குறுவினாக்கள்
1. ''மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே''
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை.
எஞ்சிய காப்பியங்கள்
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
2. வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும்.
வேம் + கை என தொடர் மொழியாகிப் பிரிந்து 'வேகின்ற கை' எனப் பொருள் தரும்.
இது தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால் இது பொதுமொழி எனப்படும்.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களை சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக
சரியான தொடர்கள்
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழையான தொடர்
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
பிழைக்கான காரணம்
தாறு-வாழைக்குலை, சீப்பு- வாழைத்தன் பகுதி எனவே வாழைத்தாற்றில் தான் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும்.
4.''உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்''- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
அளபெடையின் வகை: இன்னிசை அளபடை
இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக இசைவிமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்
ஒருமுறை ஒரு பெரிய வித்துவான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது ''அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்'' என்று சிலேடையாகக் குறிப்பிட்டார்.