நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்
வகுப்பு:பதினோராம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: இயல் 7(நாடு, சமூகம்,அரசு,நிருவாகம்)
• காற்றில் கலந்த பேரோசை
• புரட்சிக்கவி
• சிந்தனைப்பட்டிமன்றம்
கற்பித்தல் நோக்கங்கள்:
கருத்துகளைத் தொகுத்து கட்டுரைக்கும் திறன் பெறுதல்.
கவிதையில் புரட்சிக்கருத்துகள் எழுச்சியுடன் வெளிப்படுத்தப்படும் நயம் அறிந்து சுவைத்தல்.
பண்பட்ட முறையில் கருத்துகளை முன்வைத்து பேசுந்திறனையும் மொழியாளுமையையும் வளர்த்தல்.
கற்பித்தல் உபகரணங்கள்:
மடிக்கணினி
கரும்பலகை
இணையம்
ஆசிரியர் செயல்பாடு:
காற்றில் கலந்த பேரோசை
ஜீவா பற்றிய ஆவணப்படம் காட்டல்.
ஜீவாவின் பேச்சாற்றல் பற்றி விளக்குதல்.
நல்லபேச்சு என்பது செய்திகளைக்கொட்டுவதன்று;எடுத்துக் கொண்ட செய்தியை மக்களின் மனங்கவரும் வகையில் சொல்வதே என்பதை ஜீவாவின் பேச்சு மூலம் விளக்குதல்.
சுந்தரராமசாமி பற்றிக் கூறுதல்.
அவர்தம் நூல்களை அறிமுகம் செய்தல்.
புரட்சிக்கவி:
மக்களாட்சிச்சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு அரசு என்பது மக்களுக்கானதே என்று கூறுதல்.
பாரதிதாசன் எழுதிய நூல்கள் குறித்துக் கூறுதல்.
புரட்சிக்கவி காப்பியத்தின் முன்கதைச் சுருக்கம் கூறுதல்.
பாடலை இராகத்தோடு பாடுதல்.
அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல்.
இலக்கணக்குறிப்பு, புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் குறித்து விளக்குதல்.
சிந்தனைப்பட்டிமன்றம்
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்துதல்.
மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டும் வகையில் பட்டிமன்றத்தில் பங்கேற்கச்செய்தல்.
பட்டிமன்றத்துக்கு தேவையான கருத்துக்களை கலந்தாலோசிக்கச் செய்தல்.
மாணவர் செயல்பாடு
பேச்சுக்கலையின் திறனை அறிந்து, வகுப்பில் குறிப்பிட்ட தலைப்பில் பேச முற்படுதல்.
பொதுவுடைமை முன்னோடிகளுள் ஒருவரான ஜீவா குறித்த செய்திகளைத் தொகுத்தல்.
அரசாட்சி, மக்களாட்சி இரண்டிற்குமான வேறுபாடுகளைக் கூறுதல்.
பாடலைப் பொருளோடு வாசித்தல்.
பாடலுக்கான பொருளைத் தொகுத்துக் கூறுதல்.
பட்டிமன்றத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தல்.
தான் சார்ந்த தலைப்புக்கேற்றவாறு கருத்துகளைத் தொகுத்துப் பேசுதல்.
மதிப்பீடு:
நாழிக்குள் திணிக்கும் மருந்து போல என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.
அலைகடல்,புதுக்கியவர் - இலக்கணக்குறிப்பு தருக.
நீரோடை - புணர்ச்சி விதி கூறுக.
சிந்தனை பட்டிமன்றத்தின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக.
கற்றல் விளைவுகள்
பேச்சாற்றல் குறித்து அறிந்து கொள்கின்றனர்.
கருத்துக்களைத் தொகுத்துக் கட்டுரையாக்கும் திறனைப் பெறுகின்றனர்.
மக்களாட்சியின் மகத்துவம் குறித்து அறிகின்றனர்.
பண்பட்ட சிந்தனைகளைத் தொகுத்து கூறும் ஆற்றல் பெறுகின்றனர்.
குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கான கருத்துக்களைத் தொகுக்கும் திறன் பெறுகின்றனர்.
தொடர்பணி
ஜீவானந்தம் பற்றிய செய்திகளை தொகுத்து வகுப்பறையில் படித்துக்காட்டுக.
மக்களாட்சியின் சிறப்பைப் பற்றி கட்டுரை எழுதுக.
மனித வாழ்வை உயர்த்துவதற்கு பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி 🙏
இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.
8012906557.
இலக்கணங்கற்க,
'தமிழ்நதி' வலையொளி பாருங்கள்.
https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w
முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)
https://www.facebook.com/groups/419403600069598/?ref=share
புலனத்தில் இணைய (WhatsApp)
https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக