1.ஒருமுக எழினி:
ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும் ஒருமுகத்திரை.
பொருமுக எழினி:
இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடொன்று பொருந்தும்படியான பொருமுகத்திரை.
சிறுவினா:
நாட்டிய அரங்கின் அமைப்பு:
• சிற்பநூலில் சொல்லப்பட்டவாறு நன்னிலத்தைத் தேர்வு செய்தனர்.
• ஒரு சாண் அளவு கொண்ட மூங்கிலை புண்ணியமலையிலிருந்து கொண்டுவந்து இருபத்துநான்கு விரலளவு கொண்ட கோலாக்கினர்.
• எழுகோல் அகலம் எண்கோல் நீளம் ஒருகோல் உயரத்தில் அரங்கமைத்தனர்.
•உத்தரப்பலகை இடைநிலம் அறுகோல் அளவில் இருந்தது.
• அரங்கிற்கேற்ப இருவாயில்களை அமைத்தனர்.
• தூணின் நிழல் மேடையில் விழாதவாறு அழகிய விளக்குகளையும் அமைத்தனர்.
• மேல்நிலையில் ஐம்பூதங்களையும் எழுதி ஓவியவிதானத்தையும் முத்துமாலைகளையும் அமைத்தனர்.
• ஒருமுக எழினி,பொருமுக எழினி,கரந்துவரல் எழினியையும் பொருத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக