வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

பதினோராம் வகுப்பு இயல் 2

 குறுவினா

1. தமிழ்நாட்டின் மாநிலமரம் - சிறுகுறிப்பு வரைக.

விடை

❖ தமிழ்நாட்டின் மாநிலமரம் பனைமரம்.

❖ ஏழைகளின் கற்பக விருட்சம் பனைமரம்.

❖ சிறந்த காற்றுத்தடுப்பான்,

❖ நிலத்தின் ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கின்ற தன்மையுடையது.

❖ பனை வளர பெரிய அளவத் தண்ணீர் தேவையில்லை.

❖ ஏழே ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி விடும்.

❖ பனையிலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு முதலியவை கிடைக்கின்றன.

2. மதிப்புக்கூட்டு பொருள் விளக்குக

ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை மதிப்புக்கூட்டுப்பொருள் என்கிறோம் சான்றாகப் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவை மதிப்பு கூட்டுப் பொருள்களாகத் தயாரிக்கப்படுகின்றன.

3. ஐந்து வேளாண் மந்திரங்கள் யாவை?

• உழப்படாத நிலம்

• ரசாயன உரம் இல்லாத உற்பத்தி

• பூச்சிக்கொல்லி தெளிக்காத பயிர்ப் பாதுகாப்பு

• தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி

• ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல்

4. தொழுஉரம் விளக்குக.

• மாட்டுச் சாணம் கோமியம் ஆகியவற்றை கலந்து வைகோலை மக்கச் செய்து உருவாக்கப்படுவது தொழு உரம் ஆகும்.

2. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?

விடை

❖ மரங்கள் வெட்டப்பட்டன.

❖ வான்மழை பொய்த்தது.

❖ மண்வளம் குன்றியது.

❖ குருவிகள் கூடுகட்டி வாழ மரங்கள் இல்லை.

❖ வாழ ஏதுமின்மையால் ஏதிலியாய்க் குருவிகள் எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.

3. வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் - அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

விடை

❖ நூல் - திருமலை முருகள் பள்ளு. தென்கரை நாடு.

❖ ஆசிரியர் -பெரியவன் கவிராயர்.

❖ தென்கரை நாட்டின் நீர்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். (கா- சோலை)

3. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக,

விடை

அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ

அலர் - பகுதி, த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, உ வினையெச்ச விகுதி.

5. ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக,

விடை

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ய் வாய்மை (ய்)

வ் தெவ்யாது (வ்)

ஞ் மஞ்சள் (ஞ)

ட் காட்சி (ட்)

ற் பயிற்சி (ற்)

ந் மந்தை (ந்)

உடனிலை மெய்ம்மயக்கம்

செய்யாமை (ய்)

இவ்விதம் (வ்)

விஞ்ஞானம் (ஞ)

பட்டம் (ட்)

வெற்றி (ற்)

செந்நாய் (ந்)

6. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

விடை

• ஒரு பறவையின் சிறகிலிருந்து பிரிந்து விழுந்த இறகு ஓன்று காற்றின் தீராத பக்கங்களில் அப்பறவையின். வாழ்வை எழுதிச் செல்கிறது.

சிறுவினா

1. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.

விடை

❖ வேதிக் கலப்பில்லாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியம்.

❖ முன்னோர்கள் எந்தவிதமான இரசாயனப் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தவில்லை.

❖ வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை எல்லாவற்றையும் இடித்து, கோமியத்தில்ஊறவைத்துப் பயிரில் தெளித்தார்கள்.

❖ பூச்சியும் படிப்படியாகக் குறைந்தது.

❖ இவ்வேதிக்கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால் நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வளமும் ஏற்பட்டன.

❖ இரசாயனப் பூச்சிக்கொல்லி பயிர்களுக்குள் ஊடுருவி, சாப்பிடுகிற மக்களுக்கும் நிறைய நோய் உண்டாக்கும்.

2. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

விடை

❖ குருவிகளையும் கூடுகளையும் காணமுடியவில்லை.

❖ முன்பெல்லாம் அடைமழைக்காலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரணர்டு ஓடும்.

❖ கரைகளில் நெடிய மரங்கள்.

❖ மரங்களில் பறவைகளின் ஒலிகள்.

❖ வழிநெடுகளிலும் தூக்கணாங்குருவி கூடுகள், முள்ளால் கட்டப்பட்ட இக்குருவி கூடுகளில் குருவிகள் இல்லாத காரணத்தால் ஏக்கத்தின் காரணமாக காற்றில் அசையும் வீடுகளென வருணிக்கிறார்.

3."சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

விடை

நூல் : திருமலை முருகன் பள்ளு - வடகரை நாடு பாடல் . அடிகள்.

ஆசிரியர் : பெரியவன் கவிராயர்.

இடம் : வடகரைநாட்டின் வளத்தைக் கூறும் பாடலில் இவ்வரி இடம்பெற்றுள்ளது.

பொருள் : வடகரை நாட்டின் தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து. விளையாடும்.

விளக்கம் : வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணினை இசைப்பதால் உள்ளான் பறவை வாலை ஆட்டிக்கொண்டு, மதகுகளின் சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக அமர்ந்திருக்கும். அப்போது தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

4. ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.

விடை

தினை : முல்லைத் திணை

முதற்பொருள் : நிலமும் பொழுதும்

❖ நிலம் – காடும் காடு சார்ந்த இடமும்

❖ பெரும்பொழுது - கார்காலம்

❖ சிறுபொழுது - மாலை

கருப்பொருள்:

தெய்வம் - திருமால் (மாயோன்)

மக்கள - ஆயர் - ஆய்ச்சியர், இடையர் - இடைச்சியர்

தொழில் - வரகு, சாமை விதைத்தல், ஆநிரை மேய்த்தல், ஏறுதழுவல், களை பறிப்பு.

உணவு - வரகு, சாமை, முதிரை.

விலங்கு - மான், முயல்

பூ - முல்லை, தோன்றி

ஊர் - பாடி, சேரி

பறை - ஏறுகோட் பறை

யாழ் - முல்லை யாழ்

சான்று : 'காயா கொன்றை நெய்தல் முல்லை....' பேயனார் பாடிய பாடல்.

நெடுவினா 

2. திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

விடை

வடகரை நாடு:

❖ வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்னும் பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும்.

❖ இவ்விசையைக் கேட்டு மெய்மறந்து வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியின் மீது அமர்ந்தஉள்ளான் பறவை, மீனைப் பிடித்து உண்ணாமல் வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.

❖ தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

❖ முத்துக்களை ஈன்ற வெண்சங்குகள் பரவிக் காணப்படும்.

❖ மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும்.

❖ உள்ளங்கை ஏந்தி இரந்துண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறுவது மெய்யாகும்.

❖ இத்திருமலையில் புலவர்கள் போற்றும் திருமலைச் சேவகன் வீற்றிருக்கிறார்.

தென்கரை நாடு:

❖ தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும்.

❖ தென்கரை நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகையில் அகிற்புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும்.

❖ மாட மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

❖ செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பார்.

❖ இளம்பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்வர்.

❖ குளங்களில் அலைகள் முத்துக்களை ஏந்தி வரும்.

❖ அலைகள் கரையில் மோதும்போது முத்துக்கள் சிதறி வெடிக்கும்.

❖ இந்தகைய குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்ச்சூடி . தென்னாடுடைய சிவன் குற்றாலநாதராக வீற்றிருக்கிறார்.

3. யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக,

விடை

முன்னுரை:

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் இயற்கை ஆர்வலர், யானையைப் பாத்திரமாகப் படைத்து ஊமைச் செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியுள்ளார். இதில் சுதாபாத்திரமாக வந்துள்ள டாக்டர், வி. கிருஷ்ணமூர்த்தி ஒரு காட்டு விலங்கியல் வல்லுநர், கதையின் நோக்கம்:

யானை வாழும் காடுகளில் மனிதர்களால் கொடுக்கப்படும் உயிர்ப் பாதுகாப்பும், மனிதர்களால் ஒருபோதும் இழைக்கப்படக் கூடாத செயல்பாடுகளும் இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ளன.

முதுமலையில் யானைக்குக் கால் வீக்கம்:

கதையைக் கூறும் கதாபாத்திரமாக வனத்துறை அதிகாரி டாக்டர். வி.கிருஷ்ணமூர்த்தியுடன் புண்பட்ட யானை இருக்கும் முதுமலைக் காட்டிற்குச் செல்கின்றனர். வழிகாட்ட மலைவாழ் குறும்பர்களுடன் இருவரும் காட்டினுள் சென்றனர். கொஞ்ச நேரத்தில் யானைகளின் நெடி (நாற்றம்) வந்தது. புல்வெளியில் பன்னிரெண்டும், மூங்கில் புதரில் ஆறும், குட்டிகள் நான்கும் என யானைக் கூட்டமே கண்ணில் பட்டது.

டாக்டர் கேயும் புண்பட்ட யானையும்:

தன்னுடன் வந்தவர்களை நிற்க வைத்துவிட்டு டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கினார். புண்பட்டயானை மரத்தடியில் நின்றது. டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கியதும் பிடியானை ஒன்று எதிர்த்தது. சில மணிகளுக்குப் பிறகு பின் வாங்கியது. டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார். மயக்க மருந்து கலந்த ஊசியைத் துப்பாக்கியில் வைத்து சுட்டார். யானை சற்றே சாய்ந்தது.

யானைக்குச் சிகிச்சை:

யானையின் காலில் மனித மிருகங்கள் குடித்துவிட்டு தூக்கி எறிந்த கண்ணாடிக் குப்பி நன்றாகப் பதிந்திருந்தது. சீழ்க்கட்டிப் பெரிதாக இருந்தது. சீழ்கட்டி வெட்டியெடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் குணமாகி விடும். சிகிச்சை முடித்து டாக்டர் திரும்பினார். இப்போது புண்பட்ட யானையைச் சுற்றி யானைகள் கூட்டம் பிளறியது. இதற்கிடையில் மஞ்சணத்தி மரத்திடியில் ஒரு குட்டியானை வந்தவர்களை நோட்டம் விட்டது.

விடியற்காலையில் யானைக் குட்டி:

ஒருநாள் விடியற்காலையில் டாக்டரின் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு யானைக் குட்டி இரண்டு வயதிருக்கும் தள்ளாடியது. டாக்டர் யானைக்குட்டியை நெருங்கி வாயில் மயக்கமருந்து ஊசி போட்டார். முன்போலவே யானைக்குட்டியின் கால்களில் மதுக்குப்பியின் கண்ணாடித் துண்டு, வெளியே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஓரிரு மணிகளில் யானைக்குட்டி எழுந்து விடும். மோப்பம் பிடித்துக்கொண்டு முந்நூறு மைல்தூரம் கூட வரும் சக்தி கொண்டவை யானைகள். சிகிச்சை முடித்து வீட்டின் படிகளிலை நின்று பார்த்தார் டாக்டர். யானைக்குட்டிக்கு அருகில் பத்துப் பண்ணிரண்டு யானைகள் பிளிறிப் பேரொலி எழுப்பின. யானைகளின்முகத்தில் வானவர் புன்னகைக் காணப்பட்டது.

முடிவுரை:

இயற்கையோடு இயற்கையாய் வாழும் யானைகள் இருக்குமிடத்திற்கு மனிதர்கள் சென்றால், ஆபத்து நிறைந்த கண்ணாடி மதுக்குப்பிகளை எறிவதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும். யானைகளுக்கு இவை ஆபத்தானவை என்று தெரியாது. அவைகளின் உயிர்ப் பாதுகாப்புக்கு மனிதர்கள்தான் உத்திரவாதம் தர வேணடும்.

கீழ்மையான செயல்களைத் தவிர்ப்போம்! விலங்குகளுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிப்போம்!!


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...