வியாழன், 17 ஜூன், 2021

பத்தாம் வகுப்பு இயல் 1 சிறுவினாக்கள்

 சிறுவினாக்கள் 

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை? 

  • தமிழன்னை அன்னை மொழி யானவள் 
  • அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் 
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி 
  • கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள் 
  • திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள் 
  • பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும் நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள் அதனால் பொங்கியெழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார்.
  • 2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.
  • வயலில் நெல் நாற்று நட்டனர் 
  • சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது.
  • வாழைக் குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன்.
  • வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன்.
  • குளக்கரையில் பனைவடலியைக் ககண்டேன்3. 3.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக



இயல்1 குறுவினாக்கள்

 குறுவினாக்கள் 

1. ''மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே'' 

இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை.

எஞ்சிய காப்பியங்கள்

 சீவக சிந்தாமணி

 வளையாபதி 

குண்டலகேசி 

2. வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும்.

வேம் + கை என தொடர் மொழியாகிப் பிரிந்து 'வேகின்ற கை' எனப் பொருள் தரும்.

இது தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால் இது பொதுமொழி எனப்படும். 

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களை சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக

சரியான தொடர்கள்

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

பிழையான தொடர்

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 

பிழைக்கான காரணம் 

தாறு-வாழைக்குலை, சீப்பு- வாழைத்தன் பகுதி எனவே வாழைத்தாற்றில் தான் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும்.

4.''உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்''- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக. 

அளபெடையின் வகை: இன்னிசை அளபடை 

இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக இசைவிமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்

ஒருமுறை ஒரு பெரிய வித்துவான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது ''அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்'' என்று சிலேடையாகக் குறிப்பிட்டார்.

சனி, 5 ஜூன், 2021

எழுத்து சொல் -வினா விடைகள்

 1.செய்யுளிசை அளபெடை- சான்றுடன் விளக்குக.

செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்யும் பொருட்டு உயிர் நெடில் எழுத்துக்கள் தனக்குரிய அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும். இதனையே "செய்யுளிசை அளபெடை" என்கிறோம்.

எ.கா

உழாஅர்-இச்சொல்லில் 'ழா' என்ற நெடில் தனக்குரிய அளவில் இருந்து நீண்டு ஒலிக்கிறது எனவே இதனை  செய்யுளிசை அளபெடை எனலாம்.

2. இன்னிசை அளபடை- சான்றுடன் விளக்குக.

செய்யுளில் இனிய இசைக்காக உயிர்க்குறில் எழுத்துக்கள் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்.

எ.கா

கெடுப்பதூஉம்-இச்சொல்லில் 'து' என்னும் குறில் 'தூ' என்னும் நெடிலாக மாறி(தூஉ)  அளபெடுத்து இருக்கிறது. எனவே இதனை இன்னிசை அளபடை எனக் கூறலாம்.

3. சொல்லிசை அளபெடை சான்றுடன் விளக்குக

செய்யுளில் ஓசை இசை நிறைவாக இருக்கும் போது ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை எனப்படும்.

எ.கா

தழீஇ-இச்சொல் அளபெடுக்கும் போது பெயர்ச் சொல்லில் இருந்து வினைச்சொல்லாக மாறுகிறது. இதுபோல செய்யுளில் ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை என்கிறோம்.


மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...