சனி, 1 அக்டோபர், 2022

நாலடியார்

 பாடல் எண் 2

செல்வம் நிலையாமை

துகள்தீர் பெருஞ்செல்வம்- தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க 

அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும் .

பதவுரை: 

துகள்தீர்-குற்றமிலாத 

தோன்றியக்கால் - பெறுங்காலத்தில் 

பகடு- எருமை 

கூழ்-உணவு 

அகடுற - நடுவுநிலையாக நிலைத்திருத்தல்

சகடக்கால் -வண்டிச்சக்கரம் 

கருத்துரை

செல்வமானது யாரிடமும் நிலைத்து நிற்பதில்லை.சக்கரம் மேலும் கீழும் சுழல்வதுபோல் செல்வமானது இன்றொருவரிடமும் நாளை மற்றவரிமுமாக மாறிக்கொண்டே செல்லும் தன்மையது.அதனால், நீங்கள் குற்றமிலாத செல்வத்தைப்பெறும் காலத்தில் பூட்டி வைக்காமல் எருமைகள் நடந்ததால் கதிரிலிருந்து பிரிந்த தானியங்களை கூழாக்கி எல்லாரோடும் பகிர்ந்து உண்ணுங்கள்.

தொகுப்புரை: 

செல்வம் நிலையற்றது.நீங்கள் செல்வத்தைப்பெறும் காலத்தில் எல்லாரோடும் பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வீர்.



கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...