நாள்: 26.6.23-30.6.23
வகுப்பு: பதினோராம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: ஏதிலிக்குருவிகள்.
காவியம்
கற்றல் நோக்கங்கள்
சூழல் சீர்கேட்டால் அழியும் உயிரின வகைகளை அறிதல்.
நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி அறிதல்.
இயற்கை சமநிலை வரும்போது ஏற்படக்கூடிய இழப்பு உயிரின அழிவு குறித்து அறிதல்.
கற்றல் விளைவுகள்
சூழலியல் சீர் கேட்டால் சிட்டுக்குருவிகளின் அழிவைப் பற்றியும் இயற்கை மாசுபாடு குறித்தும் அறிதல்.
பிற உயிரினங்களின் துன்பத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாத்தல்.
துணைக் கருவிகள்
படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி
ஆர்வமூட்டுதல்.
உன் வீட்டு அருகே சிட்டுக்குருவிகளை பார்த்ததுண்டா
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாக நீ எதை கருதுகிறாய்
பறவைகளைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்
கற்றல் கற்பித்தல் பாடப்பொருள்
ஆசிரியர் செயல்பாடு
உயிர்களின் இருப்பு சூழலியல் மாற்றத்தால் மட்டுமே நிகழ்கிறது என்பதை கூறுதல். இயற்கை சமநிலை, சூழல் மாறுபடுவதால் ஏற்படும் உயிரின இழப்பு குறித்து கூறுதல்.
ஒவ்வொரு உயிரும் இயற்கைச் சமநிலையை எவ்வாறு பேணுகிறது என்பதை படங்களைக் காட்டி விளக்குதல்.
சிட்டுக்குருவிகள் அழிவுக்கு காரணங்களைப்பட்டியலிடல்.
அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கும் வாழ்தலுக்கும் மழையே அடிப்படைக் காரணம் என்பதை விளக்குதல்.
அழகிய பெரியவன் குறித்தும் அவர் 'தகப்பன்கொடி'புதினத்திற்காக பெற்ற பரிசுகள் குறித்தும் அவர் இயற்றிய நூல்கள் குறித்தும் விளக்குதல்.
நவீனக்கவிதைகள் குறித்து விளக்குதல் பிரமிள் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் இணையத்தின் மூலம் வாசிக்கச் செய்து விளக்குதல்.
பறவையின் வாழ்வை இறகு கூறிச்செல்வதை மாணவர்களோடு கலந்துரையாடல்.
மாணவர் செயல்பாடு
சிட்டுக்குருவிகள் குறித்த தகவல்களைக் கலந்துரையாடல்
சிட்டுக்குருவியின் அழிவுக்கான காரணங்களை பட்டியலிடல்.
உயிர்களின் இருப்பு நிலையாக இருப்பதற்கு மழை எவ்விதம் உதவுகிறது என்பது குறித்து கலந்துரையாடல்.
'உலகச்சிட்டுக்குருவிநாள்' எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன்? என்பது குறித்துக் கலந்துரையாடல்.
பறவைகளின் வாழ்வை கற்பனையாக மாணவர்களை கூறச் செய்தல்.
அழகிய பெரியவன், பிரமிள் படைப்புகளை இணையத்திலிருந்து தொகுத்து வகுப்பறையில் வாசிக்க செய்தல்.
மதிப்பீடு
'ஏதிலிக்குருவிகள் எங்கோ போயின'- இத்தொடரின் பொருள் யாது?
அழகிய பெரியவன் எப்படைப்புக்காக தமிழக அரசின் பரிசினை பெற்றார்?
பிரமிள் எழுதிய பிறநூல்கள் யாவை?
வலுவூட்டல்
மீண்டும் பாடலை பொருளோடு வாசித்து கடினமான பகுதிகளுக்கு விளக்கம் தருதல் .கடினமான சொற்களுக்கு விளக்கம் தருதல். எளிய வினாக்கள் கேட்டல் .துணைக்கருவிகள் கொண்டு பாடப்பகுதியை விளக்குதல். கற்றல் அடைவை சோதித்தறிதல்.
தொடர் பணி
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான காரணங்களை ஆராய்ந்து கட்டுரையாக்குக.
'பறவைகளின் இருப்புக்கு மழையே காரணம்' இத்தொடர் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக