தமிழா! நீ எழுதுவது தமிழா?
தமிழ்மொழிக்கென்று சில தனித்தன்மைகள் உள.இத்தனித்தன்மையே மொழியின் காப்பரணாகும். பிறமொழிச்சொற்கள் கலவாமல் தமிழின் தூய்மையைக்காக்க ஒவ்வொரு தமிழரும் முன்வரவேண்டும்.
ர,ல,மெய்யெழுத்து- இவைசொல்லுக்கு முதலில் வரக்கூடாது.இவ்வெழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெற்றால் பிறமொழிச்சொற்கள் தமிழில் கலப்பதற்கு ஏதுவாகும்.
தவிர்க்கவியலாத பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது தமிழ்வடிவில் பயன்படுத்த,நம்முன்னோர் வழிகாட்டியுள்ளனர்.
ராமமூர்த்தி, லட்சுமி,க்ரியா
இப்பெயர்களைத் தமிழில் எழுதும்போது முதலெழுத்தாக அ இ உ போன்ற முன்னொட்டுகளைப்பயன்படுத்துக.
இராமமூர்த்தி,இலட்சுமி (இலக்குமி)
மெய்யெழுத்தாயின் தமிழுக்கேற்றவாறு விகுதிகளை இணைத்துத்தமிழாக்கலாம்.
ப்ரியா என்பதை பிரியா என்றும், க்ரீஷ் என்னும் பெயரை கிரீசு என்றும் எழுதலாம். இதுவெல்லாம் தவிர்க்கவியலாத சூழலில் மட்டுமே. இப்பெயர்களைத்தவிர்த்து தனித்தமிழில் பெயர்வைத்தால் குழப்பமே மில்லை.
ராமமூர்த்தி என்பவரின் மகன் இனியன்
தம்பெயரை ரா.இனியன் என்றெழுதுகிறான்.முன்பெல்லாம் தமிழாசிரியர்கள் இதுபோன்று எழுதும்போது பிழையைச்சுட்டிக்காட்டி,
இரா.இனியன் என்றெழுது எனக்கூறினார்.
ஆனால், தமிழாசிரியரொருவர் வருகைப் பதிவேட்டில் எழுதியதைப்பார்வையிட்டேன்
ரா.மாலா , ல.அன்புச்செல்வன்
தமிழாசிரியரே இவ்வாறென்றால் தமிழ் தழைக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக