பதினோராம்
வகுப்பு
முக்கிய குறுவினாக்கள்
1.
நேரடிமொழி விளக்குக
2.
பாயிரத்தின் பிற பெயர்கள் யாவை?
3.
மொழிமுதல்எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
4.
மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
5.
உயிரீறு,மெய்யீறு விளக்குக
6.
உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
7.
குரங்குக்குட்டி புணர்ச்சி விதி கூறுக.
8.
பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
9.
உயிரெழுத்து பன்னிரண்டு
திருக்குறள் நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழத்துகள் அமைந்துள்ளன?
10.
இனம், மொழி குறித்த ரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக
11 . தொழுஉரம் என்றால்
என்ன?
12.
மதிப்புக் கூட்டு பொருள் விளக்குக
13.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்பு கூட்டு பொருள்கள் யாவை?
14.
ஏதிலிக்குருவிகள்
எங்கோ போயின.- தொடரின் பொருள் யாது?
15.
காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?
16.
திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் யாவை?
17.
திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்கருவிகள் யாவை?
18.
உடம்படுமெய்ப்புணர்ச்சி விளக்குக
19.
குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன்
விளக்குக
20.
ய் வ் ஞ் ட் ற் ந் மெய்களுக்கான வேற்றுநிலை உடனிலை மெய்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள்
தருக
21.
அலர்ந்து பகுபத
உறுப்பிலக்கணம் தருக
22.
தமிழ்நாட்டின் மாநில மரம் சிறு குறிப்பு வரைக
23.
காவடிச்சிந்து குறிப்பு தருக
24.
பொதுவியல் திணை விளக்குக
25.
பொருண்மொழிக்காஞ்சித் துறை விளக்குக
26.
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
27.
காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக
28.
கோட்டை என்னும் சொல்
திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது?
29.
குறுந்தொகை பற்றி நீங்கள் அறியும் செய்தி யாது?
30.
தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?
31.
சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
32.
மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
33.
தீயினால் சுட்டதை பொன் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவர் கூறுவது ஏன்?
34.
மகள் நிலையுரைத்தல்- துறை விளக்கம் தருக
35.
உவமை எவ்வெற்றின் அடிப்படையில் தோன்றும்?
36.
உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை ஆய்க.
37.
சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலை பற்றி இராசமாணிக்கனாரின் கருத்து யாது?
38.
உவமை - உருவகம் வேறுபடுத்துக
39.
கொழுஞ்சோறு
புணர்ச்சி விதி தருக
40.
மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் இக்கூற்றினைஉறுதிப்படுத்துக
41.
ஆனந்தரங்கரின் வருணனைத்திறனுக்கு சான்று தருக
42.
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை