நாள்:12.6.23-16.6.23
பாடம்: தமிழ்
தலைப்பு:இயல்1
கவிதைப்பேழை-
யுகத்தின் பாடல்
நன்னூல் பாயிரம்
உரைநடை- பேச்சு மொழியும் கவிதைமொழியும்
கற்றல் நோக்கங்கள்
மொழியின் இலக்கண இலக்கிய வளங்களையறிதல்
பேச்சு மொழிக்கும் கவிதை மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளைப்பல்வேறு படைப்பாளர்களின் கருத்துகளின் வழிப் புரிந்து கொள்ளுதல்.
நூலின் கண் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையையும் அறிதல்.
கற்றல் விளைவுகள்
தமிழ்மொழியின் சிறப்பையறிதல்
மொழி கடந்து வந்த பாதையை அறிதல்.
பொதுப்பாயிரம் ,சிறப்புப்பாயிரம் தற்காலநூல்களில் அடைந்த மாற்றங்களை அறிகிறான்
பேச்சுமொழி கவிதைமொழி இரண்டுக்குமான வேறுபாடு அறிகிறான்
பெருங்கவிஞர்களின் கவிதைநடையை அறிகின்றனர்.
துணைக்கருவிகள்
படங்கள், மடிக்கணினி, விளக்க அட்டைகள், பெருங்கவிஞர்களின் கவிதைகள், நன்னூல்
ஆர்வமூட்டுதல்
களப்பிரர் ஆட்சியால்,வடமொழி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட இடர்களை, வரலாற்றைக் கூறுதல்.
யாழ்ப்பாணம் நூலக எரிப்பு குறித்துக்கூறுதல்.
புத்தகக்கட்டமைப்பில் முன்னுரை முகவுரை நுழையுமுன் பகுதிகளைச் சுட்டிக் காட்டுதல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
புதுக்கவிதை வடிவத்தை விளக்குதல்
தமிழ்மொழியின் சிறப்பைக்கூறுதல்.
தமிழுக்கு ஏற்பட்ட இடர்களைக்கூறுதல்.
பிறமொழிக்கலப்பை பற்றி உரையாடல்.
மணிப்பிரவாள நடையில் தமிழில் வடமொழி கலந்ததையும் தனித்தமிழ் இயக்கத்தையும் கூறுதல்.
மடிக்கணினியில் யாழ்நூலகம் குறித்த செய்திகளைக்காட்டுதல்.
தமிழ் எழுச்சிபெற செய்யவேண்டியவற்றைப்பட்டியலிடல்.
பேச்சுமொழி எழுத்துமொழி வேறுபாடு கூறுதல்
பேச்சுமொழிக்கும் கவிதைமொழிக்குமான தொடர்பை விளக்குதல் .
புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளை மடிக்கணினியில் காட்டி அதில் பேச்சுமொழியின்தாக்கம், குறியீடுகள் குறித்துக்கலந்துரையாடுதல்.
தொல்காப்பியம்,நன்னூல் முதலிய நூல்களில் இடம்பெறும் பாயிரம் பற்றி விளக்குதல்.
பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் பற்றி விளக்குதல்.இதன் பகுதிகளை ஒவ்வொன்றாக விளக்குதல்
பாயிரம் தற்காலநூல்களில் இடம்பெறும் வடிவத்தை நூல்களைக் காட்டி விளக்குதல்.
மாணவர் செயல்பாடு
தமிழ் வளர்ச்சிபெற செய்யவேண்டியவற்றைப்பட்டியலிடல்
மொழி வளர்ச்சி பற்றிய புதுக்கவிதை கூறுதல்
வால்ட்விட்மன்,மல்லார்மே கவிதைகளை இணையத்தில் தேடி வாசித்தல்
பாயிரத்தின் கூறுகளைப்பட்டியலிடல்
தற்கால நூல்களில் பாயிரம் இடம்பெறும் நிலைகுறித்து விவாதித்தல்.
பாயிரத்தின் தேவை குறித்து உரையாடல்
வலுவூட்டல்
பாடப்பகுதியில் எளிய வினாக்கள் கேட்டல்
சொற்பொருள் கேட்டல்
புரியாத பகுதிகளை மீண்டும் கற்பித்தல்
எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதிப்படுத்தல்
மதிப்பீடு
இனம் மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையைக்குறிப்பிடுக.
பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
தொடர்பணி
காலத்தை வென்ற மொழி என்னும் தலைப்பில் கவிதை படைக்க.
கவிதை குறித்து தமிழ் கவிஞர்களின் கருத்துக்களைத் திரட்டி ஒப்படைவு எழுதுக.
எல்லா வகை நூல்களுக்கும் அழகு தருவதாக வைக்கப்படுவது அணிந்துரை எடுத்துக்காட்டுகளுடன் வகுப்பறையில் விவாதிக்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலக்கணக்காணொளிகளுக்கு
https://youtube.com/@Tamilnathi
நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்
https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL
நறும்பூந்தமிழ் Telegram group
https://t.me/+k479QbSbqxo1YjZl
நன்றி 🙏
இரா.முருகன்
முதுகலையாசிரியர், அரசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக