நாள் : 26.08.24 முதல் 30.08.24 வரை
வகுப்பு :பன்னிரண்டாம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: மதராசபட்டினம்,
தெய்வமணிமாலை
தேவாரம்
கற்றல் நோக்கங்கள்
ஊர்களின் வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டி கட்டுரையாக எழுதும் திறன் பெறுதல்.
இடைக்காலத்தில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களின் வழி மக்களின் நாகரீக கூறுகளை அறிந்து அவற்றின் இன்றைய தொடர்ச்சியை அறிய முற்படுதல்.
திருவருட்பா வழியாக நேர்மறை சிந்தனைகளை அறிந்து பின்பற்ற முனைதல்.
கற்றல் விளைவுகள்
சென்னையின் வரலாறு குறித்து அறிந்து கொள்கின்றனர்.
திருவருட்பா மூலம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை அறிகின்றனர்
தேவாரப் பாடல் மூலம் பண்டைய நாளில் நடைபெற்ற விழா குறித்து அறிகின்றனர்.
துணைக் கருவிகள்
மடிக்கணினி, கரும்பலகை
ஆசிரியர் செயல்பாடு
பாட அறிமுகம்
பழமை வாய்ந்த சென்னை மாநகரின் காணொளியைக் காட்டி பாடத்தை தொடங்குதல்.
இராமலிங்கரின் படத்தைக் காட்டி அவர் குறித்த அரிய தகவல்களைக் கூறி பாடத்தைத் தொடங்குதல்.
பங்குனி உத்திர திருவிழா குறித்து வினவுதல்
பாட வளர்ச்சி
சென்னை மாநகரின் தொன்மையான வரலாறு குறித்துக் கூறுதல் சென்னை மாநகரில் அயலவர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதிகளையும் ஆண்டுகளையும் குறிப்பிடல். சென்னையில் உள்ள நீர் நிலைகளைப் பற்றியும் வடிகால்கள் பற்றியும் காணொளிகள் மூலம் காட்டி விளக்குதல். சென்னை நகரம் உருவாவதற்கு ஆங்கிலேய ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தனர் என்பதை கூறுதல் அறிவின் நகரமாக மாறிய சென்னையின் கல்வி நிலையங்களை பற்றி கூறுதல். பண்பாட்டு அடையாளமாக சென்னையில் அமைந்திருக்கும் இடங்களை குறித்து விளக்குதல் தொழில் வளர்ச்சி மிகுந்த சென்னை குறித்தும் இன்று சென்னை அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடல்.
இராமலிங்கர் குறித்த செய்திகளை கூறுதல் இராமலிங்கர் இயற்றிய நூல்கள் குறித்து கூறுதல் திருவருட்பா நூலின் சிறப்பினைக் கூறுதல் 'தெய்வ மணிமாலை' பாடலை இராகத்தோடு பாடுதல் . பாடலில் அமைந்திருக்கும் பொருள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
தேவாரம் நூற்குறிப்பு கூறுதல். தேவார மூவர் குறித்து கூறுதல் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் முறை குறித்து விளக்குதல் திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப் பதிகங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.
மாணவர் செயல்பாடு
சென்னையின் வளர்ச்சி குறித்து இணையத்தில் தகவல்களை தேடி திரட்டுதல் சென்னை அடைந்த வளர்ச்சியில் பிற நாட்டவரின் பங்கு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் சென்னை அடைந்திருக்கும் வளர்ச்சியை காலக் கோடாக பட்டியலிட்டு காட்டுதல்.
இராமலிங்கர் கூறும் அறிவுரைகளை தொகுத்துக் கூறுதல்
பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டு தற்போது இந்த விழாக்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாணவருடன் கலந்துரையாடல்.
மதிப்பீடு
சென்னை நகரின் தொன்மைக்கு சான்றுகள் கூறுக.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமென வேண்டுகிறார்?
கலிவிழா ஒலிவிழா விளக்குக
வலுவூட்டல்
பாடக் கருத்துகளை காணொளிகள் மூலமும் துணைக்கருவிகள் மூலமும் மாணவர்களுக்கு விளங்கும்படியாக மீண்டும் கூறுதல் பாடப் பகுதியில் எளிய வினாக்கள் கேட்டு மாணவர்களின் கற்றலை உறுதி செய்தல்
குறைதீர்க்கற்றல்
மெல்ல கறகும் மாணவர்கள் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு மீண்டும் கற்பித்தல் எளிய வினாக்களின் மூலம் அவர்களின் கற்றலை உறுதி செய்தல்.
தொடர் பணி
நீ வசிக்கும் நகரின் வரலாற்றை அறிந்து கொண்டு வந்து வகுப்பறையில் மாணவர்களுக்கு கூறவும்.
உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பண்பாட்டு விழாக்களைத் தொகுத்து வரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக