புதன், 1 செப்டம்பர், 2021

புத்தாக்க பயிற்சி எண் 3

 மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.

பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. கோவில் தூண்கள் சிற்பங்களால் அழகு பெறுகின்றன. தூண்களில் யாளி, சிங்கம், தாமரைமலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள், நுழைவுவாயில்கள் என அனைத்து இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்வதைக் காணமுடியும். பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச்சிறந்த சான்றுகளாகும். கடற்கரையில் காணப்பட்ட பெரும் பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு அட்டவணையை நிரப்புக

 (எட்டுத்தொகை, மரவேர், கற்சிலை, மட்குடம், அகநானூறு, பத்துப்பாட்டு, பற்பொடி, பூங்கொடி, நிலமங்கை).

தோன்றல்     திரிதல்      கெடுதல்

எட்டுத்தொகை கற்சிலை  மரவேர்

புத்தாக்க பயிற்சி எண் 2

 மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(எ.கா.) ஆய்வு என்பது அறிவின்வெளிப்பாடு 

வினா: அறிவின்வெளிப்பாடு எது?

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா : _________________________________________________________?

2. உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று

இல்லை.

வினா : _____________________________________________________?

3. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக

மாற்றப்பட்டுள்ளன.

வினா : __________________________________________________________?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா : _____________________________________?

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக.

 பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில்

அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத

கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்

கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக்

கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ

அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச்

சந்தித்தார். இறுதி மூச்சுவரை மூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து

மறைந்தார்.

வினாக்கள்

1. _____________________________?

2. _____________________________?

3. _____________________________?

4. _____________________________?

5. _____________________________ ?

புத்தாக்க பயிற்சி எண் 1

 உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

ஏறுதழுவுதல் என்பது தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு
பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல் ,மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு
எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று,
ஜல்லிக்கட்டு என்றாகியது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக்
குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி
நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது.மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

வினாக்கள்

1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.

 1. வளையம் 

2. சல்லி நாணயம்

 3.மஞ்சுவிரட்டு

4. பணமுடிப்பு 5.புழங்கிக்கொண்டிருந்த

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

2. சரியா? தவறா? என எழுதுக.

1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது.

2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.

3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகளில் எழுதுக.

______________________________________________________________

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு ______________.

5. ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.

______________________________________________________________

______________________________________________________________

_____________________________________________________

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...