இலக்கிய நயம் பாராட்டுக.
முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
திரண்ட கருத்து
கல்வியில் சிறந்த புலவர்களால் முச்சங்கத்தை அமைத்து, அச்சங்கத்தில் சொற்சுவை,பொருட்சுவை மிகுந்த கவிதைகளை உருவாக்கி, அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியவள் தமிழ்த்தாய்.
மோனைநயம்
முதலெழுத்து ஒன்றிவருவது மோனை.
முச்சங்கம்-முதுபுலவர்
அச்சங்கம் -அளப்பரிய
சொற்சங்கம் - சுவைமிகுந்த
அற்புதங்கள் - அமைத்த
எதுகைநயம்
இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.
முச்சங்கம் - அச்சங்கம்
சொற்சங்கம் - அற்புதங்கள்
இயைபுநயம்
இறுதி எழுத்து,சீர் ஒன்றி வருவது.
கூட்டி,பெருமாட்டி
சந்தநயம்
எதுகை, மோனைகளால் பாடலானது இசை நயம் , சந்தநயம் மிகுந்து வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக