நாள்: 19.6.23. - 23-6-23
வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு
தன்னேர் இலாத தமிழ்
தம்பி நெல்லையப்பருக்கு
தமிழாய் எழுதுவோம்
கற்றல் நோக்கம்
மொழியின் பெருமை அறிதல் கடித இலக்கியம் குறித்து அறிதல் மொழியைப் பிழையின்றிப் பயன்படுத்த அறிதல்.
கற்றல் விளைவுகள்
தண்டியலங்காரம் நூல் குறித்து அறிகிறான்
கடித இலக்கியத்தில் தமிழ்நாட்டையும் தமிழையும் குறித்து பாரதி எழுதிய கருத்துகளை அறிகிறான்
தமிழைப் பிழையின்றி எழுதுவதற்குரிய நுட்பங்களை உணருகிறான் .
துணைக்கருவிகள்
மடிக்கணினி, படங்கள், தண்டியலங்கார நூல், கடிதங்களின் மாதிரிகள்.
ஆர்வமூட்டுதல்
உனக்குத் தெரிந்த இலக்கண நூல்கள் சிலவற்றின் பெயர்களை கூறு
நீ யாருக்கேனும் கடிதம் எழுதியதுண்டா?
மயங்கொலி எழுத்துக்கள் எவை? இவற்றை பயன்படுத்தும்போது உனக்குப் பிழைகள் நேர்கிறதா?
கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
தண்டியலங்காரம் நூல் குறித்துக் கூறுதல் அணியிலக்கணம் கூறும் நூல்களைக்கூறுதல்
பாடலை இராகத்தோடு பாடிக் காட்டுதல் அருஞ்சொற்களுக்கு விளக்கம் தருதல்.
பாடலில் பயின்று வரும் அணியை சுட்டல்
அணி பாடலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்குதல்.
கடித இலக்கியம் குறித்து விளக்குதல்.
பாரதியாரின் கடிதத்தை வாசித்துக்காட்டுதல்
கடித இலக்கியத்தில் சிறப்பு பெற்ற அறிஞர்கள் சிலரைச் சுட்டிக்காட்டுதல்.
கடிதத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியைக் குறித்த செய்திகளை விளக்குதல்.
எழுத்துப் பிழை. சொற்பிழை சொற்பொருட்பிழை போன்றவற்றை உரிய சான்றுகளுடன் விளக்குதல்.
மயங்கொலி எழுத்துகளால் ஏற்படக்கூடிய பிழைகளை விளக்குதல்
தொகைச் சொற்களில் ஏற்படக்கூடிய பிழைகளை விளக்குதல்.
தமிழில் ஏற்படக்கூடிய பொதுவான பிழைகளைச் சுட்டிக் காட்டுதல்.
மாணவர் செயல்பாடு
பாடலை பொருளோடு வாசித்தல் பாடலில் இடம்பெற்றுள்ள அணி விளக்கம் கூறுதல் இலக்கண நூல்களின் பெயர்களைப் பட்டியலிடல்.
கடித வகைகள் குறித்து கூறுதல் கடித இலக்கியத்தில் சிறந்தோரின் பெயர்களைப் பட்டியலிடல் கடிதங்களின் மாதிரிகளை சேகரித்தல்
மயங்கொலி எழுத்துக்களை ஒலித்துக் காட்டுதல்
பிழைநேருமிடங்களை கண்டறிதல்.
கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள பிழைகளின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்யும் விதத்தைக்கூறுதல்.
வலுவூட்டல்
பாடப் பகுதியை மீண்டும் கற்பித்தல
எளிய வினாக்கள் கேட்டல்
கடினமான பகுதியில் மீண்டும் விளக்கம் தருதல் துணைக்கருவிகளின் துணையோடு கற்பித்தல்.
எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல்.
மதிப்பீடு
வேற்றுமை அணி விளக்குக.
பாரதியாரின் சமூகப்பற்று, மொழிப்பற்று குறித்துக்கூறுக.
இயக்குனர் -இயக்குநர் இது இரண்டு சொற்களில் எது சரியானது காரணம் கூறு.
மயங்கொலி எழுத்துக்களால் ஏற்படும் பிழைகளை எவ்வாறு தீர்ப்பாய்.
தொடர்பணி
வேற்றுமை அணி பயின்று வரும் ஐந்து திருக்குறள்களைத்தொகுத்து எழுதி வரவும்.
தமிழறிஞர் மு வரதராசனாரின் கடிதத்தைத்தொகுத்தெழுதி வகுப்பறையில் வாசிக்கவும்.
தமிழில் பொதுவான பிழைகள் நேரும் இடங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை மாணவர்களுடன் கலந்துரையாடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக