நாள்: 31.10.22 - 4.11.22
வகுப்பு: பதினோராம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு:இயல்7(நாடு, சமூகம்,அரசு, நிருவாகம்)
•பதிற்றுப்பத்து
•ஆக்கப்பெயர்கள்
கற்பித்தல் நோக்கங்கள்
சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக்கற்றல்.
ஆக்கப் பெயர்களின் இன்றியமையாமை, நடைமுறைத்தேவை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துதல்.
கற்பித்தல் உபகரணங்கள்
மடிக்கணினி
இணையம்
வலையொளி
கரும்பலகை
ஆர்வமூட்டல்
எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் கேட்டல் .
முந்தைய வகுப்பில் கற்ற எட்டுத்தொகைப் பாடல்களை நினைவூட்டல்.
இடுகுறிப்பெயர்,காரணப்பெயர் குறித்து முந்தைய வகுப்பில் கற்ற செய்திகளை நினைவூட்டல்.
ஆசிரியர் செயல்பாடு
பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து நூலமைப்பு கூறுதல். சேரர்களில் புகழ்பெற்ற மன்னர்களை அறிமுகம் செய்தல்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,குமட்டூர்க்கண்ணனார் பற்றிக் கூறுதல்.
' நிரையவெள்ளம்' பாடல்தலைப்பின் பொருளை விளக்குதல்.
இரண்டாம் பத்து பாடியமைக்கு புலவர் பெற்ற பரிசிலைக்கூறுதல்.
பதிற்றுப்பத்து பாடலின்கருத்து குறளின் கருத்தோடு பொருந்திவருவதை விளக்குதல் .
பதவுரை கூறி,பாடற்பொருளை விளக்குதல்.
இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் பற்றி விளக்குதல்.
விழாக்கள் நிறைந்த நாட்டை காணொளிகள் காட்டி விளக்குதல்.
ஆக்கப்பெயர்கள்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் குறித்து விளக்குதல்.
தமிழின் ஆக்கப்பெயர் பற்றியும், அதன் விகுதிகள் பற்றியும் விளக்குதல்.
ஆக்கப்பெயர்கள் எழுதப்பட்ட அட்டைகளைக்காட்டி விகுதிகளைச்சுட்டிக்காட்டச்செய்தல்.
பெயர்+விகுதி, தொழிற்பெயர்+விகுதி,வினை+விகுதி, எச்சம்+விகுதி அடிப்படையில் ஆக்கப்பெயர்களை விளக்குதல்.
மாணவர் செயல்பாடு
பாடலை பதம்பிரித்துப் படித்தல்.
அருஞ்சொற்பொருள் கூறுதல்
பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள நாட்டுவளத்தைத்தொகுத்துக்கூறுதல்.
பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள மன்னர்களையும் புலவர்களையும் வரிசைப்படி பட்டியலிடல்.
தமிழில் வழங்கும் ஆக்கப்பெயர்களைக் கூறுதல் .
ஆளி,ஆளர் விகுதிகள் பெறும் ஆக்கப்பெயர்களை உருவாக்குதல்.
பெயர்களைப் பிரித்து அதில் இடம்பெற்ற ஆக்கப்பெயர்விகுதிகளை இனம்காணல்.
மதிப்பீடு
இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
பதிற்றுப்பத்து நூலின் கருத்தோடு பொருந்தும் குறளைக்குறிப்பிடுக.
ஆக்கப்பெயரை உருவாக்குக.
வந்தால் மகிழ்ச்சி இது;உழைத்தால் கிடைக்கும் இது (மானம்)
படிப்பவர்,படிப்பாளி வேறுபாடு கூறுக.
கற்றல் விளைவுகள்
பதிற்றுப்பத்து நூல் குறித்து அறிகின்றனர்.
வளமான நாட்டின் அமைப்பு பற்றி அறிகின்றனர்.
சேரமன்னர்கள் பற்றி அறிகின்றனர்.
பசி,பிணி,பகை மூன்றும் நாட்டிற்குக் கேடு என உணர்கின்றனர்.
ஆக்கப்பெயர் பற்றி அறிகின்றனர்.
நாம் வாழும் சூழலில் பயன்படுத்தும் ஆக்கப்பெயர்களை இனம்காண்கின்றனர்.
தொடர்பணி
நாட்டிற்கு அழகுசேர்ப்பன எவையென்று கலந்துரையாடுக.
மாணவர்களுடன் கூடி புதிய ஆக்கப்பெயர்களை உருவாக்குக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி 🙏
இராம்முருகன். தமிழாசிரியர்,அரசூர்.
8012906557.
இலக்கணங்கற்க,
'தமிழ்நதி' வலையொளி பாருங்கள்.
https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w
புலனத்தில் இணைய (WhatsApp)
https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக