சனி, 17 ஜூன், 2023

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள் : 19-06-23   -   23-06-23

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: ஆறாம் திணை

மொழிமுதல்,மொழியிறுதிஎழுத்துகள்

கற்பித்தல் நோக்கங்கள் 

புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்.

 மொழி முதல் இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழிக் கலப்பின்றி பேசவும் எழுதவும் செய்தல்.

கற்றல் விளைவுகள்

புலம்பெயர்ந்த மக்கள் மொழி மீதும் வாசிப்பின் மீதும் கொண்டுள்ள பற்றை மாணவன் அறிந்து கொள்கிறான்.

புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறான்.

மொழியின் முதலில் இடம் பெறவேண்டிய எழுத்தினையும் இறுதியில் இடம்பெற வேண்டிய எழுத்தினையும் அறிந்து கொண்டு மொழியை கையாளும் திறம்பெறுகிறான்.

சொற்களை உணர்த்தும் புணர்ச்சி வகைகள் குறித்த அடிப்படைச் செய்திகளை அறிகிறான்..

துணைக்கருவிகள்

படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி அ. முத்துலிங்கத்தின் நேர்காணல் காணொலி.

ஆர்வமூட்டுதல்

புலம்பெயர்ந்த மக்கள் குறித்து நீ அறிவன யாவை? 

ஈழத் தமிழர்கள் குறித்து உனக்குத் தெரிந்த செய்திகளைக் கூறவும்.

சொல்லின் இறுதியில் வல்லின மெய் எழுத்துக்கள் இடம்பெற்றிருக்குமா? 

மேற்கண்ட வினாக்கள் மூலம் மாணவனின் ஆர்வத்தைத் தூண்டுதல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு

ஈழத் தமிழர்கள் அகதிகளாய் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதைக் காணொளிகள் மூலம் காட்டல்.

பிற நாடுகளில் குடியேறும் ஈழத் தமிழர்களின் நிலையை பாடத்தின் மூலம் விளக்குதல்.

அ முத்துலிங்கம் அவர்களின் அனுபவங்களை கோர்வையாகக் கூறுதல்

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளை பட்டியலிடல்.

புலம்பெயர்ந்த மக்கள் தமிழ் மொழியை உலக அரங்கில் நிலை நாட்டியதை விளக்குதல்.

மொழி முதல் இறுதி எழுத்துக்களை மாணவன் உணரும்படி சான்றுகள் மூலம் விளக்குதல்.

உயிரீறு,மெய்யீறு, உயிர்முதல் ,மெய்ம் முதல் போன்றவற்றை படங்கள் காட்டி விளக்குதல்.

எழுத்துகளின் அடிப்படையிலான புணர்ச்சியையும் சொற்களின் அடிப்படையிலான புணர்ச்சியையும் உரிய சான்றுகளுடன் விளக்குதல். 

குற்றியலுகரம் பற்றியும் குற்றியலுகரவீற்று புணர்ச்சி குறித்தும் விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துக் கூறுதல்.

ஈழத்தில் தமிழர்கள் புலம்பெயர்வதற்கான காரணத்தை கலந்துரையாடுதல்.

புலம்பெயர் மக்கள் படைத்த இலக்கியங்களை இணைய மூலம் கண்டறிதல்.

மொழி முதல் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களைக் கரும்பலகையில் எழுதுதல்.

மொழி இறுதி எழுத்துகள் இடம்பெறக்க்கூடிய சொற்களைக் கூறுதல். 

பூணர்ச்சி வகைக்கேற்ப உரிய சொற்களை அமைத்து புணர்த்திக் காட்டுதல்.

மதிப்பீடு

தமிழர் பாரம்பரிய நாள் அயல்நாடுகளில்  எப்போது கொண்டாடப்படுகிறது?

ஆறாம் திணையென கட்டுரையாசிரியர் சுட்டுவது எதனை? 

மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?

மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?

சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி எவ்விதம் அமையும்?

வலுவூட்டல்

பாடப்பகுதிகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டல்.

கடினமான பகுதிகளை மீண்டும் கற்பித்தல்.

எளிய வினாக்கள் கேட்டல்.

பல்வேறு சான்றுகள் கூறிக் கருத்துகளை வலியுறுத்தல். 

தொடர் பணி

நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளை திரட்டி படத்தொகுப்பாக்குக.

உங்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் பெயர்களில் மொழி முதல் எழுத்துகளாகவும் மொழி இறுதி எழுத்துகளாகவும் அமைந்த பெயர்களை நீங்கள் கற்ற இலக்கணப் பகுதியுடன் ஒப்பிடுக.

தமிழ் கற்க,கற்பிக்க கீழ்க்கண்ட இணைப்புகளைப் பாருங்கள்.

இலக்கணக்காணொளிகளுக்கு

'தமிழ்நதி' YouTube channel 

https://youtube.com/@Tamilnathi

நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்

https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL

நறும்பூந்தமிழ் Telegram group

https://t.me/+k479QbS

bqxo1YjZl



இராம்முருகன்

அரசூர் 

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...