சனி, 8 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு -பாடக்குறிப்பு அக்டோபர் முதல் வாரம்

நாள்: அக்டோபர் முதல் வாரம் 

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு

பாடம்: தமிழ் 

தலைப்பு: இயல் 6(சிறுகை அளாவிய கூழ்)

                   1. கவிதைகள்

                    2.திரைமொழி 

                    3. நடிகர்திலகம்

கற்பித்தல் நோக்கங்கள்

• திரைக்கலையின் நுட்பங்களையும் கலை வெளிப்பாடுகளையும் அறியும் திறன் பெறுதல். 

• புதுக்கவிதையின் வடிவம்,பொருண்மை பற்றியறிதல். 

• நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் மொழிவழி வெளிப்படுத்தும் ஆற்றல் அடைதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

இணையம்,வலையொளி,தமிழிணையக்கல்விக்கழகம்- இணைப்பு, கரும்பலகை

ஆயத்தப்படுத்தல் 

1.திரைப்பட உருவாக்கம் குறித்து கலந்துரையாடல். 

2. மாணவர்களைக்கவர்ந்த புதுக்கவிதையைக் கூறச்செய்தல். 

3. நடிகர்திலகம் பற்றிய சுவையான செய்திகளைக் கூறுதல்.

ஆசிரியர் செயல்பாடு

திரைமொழி

திரைப்படம் தோன்றிய வரலாறு கூறுதல்.

திரைக்கதை,காட்சியின் ஆற்றலை விளக்குதல். வலையொளி காட்டி விளக்குதல். 

அண்மைக்காட்சி,சேய்மைக்காட்சி ,நடுக்காட்சி மூன்றையும் வலையொளிமூலம் விளக்குதல்.

படத்தொகுப்பு, ஒலிப்பதிவு நடைபெறும் முறையை விளக்குதல்.

நல்லதிரைப்படத்தையும் திரைப்படநூல்கள் குறித்தும் கூறுதல். 

கவிதைகள்

நகுலனின் கவிதைகள் பற்றிக்கூறுதல்.

கவிதைகளின் பொருள் குறித்து கலந்துரையாடல். 

நகுலனின் கவிதைப்பணி குறித்துக் கூறுதல். 

நடிகர்திலகம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கூறுதல்.

கட்டுரையாளர் நடிகர்திலகம் சந்திப்பு குறித்து உணர்வுப்பூர்வமாகக்கூறுதல். 

நடிகர்திலகத்தின் நடிப்புத்திறனை விளக்குதல்.

வலையொளி மூலம் சிவாஜியின் நடிப்புத்திறனைக்காட்டுதல். 

மாணவர் செயல்பாடு

திரைப்படஉருவாக்கம் குறித்து கலந்துரையாடல். 

புதுக்கவிதை சிலவற்றைக் கூறுதல் .

புதுக்கவிதையின் வடிவம் குறித்து கலந்துரையாடல்.

நடிப்பில் உச்சந்தொட்ட நடிகர்திலகத்தின் திரைப்படங்களையும் நடிப்புத்திறனையும் கூறச்செய்தல். 

உரைநடையைப் பொருளோடு வாசித்தல்.

மதிப்பீடு

திரைப்படம் தோன்றிய வரலாற்றைக் கூறுக. 

நகுலன் எழுதிய கவிதைநூல்கள் யாவை? 

சிவாஜிகணேசன் பெற்ற விருதுகள் யாவை?

கற்றல்விளைவுகள்

திரைப்பட உருவாக்கம் பற்றி அறிந்து கொண்டனர். 

புதுக்கவிதை பற்றியும் அதன் பொருண்மை பற்றியும் அறிந்து கொண்டனர். 

தென்னிந்திய சினிமாவின் நடிப்புச் சக்கரவர்த்தி பற்றியும் அவர்தம் நடிப்புத் திறன் பற்றியும் அறிந்து கொண்டனர். 

தொடர்பணி

1. நீ கண்டுகளித்த திரைப்படத்தின் திரைநுட்பங்கள் குறித்து விவாதிக்க. 

2. உனக்குப்பிடித்த புதுக்கவிதைகளைத் தொகுத்து தொகுப்பேடு உருவாக்குக. 

3. சிவாஜிகணேசன் குறித்த பிறசெய்திகளைத் தொகுத்து வகுப்பறையில் இரண்டுநிமிடம் பேசுக.





கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...