புதன், 21 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு இயல் மூன்று சிறு தேர்வு

         பத்தாம்வகுப்பு இயல் 3 

காலம்: 1.30மணி.         மதிப்பெண்கள்:30 

குறுவினாக்கள்.  5×2=10

1. விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக. 

வாருங்கள்; தங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி .

வந்து அமருங்கள்; தண்ணீர் அருந்துங்கள் 

நீங்கள் முன்னரே சொல்லி இருந்தால், உங்களை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்து வந்திருப்பேனே. 

தேநீர் சாப்பிடுங்கள்; கொஞ்சம் ஓய்வெடுங்கள்; உணவு தயாரானதும் அழைக்கிறேன்.

2.'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கிய செய்தி விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாக உங்கள் கருத்தை குறிப்பிடுக. 

விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத பொருள் அல்ல. மாறாக, விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்க வேண்டிய நல்ல மனநிலை வேண்டும். விருந்தினர்கள் எத்தனை முறை வந்தாலும் முதல் முறையாக உபசரிப்பதைப்போன்றே வரவேற்க வேண்டும். சங்ககாலத்தில் தேனும் திணை மாவும் கொடுத்து விருந்தினரை உபசரித்த செய்தியை இலக்கியத்தில் நாம் அறியலாம். விருந்தினர்களை உபசரிக்க பணம் தேவையில்லை. நம்மிடம் என்ன உள்ளதோ? அதைக் கொடுத்து முகமலர்ச்சியுடன் வரவேற்றாலே போதுமானது. 

3. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத் தொடரானது. அப்படியானால் 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்? 

சிரித்துசிரித்துப் பேசினார்

4. 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்'- இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக 

கூத்தனை ஆற்றுப்படுத்தும் கூத்தனொருவன் நன்னனின் புகழைக்கூறும் விதமாக இத்தொடர் அமைந்துள்ளது

தொடரின் பொருள் 

நெய்யில் வேகவைத்த பெரிய மாமிசத்துண்டுடன் திணைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் என்பதே இதன் பொருளாகும் 

இறடிப்பொம்மல் - தினைச்சோறு

5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை? 

பாரதியார் கவிஞர் -பெயர்ப் பயனிலை .

நூலகம் சென்றார் - வினைப் பயனிலை .

அவர் யார்? - வினாப் பயனிலை. 

                     பகுதி 2 

சிறுவினாக்கள்  4×5=20

1. "கண்ணே கண்ணுறங்கு 
காலையில் நீயெழும்பு   
மாமழை பொய்கையிலே
 மாம்பூவேகண்ணுறங்கு
 பாடினேன்தாலாட்டு 
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு"
 தாலாட்டு பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக

கண்ணே கண்ணுறங்கு -விளித்தொடர் 

காலையில் நீயெழும்பு - ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்.

மாமழை - உரிச்சொற்றொடர் 

மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் 

பாடினேன் - வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி -அடுக்குத்தொடர். 

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப்பொருள்கள் யாவை? 

முல்லை நிலம் 

காடும் காடுசார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும்.

காட்டில் விளையும் செந்நெல், சாமை, கேழ்வரகு,கம்பு, சோளம் ,பயிறு வகைகள் ,தினை போன்றவையும் கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பால், இறைச்சி முதலியனவும் முல்லை நிலத்தின் உணவுப் பொருள்கள் ஆகும். 

மருத நிலம் 

வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருத நிலமாகும் 

உழவுத்தொழில் மூலம் கிடைக்கக்கூடிய நன்செய் நில உணவுகளான நெல் ,காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுசிறு நீர் நிலைகளில் கிடைக்கும் மீன்கள், மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும் பாலில் இருந்து கிடைப்பவை மருதநிலத்தின் உணவுப் பொருள்களாகும்.   

3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர் 

திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. 

இப்படியாக காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக. 

இன்று வீட்டுக்குத்திண்ணை வைத்து கட்டுவதில்லை. அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதும் இல்லை.

காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. 

பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் உபசரித்து வழியனுப்பும் வரை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதை காண முடிகிறது.

4.கூத்தனை கூத்தன் ஆற்றுப் படுத்தும் முறையை கூத்தராற்றுப்படை எப்படிக் காட்டுகிறது? 

கூத்தன் தான் பெற்ற செல்வத்தை கூறி எதிர் வந்த கூத்தனிடம் நீயும் அவ்வள்ளலை நாடினால்  என்னைப் போன்று செல்வம் பெற்று வளமோடு வாழலாம் என வழிப்படுத்துவதேகூத்தராற்றுப்படை ஆகும். 

நன்னனைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம், "நீங்கள்செல்லும் வழியில் மலைப்பக்கத்தில் புதுவருவாயுடைய கானவர்களின் சிற்றூர் அமைந்திருக்கும். இது மானமும் வலியமுயற்சியுடன் போர்புரியும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டது. அவ்வூரில் சென்று'நன்னனின் கூத்தர்கள்' என்று கூறுங்கள். அவர்கள், உங்களை தங்கள் உறவினர்கள் போல் வரவேற்று இனியசொற்களைக் கூறி, உங்களின் களைப்பு நீங்கும் படி, நீங்கள் உண்பதற்குப் பெரிய மாமிசத்துண்டையும் தினைச்சோற்றையும் தந்து வரவேற்பார்கள். இப்பாடலில் நன்னனின் வீரத்தையும் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிகழும் விருந்தோம்பல் பற்றியும் விளக்கி கூத்தனை வழிப்படுத்தல் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 





திங்கள், 12 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு சிறு தேர்வு வினாத்தாள்

                       பத்தாம் வகுப்பு 

                        தமிழ்-சிறுதேர்வு 

அ. ஐந்து வினாக்களுக்கு விடையளி 

1. வேங்கை என்பதனைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!-இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சிய காப்பியங்களின் பெயர்களை எழுதுக.   

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல தாறுவாழைப் பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன. 

மேற்கண்டதொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. " உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் "   இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகை யைச்சுட்டி அதன் இலக்கணம் தருக.

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. 

ஆ. நான்கு வினாக்களுக்கு விடையளி. 

6. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? 

7. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'-இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க. 

8. அறிந்தது, அறியாதது, புரிந்தது ,புரியாதது,தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும்.

    இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக. 

9. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக

சனி, 10 ஜூலை, 2021

பத்தாம் வகுப்பு இயல் 1 சிறு தேர்வு

1.வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. 
வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும். 
வேம்+ கை எனத்தொடர்மொழியாகப் பிரிந்து வேகின்ற கை என பொருள் தரும். 
------------------------+++----------------------------- 
2. மன்னும் சிலம்பே மணிமேகலை வடிவே! 
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! 
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக. 
இப்பாடலில் இடம்பெற்ற ஐம்பெருங் காப்பியங்கள் 'சிலப்பதிகாரம் மணிமேகலை'. 
எஞ்சிய காப்பியங்கள்:
சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. 
-----------------------------+--------------------------
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக. 
சரியான தொடர்கள்:
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 
பிழையான தொடர்: 
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 
பிழைக்கான காரணம்: 
தாறு - வாழைக்குலை சீப்பு - வாழைத்தாற்றின் பகுதி. எனவே, வாழைத்தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும். 
---------------------------------------------------------- 
4.உடுப்பதூஉம் உண்பதூஉம் கானின் பிறர்மேல் வடுக்காண்வற்றாகும் கீழ்''-
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக. 
அளபெடையின் வகை: இன்னிசை அளபடை.
இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக குறில் நெடிலாக மாறி, அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 
-------------------------------------------------------------
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. 
இசை விமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். 
ஒரு முறை ஒரு பெரிய வித்வான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது 'அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்" என்று சிலேடையாகக் குறிப்பிட்டார். 
------------------------------------------------------------
சிறுவினாக்கள்
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? 
தமிழன்னையை வாழ்த்துதல்
தமிழன்னைஅன்னை மொழி யானவள். 
அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் . 
பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி. 
கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள். 
பாண்டிய மன்னனின் மகள். 
திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள். 
பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும், நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள். 
அதனால் பொங்கி எழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார். 
--------------------------------------------------------------

2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. 
1. வயலில் நெல்நாற்று நட்டனர். 
2. சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது. 
3. வாழைக்குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன். 
4. வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன். 
5. குளக்கரையில் பனைவடலியைக் கண்டேன். 
------------------------------------------------------------ 
3. அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம் அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும் - இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்று களை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக. 
அறிந்தது -அறிதல், புரிந்தது -புரிதல், தெரிந்தது-தெரிதல், பிறந்தது -பிறத்தல், 
அழியாதது- அறியாமை , புரிந்தது-புரியாமை, தெரியாதது -தெரியாமை, பிறவாதது- பிறவாமை. 
-------------------------------------------------------------- 
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.


திங்கள், 5 ஜூலை, 2021

பத்தாம் வகுப்புஇயல் 2 சிறுவினாக்கள்

1. சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக் காற்று :  வணக்கம் செயற்கை காற்றே!

மின்விசிறிக்காற்று : வணக்கம் .

சோலைக் காற்று : நான் இல்லாவிட்டால் நீ இல்லை தானே?

மின்விசிறிக்காற்று : நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாவிட்டால் நான் இல்லை

சோலைக் காற்று : நீ ஏன் வெப்பத்தையே கொடுக்கிறாய்

மின்விசிறிக்காற்று : அது என்னால் இல்லை. நான் மனிதனால் படைக்கப்பட்டவன் என் நிகழ்வுகள் அனைத்திற்கும் மனிதனே காரணம்

சோலைக் காற்று : நீ மனிதர்களுக்கு உடல் கேடுகளை உண்டாக்குகிறாய் 

மின்விசிறி காற்று : உன்னைப்போல் இயற்கையாக நானில்லையே! 

2. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக

மழை நின்றவுடன் மெல்லிய காற்றின் குளிர்ச்சியை உணர்கிறேன் ஜன்னல் வழியே தெரியும் மரக்கிளைகளின் இலைகளில் இருந்து சொட்டும் நீர்;மேகம் நிறைந்த நீல வானம்; மழை நீர் தேங்கிய குட்டையில் சிறுவர்கள் குதித்து விளையாடும் சப்தங்கள்; மழையில் நனைந்தபறவைகளின்கிசுகிசுப்பு ;கிராமியச்சூழல் தெருவில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்தல் மழைச்சாரலோடு மண்வாசனை இத்தனையும் இயற்கை வண்ணமே.






பத்தாம் வகுப்பு இயல் இரண்டு வினா விடைகள்

 குறுவினா 

1. 'நமக்கு உயிர் காற்று 
   காற்றுக்கு வரம் மரம்- மரங்களை 
  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்
'

-இதுபோன்று உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்க தொடர்களை எழுதுக. 

மரம் வளர்ப்போம்! தூய காற்றைப் பெறுவோம்! 

உயிர்வளிபெற மரங்களுக்கு உயிர் கொடுப்போம். 

2. வசன கவிதை- குறிப்பு வரைக. 

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

3. தண்ணீர் குடி தயிர் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர் களை விரித்து எழுதுக தொடரில் அமைக்க

தண்ணீர் குடி -தண்ணீரைக் குடி 

தயிர்க்குடம்- தயிரை உடைய குடம் 

காலை எழுந்தவுடன் தண்ணீரைக் குடி.

தெருவில் பெண்ணொருத்தி தயிரைஉடையகுடத்தைச் சுமந்து சென்றாள். 

4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக. 

தம்பி அழாதே! பெற்றோர் விரைவில் வந்து விடுவர்.

பெற்றோர் வரும்வரை நாம் இருவரும் இணைந்து விளையாடலாம். 

உனக்கு தேவையான இனிப்புகளை அண்ணன் வாங்கித் தருகிறேன். 

5.மாஅல் பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக. 

மாஅல் - திருமால் 

இலக்கணக்குறிப்பு-செய்யுளிசை அளபெடை . 

ஆ)சிறுவினாக்கள் 

1.உயிராக நான், பல பெயர்களில் நான் நான்கு திசைகளிலும் நான் இலக்கியத்தில் நான் முந்நீர் நாவாய் ஓட்டி யாக நான் முதலிய தலைப்புகளில் காற்று தன்னை பற்றி பேசுகிறது இவ்வாறு நீர் தன்னை பற்றி பேசினால் உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக. 

அமிழ்தமாக நான் , ஆற்றலாக நான், உலக உயிர்களுக்கு ஆதாரமாய் நான், பல நிறங்களில் நான், முந்நீராய் நான், உணவாய் உற்பத்திப் பொருளாய் நான்... என நீர் தன்னைப் பற்றிப்பேசும். 

-------------------------------------------------------------

2.சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக் காற்று :  வணக்கம் செயற்கை காற்றே!

மின்விசிறிக்காற்று : வணக்கம் .

சோலைக் காற்று : நான் இல்லாவிட்டால் நீ இல்லை தானே?

மின்விசிறிக்காற்று : நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாவிட்டால் நான் இல்லை

சோலைக் காற்று : நீ ஏன் வெப்பத்தையே கொடுக்கிறாய்

மின்விசிறிக்காற்று : அது என்னால் இல்லை. நான் மனிதனால் படைக்கப்பட்டவன் என் நிகழ்வுகள் அனைத்திற்கும் மனிதனே காரணம்

சோலைக் காற்று : நீ மனிதர்களுக்கு உடல் கேடுகளை உண்டாக்குகிறாய் 

மின்விசிறி காற்று : உன்னைப்போல் இயற்கையாக நானில்லையே!  

-------------------+++++---------------------------------

3. தோட்டத்தில் மல்லிகை பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் தொட்டியில் குடி நீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக. 

பூங்கொடி - அன்மொழித்தொகை (பூங்கொடியாகிய பெண் )

ஆடு மாடுகள் - உம்மைத்தொகை (ஆடும் மாடுகளும் )

குடிநீர் - வினைத்தொகை 

சுவர்க்கடிகாரம் -இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை. 

------------------------------------------------------------

4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக

மழை நின்றவுடன் மெல்லிய காற்றின் குளிர்ச்சியை உணர்கிறேன் ஜன்னல் வழியே தெரியும் மரக்கிளைகளின் இலைகளில் இருந்து சொட்டும் நீர்;மேகம் நிறைந்த நீல வானம்; மழை நீர் தேங்கிய குட்டையில் சிறுவர்கள் குதித்து விளையாடும் சப்தங்கள்; மழையில் நனைந்தபறவைகளின்கிசுகிசுப்பு ;கிராமியச்சூழல் தெருவில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்தல் மழைச்சாரலோடு மண்வாசனை இத்தனையும் இயற்கை வண்ணமே






மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...