வியாழன், 22 ஜூன், 2023

பன்னிரண்டாம் வகுப்பு பாட குறிப்பு மூன்றாவது வாரம்

 நாள்: 26.6.23-30.6.23

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: பிறகொருநாள் கோடை, நெடுநல் வாடை

கற்றல் நோக்கங்கள்

இயற்கை நிகழ்வினால் மனிதர் பெறும் உள்ளத்து நெகழ்ச்சியை உணர்ந்து இயற்கையை விரும்புதல்

பழந்தமிழர் திணை வாழ்வை சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்

கற்றல் விளைவுகள்

மாறுபட்ட இரண்டு இயற்கை நிகழ்வுகள் இணைகிற போது வெளிப்படும் அழகை சுவைத்தல்.

 புதுக்கவிதைகளைச் சுவைக்கக் கற்றல்.

 நெடுநல்வாடை காட்டும் வாழ்க்கை நிகழ்வையும்,இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் அறிந்து கொள்ளுதல்.

ஆர்வமூட்டுதல்

மழை நாளில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறவும்

பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைத் தொகுத்து கூறவும்

துணைக் கருவிகள்

படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

 ஆசிரியர் செயல்பாடு

மழை பெய்யும் போது நிகழும் இயற்கை நிகழ்வுகள் குறித்துக் கலந்துரையாடுதல்.

 மழை நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுதல்.

 கவிதையைப் பொருளோடு வாசித்தல்.

 அய்யப்ப மாதவன் பற்றிக் கூறுதல்.

 நெடுநல்வாடை நூல் பற்றிக் கூறுதல் பத்துப்பாட்டு நூல்களை வரிசைப்படுத்தி கூறுதல் .

கார்காலத்தில் பெய்த மழையினால் விலங்குகளும் கோவலர்களும் தங்களை காத்துக் கொண்ட நிகழ்வை காணொளி மூலம் விளக்குதல் .

பாடலைப் பொருளோடு படித்தல்.

 கடினச் சொற்களுக்குப்பொருள் கூறுதல் பொருளைத் தொகுத்துக் கூறுதல்

மாணவர் செயல்பாடு 

மழை பற்றிய நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடுதல்.

 கவிதையை வாசித்தல் .

மழை பற்றிய கவிதைகளைக் கூறுதல்.

 பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடல்.

 நெடுநல்வாடைப் பாடலை சீர் பிரித்துப் படித்தல்.

 பொருளைத் தொகுத்து கூறுதல்.

 கனமழைக்குப் பிறகான அனுபவங்களை பகிர்தல்.

மதிப்பீடு 

நகரம் பட்டைதீட்டிய வெள்ளை வைரமாகிறது எப்போது?

அய்யப்ப மாதவன் எழுதியுள்ள பிற நூல்கள் யாவை?

வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு தம் பாதுகாப்பை தேடினர்?

வலுவூட்டல்

கடினமான பாடப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல் .

எளிய வினாக்கள் கேட்டல்.

 புரியாத பகுதிகளை துணைக்கருவிகளின் மூலம் விளக்குதல்.

 அறிதல் திறனை மீண்டும் சோதித்தறிதல்

தொடர் பணி

மழை பற்றிய கவிதைகளைத் தொகுத்து கையேடு தயாரிக்கவும் மழைக் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடு.


இராம்முருகன்.

தமிழ் கற்க,கற்பிக்க கீழ்க்கண்ட இணைப்புகளைப் பாருங்கள்.


இலக்கணக்காணொளிகளுக்கு


'தமிழ்நதி' YouTube channel 


https://youtube.com/@Tamilnathi


நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்


https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL


நறும்பூந்தமிழ் Telegram group


https://t.me/+k479QbSqxo1YjZl

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...