ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

11 ஆம் வகுப்பு பாடக் குறிப்பு

 நாள் : 27.08.24 முதல்30.08.24 வரை

வகுப்பு பதினோராம் வகுப்பு 

பாடம் தமிழ் 

தலைப்பு : ஆனந்தரங்கர் நாட்குறிப்பு                                சீறாப்புராணம் 

கற்றல் நோக்கங்கள்

 நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாவையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல் 

சமய நல்லிணக்கத்தைப் போற்றி பின்பற்றுதல் 

கற்றல் விளைவுகள் 

ஆனந்தரங்களின் நாட் குறிப்பின் வழி தென்னிந்திய வரலாற்றை அறிந்து தானும் நாட்குறிப்பை எழுத முனைதல். 

சீறாப்புராணத்தின் மதீனம் புக்க படலம் வாயிலாக மதீனா நகரத்தின் சிறப்புகளை அறிவதோடு தாம் வாழும் நகரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்த முனைகிறான்.

துணைக் கருவிகள் 

மடிக்கணினி, விளக்கப்படம், கரும்பலகை 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

டைரி என்னும் சொல்லின் பொருள் யாது? 

நீ அறிந்த பிற சமய இலக்கியங்களின் பெயர்களைக் கூறுக. 

இது போன்ற வினாக்களை எழுப்பி பாடத்தை அறிமுகம் செய்தல். 

பாட வளர்ச்சி 

நாட்குறிப்பு என்பதன் பொருள் கூறுதல் டைரி என்னும் சொல் எவ்வாறு உருவானது என்பதற்கான விளக்கம் தருதல் ஆனந்தரங்கனின் இளமைக்காலம் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கிய காலம் போன்றவற்றை கூறுதல் 

ஆனந்தரங்கரன் நாட்குறிப்பு வெளிப்படுத்தும் அரசியல் செய்திகள் சமுதாயச் செய்திகள் ஆனந்தரங்களின் திறமைகள் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய முக்கியக்குறிப்புகள் போன்றவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக கூறுதல் 

சீறாப்புராணம் நூற்குறிப்பு கூறுதல் 

சீறாப்புராணம் நூல் எழுந்த வரலாறு குறித்து கூறுதல் 

மதினம் புக்க படலம் வாயிலாக மதீனா நகரத்தின் சிறப்புகளைக் கூறுதல் 

மாளிகை நகரம், கொடை நகரம், பொன்னகரம், மனை நகரம், மாநகரம், ஒண்ணகரம் , செம்மை நகரமாக விளங்கிய மதினா நகரத்தின் சிறப்புகளைக் குறித்து விளக்குதல். 

பாடல்களுக்கு பதவுரை, தெளிவுரை விளக்கவுரை கூறுதல் அருஞ்சொற்களுக்கு பொருள் கூறுதல் இலக்கண குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி கூறி மாணவர்களுக்கு விளக்குதல். 

மாணவர் செயல்பாடு 

ஆனந்தரங்களின் நாட்குறிப்பின் மூலம் அறியலாகும் அரசியல் செய்திகளைத் தொகுத்து கூறுதல். சமுதாயச் செய்திகளைப் பட்டியலிடல். 

நாட்குறிப்பு இலக்கியம் குறித்து அறிந்து இந்த இலக்கியத்தின் முன்னோடிகளை இணையத்தின் மூலம் கண்டு பட்டியலிடல். 

சீறாப்புராணத்தின் மதினம் புக்க படலப் பகுதியின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல். மதினா நகரின் சிறப்புகளை கூறுதல். கடினமான சொற்களுக்கு உரிய பொருளை மாணவருடன் கலந்துரையாடுதல். 

மதினா நகரைப் போன்று தாம் வாழும் நகரின் சிறப்புகளை வகுப்பறையில் கலந்துரையாடுதல். 

மதிப்பீடு 

1.ஆனந்தரங்கனின் வருணனைத் திறனுக்குச் சான்று தருக. 

2.ஆனந்தரங்களின் நாட்குறிப்பில் வெளியாகும் சமுதாய செய்திகள் எவையேனும் இரண்டைக் கூறுக 

3.மதினா நகரம் மாளிகை நகரம் விளக்குக 

வலுவூட்டல்

கடினமான பாடப்பகுதிகளை உரிய துணைக்கருவிகள் கொண்டு மீண்டும் விளக்குதல். எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல் 

குறைதீர்க்கற்றல் 

மெல்ல கற்கும் மாணவர்கள் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு நுண்ணிலைக்கற்பித்தல் மூலம் பாடக்கருத்துக்களை மாணவர்களுக்கு புரியச்செய்தல் எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல் 

தொடர்பணி 

உனது ஒரு வாரத்திய நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதி வகுப்பறையில் வாசித்துக் காட்டுக 

நீ வசிக்கும் நகரத்தின் சிறப்புகளை கட்டுரையாக எழுதுக.


இரா.முருகன், தமிழாசிரியர் அரசுமேனிலைப்பள்ளி ஆனையூர் 

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...