காலாண்டுத் தேர்வு
முக்கிய குறுவினாக்கள்
1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது ஏன்?2. பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
3. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?
4.இனம், மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
5. என் அம்மை ஒற்றியெடுத்த
நெற்றி மண் அழகே!
வழி வழி நினதடி தொழுதவர்
உழுதவர், விதைத்தவர்
வியர்த்தவர்கெல்லாம்
நிறை மணி தந்தவளே!
இக்கவிதையில் இடம் பெற்றுள்ள வினையாலணையும் பெயர்களை எடுத்து எழுதுக.
6.ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது?
7. 'நேரடி மொழி' என கருதுவது எதனை?
8. தமிழ்நாட்டின் மாநில மரம் குறித்து சிறு குறிப்பு வரைக.
9. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?
10. வளருங்காவில் முகில் தொகை ஏறும் பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
11. அலர்ந்து- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
12. கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
13. காவடிச்சிந்து என்பது யாது?
14. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
15. தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
16. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
17. பெருந்தகையான்கண் படின் இக்குறைட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
18. சங்க காலத்தில் தமிழ் மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?
19. கொழுஞ்சோறு -புணர்ச்சி விதி கூறுக.
20. உவமை - உருவகம் வேறுபடுத்துக.
21. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம்- என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
22. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
23. நெருங்கின, இரங்கி -பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24 "ஊனமில் ஊக்கமும் ஒளிர காய்த்தநல் தீன் எனும் செல்வமே பழுத்த சேணகர்" இப்பாடலடிகளில் ஒளிர காய்த்தது எது? பழுத்தது எது?
25. மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக