இலக்கியங்களில் மகன்றில் பறவை என்றொரு பறவை சுட்டப்படுகிறது இது நீர்ப் பறவைகள் என்றும் இமைப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மை உடையன மருதத் திணைக்குரிய பறவைகள் இவை மலர்கள் நிரம்பிய இடங்களில் வாழும் இந்த மகன்றில் பறவைகளுக்கு ஒரு சிறப்பியல்பு உண்டு இவை எப்போதும் இணையாகவே நீர் நிலைகளில்செல்லும் அப்படி செல்லும் பொழுது ஒரு பூ இடைப்பட்டு அதை கடக்கும்போது பிரியும் மிகச்சிறிய தருணத்தையும் பல ஆண்டுகள் போல் எண்ணி பிரிவாற்றாமல் வருந்தும் இந்த மகன்றில் பறவைகளை வைத்து சிறைக்குடி ஆந்தையார் குறுந்தொகையில் அற்புதமான பாடல் ஒன்றை அளித்துள்ளார்
பாடல்57
"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேமாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே"
பொருள்
எத்தனையோ பிறவிகளில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த நாம் இந்தப் பிறவியில் காதலர்களாக பிறந்து பிரிந்திருக்கிறோம் பூ இடைப்பட்ட நேரத்தை கூட மகன்றில் பறவை ஆண்டுக்கணக்கில் பிரிந்ததாய் எண்ணி வருந்துமாம் ஆனால் தலைவனே உன்னை பிரிந்து வாழ்வதை காட்டிலும் உயிரை விடுவதே மேல் என்கிறாள் தலைவி
##₹₹₹₹################
இராம் முருகன் 25.07.2019