ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தமிழ் பாடி/தமிழ்ப்பாடி எது சரி? தெரிந்து கொள்ளுங்கள்

 தமிழ்பாடியா?தமிழ்ப்பாடியா?

இரண்டு சொற்கள் புணரும்போது நிலைமொழி, வருமொழி இரண்டும் பெயர்ச் சொற்களாக இருந்தால் இடையில் வல்லினம் மிகும். 

தமிழ்ப்பாடி என்ற சொல்லில் நிலைமொழியான 'தமிழ்' என்பது சிறப்புப் பெயராகவும் வருமொழியான 'பாடி' என்பது பொதுப் பெயராகவும்அமைந்த இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

பாடி என்பது முல்லை நிலத்து சிற்றூராதலால் இது பெயர்ச்சொல்லாயிற்று. இதுவே பாடி என்பதை இகர ஈற்று வினையெச்சமாகக் கொண்டால் இடையில் வல்லினம் மிகாது.

"தமிழ் பாடி மகிழ்ந்தான்"

இதில் பாடி என்பது இகரவீற்று வினையெச்சம். மேலும் தமிழ் பாடி வேற்றுமைத்தொகையுமாம்.

இது தமிழைப்பாடி என விரியும்.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

ஊர்ப்பெயராக நாம் எழுதும் போது வல்லினத்தை மிகுத்து "தமிழ்ப்பாடி" என்றே எழுத வேண்டும்



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...