலக்கியவகைகள் குறித்துக்கூறுதல். 

பாரதமக்களின் பரிதாபச்சிந்து நூல்குறித்து விளக்குதல்.

புறநானூறு 

புறநானூறு நூற்பொருள் கூறுதல்.

பாடலை இராகத்தோடு பாடுதல்

பதவுரை கூறுதல் 

திணை, துறை விளக்குதல் 

இணையக்குறிப்புகளைச் சுட்டுதல். 

இலக்கணக்குறிப்பு,உறுப்பிலக்கணம் குறித்து விளக்குதல்.

பிசிராந்தையார் பற்றிய செய்திகளைக்கூறுதல். 

மாணவர் செயல்பாடு 

எளிய நாட்டுப்புறப் பாடல்கள் பாடுதல்.

தேயிலைத்தோட்டப்பாட்டை இராகத்தோடு பாடுதல். 

இசைக்கேற்ப கும்மியடித்தல். 

பாடலுக்குரிய பொருள் கூறுதல். 

வாய்மொழி இலக்கியங்களைப் பட்டியலிடல். 

மாணவர் அறிந்த வரிவிதிப்புமுறை பற்றிக் கூறுதல்.

பதவுரையறிந்து பாடற் பொருளைத் தொகுத்தல். 

மதிப்பீடு

1.ஒரு கோப்பைத் தேநீரில் பொதிந்துள்ள மனிதஉழைப்பைச்சிந்தித்து உங்கள் கருத்தை வெளிப்படுத்துக.

2. தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு எதனால் நிகழ்ந்தது? 

3.யானை புக்க புலம் போல உவமையை பொருளோடு பொருத்துக. 

4. காய்நெல் இலக்கணக்குறிப்பு தருக. 

5. பாடாண் திணை -விளக்குக.

கற்றல் விளைவுகள் 

 தமிழர்களின் புலம்பெயர் வாழ்வையும் அதனால் ஏற்பட்ட வலியையும் உணர்கின்றனர். 

எளிய மக்களின் உழைப்பை மதிக்க கற்றுக் கொள்கின்றனர். 

வாய்மொழி இலக்கியங்கள் குறித்த அடிப்படைச் செய்திகளை அறிகின்றனர். 

பண்டைய கால ஆட்சி முறை குறித்து அறிகின்றனர். 

மன்னர்களுக்கும் புலவர்களுக்குமான உறவு குறித்து அறிகின்றனர். 

திணை, துறை பற்றிய புறப்பொருள் செய்திகளை அறிகின்றனர் . 

தொடர்பணி 

உங்கள் பகுதியில் காணப்படும் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து சிறப்புமலர் ஒன்றை உருவாக்குக. 

நல்ல நிருவாகத்திற்கு நீங்கள் பரிந்துரைக்கும் செய்திகளை ஒரு பக்க அளவில் கட்டுரையாக எழுதுக. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நன்றி 🙏

இராம்முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq







புதன், 26 அக்டோபர், 2022

இயல்6 சிறுதேர்வு

              இயல்6 சிறுதேர்வு

குறுவினா.                      10×2=20

 1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? 

2. ஒருமுக எழினி, பொருமுகஎழினி குறிப்பு வரைக. 

3. பின்னணிஇசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக. 

4. மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

5. குலஷோவ் விளைவு என்றால் என்ன? 

6. படத்தொகுப்பு என்றால் என்ன? 

7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து இக்குறட்பாவின் உவமையை பொருளோடு பொருத்துக. 

8. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்? 

9. அஞ்சத்தக்கன; அஞ்சத்தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? 

10. மீஅண்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

வெள்ளி, 21 அக்டோபர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்

வகுப்பு:பதினோராம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 7(நாடு, சமூகம்,அரசு,நிருவாகம்) 

• காற்றில் கலந்த பேரோசை 

• புரட்சிக்கவி 

• சிந்தனைப்பட்டிமன்றம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

கருத்துகளைத் தொகுத்து கட்டுரைக்கும் திறன் பெறுதல். 

கவிதையில் புரட்சிக்கருத்துகள் எழுச்சியுடன் வெளிப்படுத்தப்படும் நயம் அறிந்து சுவைத்தல். 

பண்பட்ட முறையில் கருத்துகளை முன்வைத்து பேசுந்திறனையும் மொழியாளுமையையும் வளர்த்தல். 

கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

கரும்பலகை

இணையம்

ஆசிரியர் செயல்பாடு

காற்றில் கலந்த பேரோசை

ஜீவா பற்றிய ஆவணப்படம் காட்டல்.

ஜீவாவின் பேச்சாற்றல் பற்றி விளக்குதல்.

நல்லபேச்சு என்பது செய்திகளைக்கொட்டுவதன்று;எடுத்துக் கொண்ட செய்தியை மக்களின் மனங்கவரும் வகையில் சொல்வதே என்பதை ஜீவாவின் பேச்சு மூலம் விளக்குதல். 

சுந்தரராமசாமி பற்றிக் கூறுதல்.

அவர்தம் நூல்களை அறிமுகம் செய்தல். 

புரட்சிக்கவி

மக்களாட்சிச்சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு அரசு என்பது மக்களுக்கானதே என்று கூறுதல். 

பாரதிதாசன் எழுதிய நூல்கள் குறித்துக் கூறுதல். 

புரட்சிக்கவி காப்பியத்தின் முன்கதைச் சுருக்கம் கூறுதல். 

பாடலை இராகத்தோடு பாடுதல்.

அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல். 

இலக்கணக்குறிப்பு, புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் குறித்து விளக்குதல். 

சிந்தனைப்பட்டிமன்றம் 

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்துதல். 

மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டும் வகையில் பட்டிமன்றத்தில் பங்கேற்கச்செய்தல். 

பட்டிமன்றத்துக்கு தேவையான கருத்துக்களை கலந்தாலோசிக்கச் செய்தல். 

மாணவர் செயல்பாடு

பேச்சுக்கலையின் திறனை அறிந்து, வகுப்பில் குறிப்பிட்ட தலைப்பில் பேச முற்படுதல். 

பொதுவுடைமை முன்னோடிகளுள் ஒருவரான ஜீவா குறித்த செய்திகளைத் தொகுத்தல். 

அரசாட்சி, மக்களாட்சி இரண்டிற்குமான வேறுபாடுகளைக் கூறுதல். 

பாடலைப் பொருளோடு வாசித்தல். 

பாடலுக்கான பொருளைத் தொகுத்துக் கூறுதல். 

பட்டிமன்றத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தல். 

தான் சார்ந்த தலைப்புக்கேற்றவாறு கருத்துகளைத் தொகுத்துப் பேசுதல். 

மதிப்பீடு

நாழிக்குள் திணிக்கும் மருந்து போல என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

அலைகடல்,புதுக்கியவர் - இலக்கணக்குறிப்பு தருக.

நீரோடை - புணர்ச்சி விதி கூறுக. 

சிந்தனை பட்டிமன்றத்தின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக.

கற்றல் விளைவுகள் 

பேச்சாற்றல் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

கருத்துக்களைத் தொகுத்துக் கட்டுரையாக்கும் திறனைப் பெறுகின்றனர். 

மக்களாட்சியின் மகத்துவம் குறித்து அறிகின்றனர். 

பண்பட்ட சிந்தனைகளைத் தொகுத்து கூறும் ஆற்றல் பெறுகின்றனர். 

குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கான கருத்துக்களைத் தொகுக்கும் திறன் பெறுகின்றனர்.

தொடர்பணி 

ஜீவானந்தம் பற்றிய செய்திகளை தொகுத்து வகுப்பறையில் படித்துக்காட்டுக.

மக்களாட்சியின் சிறப்பைப் பற்றி கட்டுரை எழுதுக. 

மனித வாழ்வை உயர்த்துவதற்கு பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)

https://www.facebook.com/groups/419403600069598/?ref=share 

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq




புதன், 19 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல்7 (வையத்தலைமை கொள்) 

• இலக்கியத்தில் மேலாண்மை

• அதிசய மலர்

• தொன்மம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

• தலைமைப்பண்பிற்கான கூறுகளைப் பகுத்தாராய்தல். இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கைக்கான மேலாண்மைக் கூறுகளை அறிந்து கொள்ளுதல். 

• மீண்டெழும் ஒரு சமூகத்தின் உணர்வுகளை கவிதையாக்கும் திறன் பெறுதல் .

• தொன்மங்களை அறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் நுட்பமறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்: 

• இறையன்பு நூல்கள்

• மேலாண்மை குறித்த இணையக்கட்டுரைகள் 

• ஈழக்கவிதைகள் பற்றிய இணையக்குறிப்புகள். 

• மடிக்கணினி

• கரும்பலகை 

ஆயத்தப்படுத்தல்

உன் கற்றலுக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுவாய்? 

அயல்நாட்டுக்கவிஞர்களில் உன்னைக் கவர்ந்தோரின் பெயர்களைக் கூறு. 

நீ  அறிந்த புராணக்கதைகள், பழங்கதைகளைக் கூறு. 

ஆசிரியர் செயல்பாடு 

இலக்கியத்தில் மேலாண்மை 

மேலாண்மை என்பதன் பொருள் கூறுதல் 

நேரமேலாண்மை குறித்தும், திட்டமிடல் குறித்தும்  விளக்குதல்.அதற்கான இலக்கியப்பதிவுகளைச்சுட்டல். 

வேளாண் மேலாண்மை குறித்தும் அதன் படிநிலைகள் பற்றியும் விளக்குதல். 

வணிகமேலாண்மை குறித்தும் அதற்கான பட்டினப்பாலை இலக்கியச் சான்றுகள் காட்டியும் விளக்குதல். 

நிருவாக மேலாண்மை குறித்தும் உரிய திருக்குறள் பாடலைச் சுட்டிக்காட்டியும் விளக்குதல். 

மேலான மேலாண்மையில் வரவு செலவு பற்றியும் செயலுறுதி பற்றியும் உரிய இலக்கியச் சான்றுகளுடன் விளக்குதல்.

அதிசயமலர்

ஈழத்துமக்களின்‌ துயரநிலையை விளக்குதல். 

உள்நாட்டுப்போரின் தாக்கங்களைக் கூறுதல் . 

போருக்குப்பின்னான‌ அவர்களின் நம்பிக்கையை விளக்குதல். 

கவிதையின் பொருள் பொதிந்த வரிகளைச்சுட்டிக்காட்டுதல். 

இணையம் மூலம் பிற ஈழக்கவிதைகளை வாசித்துக்காட்டுதல். 

தொன்மம்

தொல்காப்பியர் காட்டும் எட்டுவகை வனப்புகளுள் ஒன்றான தொன்மம் பற்றி விளக்குதல். 

கதையில் தொன்மத்தைப் பயன்படுத்திய நுட்பங்களை கு.அழகிரிசாமி கதைகள் மூலம் விளக்குதல். 

புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம் ' கதையில் தொன்மம் பற்றிக்கூறுதல் .

இலக்கியத்தில் தொன்மம் பயின்ற அடிகளைச்சுட்டுதல். 

புதுக்கவிதைகளில் தொன்மத்தின் பயன்பாடு பற்றி அப்துல்ரகுமான் கவிதை மூலம் விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

மேலாண்மை என்பது குறித்து கலந்துரையாடுதல்

நேர மேலாண்மை குறித்தும் ஒரு நாளை திட்டமிடுவது குறித்தும் கலந்துரையாடல 

கவிதைகளைப் பொருளோடு படித்தல்.போருக்குப் பிந்தைய நிலைகளைத் தொகுத்துக் கூறுதல் 

தொன்மம் அடங்கிய பழமொழிகளை கூறுதல். 

குறிப்பிட்ட கவிதைகளை கொடுத்து அதில் இடம்பெற்ற தொன்மத்தினைக் கண்டறிதல்.

மதிப்பீடு

மேலாண்மை என்னுஞ்சொல்லின்‌ பொருள் கூறுக. 

வேளாண்மேலாண்மைக் கூறுகளை விளக்குக. 

'இச்செடியிலிருந்து காடு பெருகும்' தொடர் உணர்த்தும் பொருள் யாது? 

எட்டுவகை வனப்புகள் யாவை? 

கற்றல் விளைவுகள்

பல்வேறு வகையான மேலாண்மையை அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தல். 

மனிதகுலத்தின் துயரத்தையும், நம்பிக்கையையும் உணர்கின்றனர். 

படைப்பின் நுட்பமான தொன்மத்தைப் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்க அறிகின்றனர். 

தொடர்பணி

உனது ஒருநாளை நேரமேலாண்மைப்படி திட்டமிடு. 

ஈழத்துக்கவிஞர்களையும் அவர்தம் படைப்புகள் குறித்தும் வகுப்பில் கலந்துரையாடுக. 

தொன்மம் இடம்பெறும் வகையில்  புதுக்கவிதை எழுதி வரவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)

https://www.facebook.com/groups/419403600069598/?ref=share

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq





சனி, 15 அக்டோபர், 2022

நாட்டுநலப்பணித்திட்டம்

 எங்கள் பள்ளியில் நான் சரிசெய்த பிழைதிருத்தம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எங்கள் பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலராக என்னைப்பொறுப்பேற்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டார். நானும் இசைவுதெரிவித்தேன். நாட்டுநலப்பணித்திட்டத்திற்கான விளம்பரப்பதாகையொன்றை(Banner) அச்சிடவேண்டும்.அதற்கான வரைவை(Model) எழுதிக்கொடுக்குமாறு தலைமையாசிரியர் கேட்டார்.நானும் எழுதிக்கொடுத்தேன். 'ஐயா,இதனில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? என வினவினேன். 

பிறபள்ளிகளில் அச்சிட்டதைப்பார்த்துக்கொள்ளலாமென்றார்.ஓரிருநாட்களில் மாவட்டத்திட்ட அலுவலரிடம் பேசி, அவர்கள் பள்ளியில் வைத்துள்ள பதாகையின் படத்தைக்காட்டி ' தாங்கள் எழுதிய வரைவில் சிறியபிழை அதைமட்டும்  மாற்றுமாறு கூறினார். 

என்ன பிழை? என்று வினவினேன். 

'நாட்டுநலப்பணித்திட்டம்' என்பதை              'நாட்டு   நலப்பணித் திட்டம்'  எனப்பிரித்தெழுதுமாறு கூறினார். ஏன் அவ்வாறு எழுதவேண்டுமெனக்கேட்டேன். 

எதாவது இலக்கணநுட்பமிருக்குமென நினைத்தேன்.அவர் கூறிய விடை வியப்பளித்தது. 'மாவட்டத்திட்ட அலுவலரே எழுதியிருக்கிறார். அதனால், சரியாகத்தானிருக்குமென்றார்'. 

'நாட்டு  நலப்பணித் திட்டம்' என்று எழுதுவது சரியா?  

நாடு + நலப்பணி இதில் 'நாடு' நெடிற்றொடர் குற்றியலுகரம்.

நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் 

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. 

என்னும் விதிப்படி வேற்றுமைப்புணர்ச்சியில் நெடிற்றொடர் குற்றுகரத்தில் டகர,றகர குற்றுகரம் இடம்பெறின், அவை இரட்டித்துப்புணரும்.

நாடு+ நலப்பணி 

நாடு (நா+ட்+உ)இதில் டகரம் இடம்பெற்றுள்ளது. இது இரட்டித்து ( நா + ட்+ ட்+உ- நாட்டு ) என மாறும். 

நலப்பணி+திட்டம்

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

எனவே, இரண்டு சொற்களும் புணரும் 

புணர்ச்சியால் மாற்றமடைந்த சொல்லைப்பிரிக்கக்கூடாது. 'நாட்டுநலப்பணித்திட்டம்' என்று இணைத்தேயெழுத வேண்டும். 

நாட்டு நலப்பணித் திட்டம் என்று பிரித்தெழுதினால் பொருளே மாறிவிடும். 

'நாட்டுநலப்பணித்திட்டம்' சேர்த்தெழுதும்போது,நாட்டிற்குச்செய்யும்நலப்பணித்திட்டம் எனப்பொருள்படும்.இது 'வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கத்தொகை' 

இதையே நாட்டு நலப்பணித் திட்டம் எனப்பிரித்தெழுதினால் 'நாட்டு' ஏவல்வினைமுற்றாகி,நலப்பணித்திட்டத்தை நாட்டு.(நாட்டு- நிலைநிறுத்து) எனப்பொருள் மாற்றமடையும். 

சிறு இடைவெளி தொடரின் பொருளையே மாற்றிவிடும். இச்செய்தியினை தலைமையாசிரியருக்கு எடுத்துக்கூறி சரியான முறையில் பதாகையை அச்சிட்டுள்ளேன். 

ஒவ்வொரு தமிழாசிரியரும் தம் பள்ளியளவில் பயன்படுத்தும் விளம்பரங்களில் பிழையற்ற தமிழை இடம்பெறச்செய்வது கடமையன்றோ? சிந்திப்பீர்.

நன்றி

இராம்முருகன் 

வியாழன், 13 அக்டோபர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: 17.10.22  -  21.10.22 

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல்6(கலை,அழகியல்,புதுமைகள்) 

            • இசைத்தமிழர் இருவர்.

            • கலைச்சொல்லாக்கம்

கற்றல் நோக்கங்கள்: 

 வாழும் காலத்தின் ஆளுமைகளின் திறமைகளை உணர்ந்து முன்னோடியாக் கொள்ளுதல். 

கலைச் சொல்லாக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்து புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமான் இருவரின் நேர்காணல் காணொளி. 

இளையராஜா குறித்த ஆவணப்படம். 

கலைச்சொல் அகராதி. 

கலைச்சொல் தொகுப்பேடு. 

ஆர்வமூட்டல்

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமான் இசையில் உருவான பாடல்களைக்கூறச்செய்தல்.இராகத்தோடு பாடிக்காட்டுதல். 

நீங்கள் பயன்படுத்தும் கருவிகளின் கலைச்சொற்களைப் பட்டியலிடுங்கள். 

ஆசிரியர் செயல்பாடு

இசைத்தமிழர் இருவர் 

இளையராஜா குறித்த ஆவணப்படம் காட்டல். 

இளையராஜா குறித்த செய்திகளைக்கூறுதல். 

சிம்பொனி இசைக்குழு பற்றிக் கூறுதல். 

இவர் இசைக்கோவைகளை விளக்குதல். 

இளையராஜா பெற்ற உயரியவிருதுகளைக்கூறுதல்.

இவர்தம் இசைநுணுக்கத்தை விளக்குதல்.

ஏ‌.ஆர்.இரகுமான் அவர்களின் இசைப்பாரம்பரியத்தைக்கூறுதல். 

இவர் இசைகோர்க்கும் நுட்பங்களைக்கூறுதல். 

உலகளாவிய இசையை கணினி தொழில்நுட்பத்தில் உருவாக்கிய விதத்தைக்கூறுதல். 

இவர் பெற்ற உலகளாவிய விருதுகளைப் கூறுதல்.

கோல்டன் குளோப்,கிராமி, ஆஸ்கர் விருதுகள் பெற்ற நிகழ்வுகளை விவரித்தல். 

இசைத்துறையில் ஆர்வமுள்ளோர்க்கு இவ்விருவரின் வாழ்வும் முன்னோடியாக அமைவதை விளக்குதல். 

கலைச்சொல்லாக்கம்

கலைச்சொல் என்பதற்குப்பொருள் கூறுதல். 

அகராதி, கலைச்சொல் வேறுபாடு கூறுதல்.

மருத்துவ கலைச்சொற்கள், கல்விசார் கலைச்சொற்கள், தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் பற்றி விளக்குதல். 

தமிழில் கலைச்சொற்களின் இன்றியமையாமையைக் கூறுதல். 

கலைச்சொற்கள் உருவாக்கும் வழிமுறைகள் பற்றி வா.செ.குழந்தைசாமி கூறுவனவற்றைத் தொகுத்துக் கூறுதல். 

கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்கள் பங்கு குறித்து விளக்குதல். 

மாணவர் செயல்பாடு: 

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமானின் இசையை நுட்பமாக ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கலந்துரையாடல் செய்தல். 

இளையராஜா,ஏ.ஆர். இரகுமான் பெற்ற விருதுகளைப் பட்டியலிட்டுக்கூறுதல். 

நுட்பமாக இசையமைத்த பாடல்களைப் பாடுவர். 

கலைச்சொற்கள் பற்றியறிந்து துறைசார்ந்த கலைச்சொற்களைப்பட்டியலிடல். 

அறிவியற்கண்டுபிடிப்புகளின் கலைச்சொற்களை மாணவர்களோடு விவாதித்தல். 

ஏதேனும் ஒருபொருளைத்தேர்ந்தெடுத்து அதற்குரிய கலைச்சொல் உருவாக்குதல். 

மதிப்பீடு

இளையராஜா பெற்ற விருதுகள் யாவை? 

கோல்டன் குளோப், கிராமி விருதுகளை ஏ.ஆர். இரகுமான் எப்படத்திற்கு இசையமைத்ததற்காக வழங்கப்பட்டது? 

ESCALATOR,STRAW,MASSDRIL - இணையான தமிழ்க் கலைச்சொற்கள் தருக. 

கற்றல் விளைவுகள்

சமகாலத்தில் வாழும் இசை ஆளுமைகள் குறித்து அறிந்து கொள்கின்றனர். 

இசைத்துறையில் இவர்கள் பெற்ற உயரிய விருதுகளை அறிகின்றனர். 

கலைச்சொற்களின் இன்றியமையாமை குறித்தும், கலைச்சொற்கள் உருவாக்கும் பணிகுறித்தும் அறிந்து கொள்கின்றனர். 

துறைசார்ந்த கலைச்சொற்களை அறிந்து கொள்கின்றனர். 

தொடர் பணி :

தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண், தமிழில் பிறந்தநாள் பாடல் போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து இசையுடன் பாடுக. 

மாணவர் ஒவ்வொருவரும் 25 கலைச் சொற்களைப் பொருளுடன் திரட்டி அகராதி ஆக்குக.

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

முகநூல் பக்கத்தில் இணைய, 

'நறும்பூந்தமிழ்' பக்கத்தில் இணையுங்க

புலனத்தில் இணைய 

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq









அளவைகள்

 சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள அளவைகளைப் பற்றி காணலாம். 


மேடையை அளக்கும் கோல்: 

8அணு-1தேர்த்துகள் 

8தேர்த்துகள்-1இம்மி 

8 இம்மி - 1 எள்ளு 

8 எள்ளு - 1 நெல்லு 

8 நெல்லு - 1 பெருவிரல்


24பெருவிரல் கொண்டது 1 கோல்.


மாதவி பெற்ற பரிசு


1008 கழஞ்சு பொன்னாலான மாலை. 


2 குன்றிமணி - 1 மஞ்சாடி 

10 மஞ்சாடி - 1 கழஞ்சு

ஒரு கழஞ்சு என்பது தற்கால அளவையில் 1.77கி 

அப்படியென்றால்

1008×1.77=1784.16கி 


அரசன் பரிசாக கொடுத்த மாலை 1784.16 கி 


இந்தச்செய்திகளை மாணவர்களிடம் கூறுங்கள்.


பண்டைய அளவைகளை உணர்வார்கள். நம் ஆசிரியர் எவ்வளவு நுட்பமான செய்திகளைக்கூறுகிறார் என்று வியந்து பாடத்தைக்கவனிப்பார்கள்


நன்றி

இராம் முருகன்

அரசூர்

புதன், 12 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு- (17.10.22 -21-10-22)

 நாள்: அக்டோபர் இரண்டாம்வாரம் 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 6 (சிறுகை அளாவிய கூழ்) 

     • சிலப்பதிகாரம்

     • மெய்ப்பாட்டியல் 

     • காப்பிய இலக்கணம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

•தமிழரின் தொன்மைக்கலையான நடனம் பற்றி அறிதல். 

•பண்பாடு வரலாறு அழகியல் கூறுகளை அறிதல். 

•எண்வகை மெய்ப்பாடுகள் பற்றி அறிதல். 

•பெருங்காப்பியம்,சிறுகாப்பியம் பற்றியும் அதன் அடிப்படைக்கூறுகளையும் அறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

சிலப்பதிகாரக்காணொளி 

அளவுகள் குறித்த வரைபடம்

மெய்ப்பாடுகளை விளக்கும் படம் 

காப்பிய நூல்

மடிக்கணினி, இணையம்

ஆயத்தப்படுத்தல்

தற்கால நாடகமேடையின் அமைப்பு குறித்துக் கலந்துரையாடல். 

மனிதவுடலில் தோன்றும் உணர்வுகளைப்பட்டியலிடக்கூறல். 

காப்பியங்களின் பெயர்களைக்கூறச்செய்தல். 

ஆசிரியர் செயல்பாடு

சிலப்பதிகாரம்

மாதவி நடனம் கற்றதை விளக்குதல். 

நாட்டிய அரங்கின் அமைப்பை படத்தைக்காட்டி விளக்குதல். 

தலைக்கோல் பற்றியும்,மாதவியின் நடனத்தையும் கூறல். 

மாதவி பெற்ற பரிசை விவரித்தல். 

மெய்ப்பாட்டியல்

எண்வகை மெய்ப்பாடுகள் பற்றி விளக்குதல். 

ஒவ்வொருவகை  மெய்ப்பாட்டையும் நடித்து விளக்குதல். 

மெய்ப்பாடுகள் பயின்றுவரும் இலக்கியச்சான்றுகள் கூறுதல். 

காப்பிய இலக்கணம்: 

காப்பு+இயம் சொற்பொருள் கூறல்.

பெருங்காப்பியம்,சிறுகாப்பியம் பற்றி விளக்குதல். 

காப்பியத்தின் கூறுகளை விளக்குதல். 

தற்கால காப்பிய வடிவங்களையும் பெயர்களையும் சுட்டிக்காட்டுதல். 

மாணவர் செயல்பாடு

நாட்டிய அரங்கின் அமைப்பை தொகுத்துக் கூறுதல். 

பண்டைய அளவைகளைத்தொகுத்தல். 

செய்யுளைப்பொருளோடு படித்தல். 

செய்யுளில் இடம்பெற்ற மெய்ப்பாடுகள் கண்டறிதல்.

காப்பியத்தின் கூறுகளை தொகுத்துக் கூறுதல். 

மதிப்பீடு

கழஞ்சு என்பதன் தற்கால அளவு எவ்வளவு? 

நாட்டிய அரங்கின் அமைப்பைத் தொகுத்துக்கூறுக. 

எண்வகை மெய்ப்பாடுகள் எவை? 

காப்பியம்- சொற்பொருள் விளக்குக. 

கற்றல் விளைவுகள்

தமிழரின் தொன்மைக்கலையான நடனத்தை, நாட்டிய அரங்கின் அமைப்பையும் அறிகின்றனர். 

எண்வகை மெய்ப்பாடுகளை அறிகின்றனர். 

செய்யுளில் இடம்பெற்ற மெய்ப்பாடுகளை இனம்காண்கின்றனர். 

கதைவடிவிலான காப்பியங்கள் பற்றியும் அதன் அடிப்படைக்கூறுகளையும் அறிகின்றனர். 

தொடர்பணி

உங்கள் ஊரில் அமைந்துள்ள நாடகமேடையையும் சிலப்பதிகாரம் காட்டும் நாட்டிய அரங்கின் அமைப்பையும் ஒப்பிடுக. 

எண்வகை மெய்ப்பாடுகளை நடித்துக்காட்டுக. 

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியக்கூறுகள் குறித்துக் கலந்துரையாடல் செய்க. 

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

முகநூல் பக்கத்தில் இணைய, 

'நறும்பூந்தமிழ்' பக்கத்தில் இணையுங்க

புலனத்தில் இணைய 

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq




மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...