செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பன்னிரண்டாம் வகுப்பு இயல் 1 2 முக்கிய வினாக்கள்

 குறுவினாக்கள் 

1.கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எவற்றை வியந்து பாட தமிழின் துணைவேண்டும் என்கிறார்? 

2. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும்இலக்கண நூல்கள் யாவை? 

3. வேற்றுமையணி விளக்குக. 

4. நடை அழகியல் பற்றி தொல்காப்பியத்தின் கருத்தைக் குறிப்பிடுக. 

5.மொழியியல் வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை? 

6. விடியல், வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க. 

7. முடிந்தால் தரலாம் - முடித்தால் தரலாம் இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை? 

8. பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக.

   களம் - கலம் 

9.புணர்ச்சி விதி தருக. 

   வெங்கதிர் , தனியாழி 

10 உவமைத் தொடர்களை சொற்றொடர்களில் அமைத்து எழுதுக. 

  1. உள்ளங்கை நெல்லிக்கனி போல

  2. கிணற்றுத் தவளை போல 

11.தமிழ்ச்சொல் கண்டறிக. 

    Fiction, Biography

12. மழையை கணிக்கும் அறிகுறிகளாக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிடுவன யாவை? 

13. இயற்கைச் சமநிலை - விளக்குக.

14.  புவி வெப்பமயமாதலால் ஏற்படும் கேடுகள் யாவை? 

 15.'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'விளக்கம் தருக. 

16.வாகைத்திணை விளக்குக.

17.குளிர் மிகுதியால் விலங்குகள் அடைந்த துன்பத்தை விளக்குக. 

18.உயர்திணை பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக. 

19. புணர்ச்சி விதி தருக.

     இனநிரை, புதுப்பெயல் 

20 . மயங்கொலிச்சொற்களை ஒரே தொடரில் எழுதுக.

தலை தளை தழை 



பதினொன்றாம் வகுப்பு சிறு தேர்வு 2

 சிறு வினாக்கள் 

1. க. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது? 

2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது? 

3. என்னுயிர் தமிழ்மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழி பற்றினை எழுதுக. 

4. மொழி முதல் இறுதி எழுத்துக்கள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக. 

5. சிறப்பு பாயிரத்தில் இடம்பெற வேண்டிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

6. பொதுப்பாயிரத்தில் இடம்பெறும் ஐந்து செய்திகளைக் குறிப்பிடுக. 

7. காற்றிலாடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடுயாது? ஏன்? 

8. சலசவாவியில் செங்கயல் பாயும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக. 

9. ஐங்குறுநூற்றுப் பாடல் காட்டும் திணை முதற் பொருள் கருப்பொருள்களை அட்டவணை படுத்துக. 

10. தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் இனவெழுத்துகளின் பங்கைக் குறிப்பிடுக.



திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பதினொன்றாம் வகுப்பு சிறு தேர்வு

 குறுவினாக்கள் 

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? 

2. பாயிரம் பற்றி நீ அறியும் கருத்து யாது? 

3. இனம் மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக. 

4. உயிரீறு, மெய்யீறு விளக்குக.

5. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை? 

6. புணர்ச்சி விதி தருக. 

அணிந்துரை        பொதுச்சிறப்பு 

7. பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள் யாவை? 

8. நேரடி மொழி விளக்குக.

9. புதுக்கவிதை விளக்கம் தருக.

10. மொழிக்கு இறுதியில் வரும் பொழுதுகள் எத்தனை? அவை யாவை?


மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...