நாள்: (12.6-23-16-6.23)
வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: இயல் 1
கவிதைப்பேழை- இளந்தமிழே
உரைநடை: தமிழ்மொழியின் நடைஅழகியல்
கற்றல் நோக்கங்கள்
1. மொழியின் சிறப்பையறிதல்
2. மொழியின் பழஞ்சிறப்பு அறிதல்
3. தமிழ்வளர்த்த சான்றோர் பற்றியறிதல்.
4.தமிழில் புதுமைகளைப்புகுத்த விழைதல்
5. இலக்கியநடை பற்றியறிதல்.
6. சங்க இலக்கிய நடையியலையறிதல்.
7.கலையும்பொருளும் இரண்டறக்கலந்தது என அறிதல்.
கற்றல்விளைவுகள்
தமிழின் சிறப்பை அறிகின்றனர்
பாரி முதலான வள்ளல்களை அறிகின்றனர்.
சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றியும் அவர்தம் இலக்கியப்பணி பற்றியுமறிதல்
அழகியல் என்பது மொழிசார்கலை என உணர்கின்றனர்
கலைமுழுமை,நடையியல்,ஒலிக்கோலங்கள் போன்றவற்றை அறிகின்றனர்
தொகைமொழிகள் தொடரியல்போக்குகள் பற்றியறிதல்.
துணைக்கருவிகள்
படங்கள், மடிக்கணினி விளக்க அட்டைகள்
முன்னறிவு
தமிழ்வளர்த்த சான்றோர்களின் பெயர்களைப்பட்டியலிடுதல்
கடையேழு வள்ளல்களின் பெயர்களைக்கூறச்செய்தல்.
முச்சங்கம் பற்றி வினவுதல்
ஆர்வமூட்டுதல்
தாய்மொழிதான் நம் அடையாளம். இக்கருத்து குறித்துக்கலந்துரையாடல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
இளந்தமிழே!
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையாய் வடிக்க செந்தமிழே ஏற்றமொழியாகும்.
முச்சங்கத்தில் வீற்றிருந்து வள்ளல்களால் வளர்க்கப்பட்ட மொழி.
பழமைநலம் புதுக்குதற்கு தமிழாகிய குயிலே கூவு.
கவிஞர் சிற்பியின் கவிதைநூல்கள் குறித்து விளக்குதல்.
இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் முதலிய மொழிப்பயிற்சிகளை விளக்கமாகக் கற்பித்தல்.
தமிழ்மொழியின் நடை அழகியல்
நடையியல் விளக்கம் கூறுதல்
கவிதைநடையை விளக்குதல்
நடையியல் குறித்த தொல்காப்பியச்செய்திகளைக்கூறுதல்.
ஒலிக்கோலங்கள் பற்றி சான்றுகளுடன் விளக்குதல்.
சொற்புலம் ,தொடரியல்போக்குகள் போன்றவற்றை சங்க இலக்கியப்பாடல்களின் மூலம் விளக்குதல்.
மாணவர் செயல்பாடு
தமிழைவளர்த்த வள்ளல்களின் பெயரைப்பட்டியலிடல்
முச்சங்கங்கள் குறித்து உரையாடுதல்.
தமிழ்மொழியின் பழமைநலத்தைப்- புதுக்குவதற்கான கருத்துகள் கூறுதல்
மொழிவளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து உரையாடுதல்.
கவிதையின் நடை அழகியலை அறிதல்.
ஒலிக்கோலங்கள் நிறைந்த புதுக்கவிதைகள் கூறுதல்
மறுதலைத்தொடர்கள் அமைந்த சங்கப்பாடல்களைத்தொகுத்தல்.
உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றைச்சுட்டிக்காட்டல்.
வலுவூட்டல்
பாடலின் பொருளை மீண்டும் கூறுதல்.
கடினச்சொற்களுக்குப்பொருள் கூறுதல்
எளிய வினாக்கள் கேட்டல்.
ஒலிக்கோலங்கள், சொற்புலம், தொடரியல்போக்குகள் குறித்து உரையாடுதல்.வினாக்கள் கேட்டல்.
மதிப்பீடு
1. உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த தமிழே ஏற்றமொழி விளக்குக.
2. கவிஞர் எவற்றை வியந்துபாட வேண்டும் என குறிப்பிடுகிறார்?
3. 'பழமைநலம் புதுக்குதற்கு' - தொடரின் பொருள் தருக.
4. மொழியியல் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
5. கவிதை மறுதலைத்தொடர்கள் -விளக்குக.
6. ஒலிக்கோலங்கள் விளக்குக
தொடர்பணி
'மொழிவளர்ச்சியில் எனது பங்கு' ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
'தாய்மொழிக்கல்வி' குறித்த மேடைப் பேச்சுக்கான உரையை உருவாக்குக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலக்கணக்காணொளிகளுக்கு
https://youtube.com/@Tamilnathi
நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்
https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL
நறும்பூந்தமிழ் Telegram group
https://t.me/+k479QbSbqxo1YjZl
நன்றி 🙏
இரா.முருகன்
முதுகலையாசிரியர், அரசூர்