திங்கள், 1 பிப்ரவரி, 2021

நாளிதழில் கட்டுரையை வெளியிட வேண்டி கடிதம்

நாளிதழின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி கடிதம் எழுதுக
அனுப்புனர்,
               இரா.அமுதன்,
               தெற்குத் தெரு,
               ம.ரெட்டியபட்டி(அஞ்சல்),
               அருப்புக்கோட்டை வட்டம்,
               விருதுநகர் மாவட்டம்.
பெறுநர்,
               பதிப்பாசிரியர்,
              தினத்தந்தி நாளிதழ்
              மதுரை.
ஐயா,
       பொருள்: நாளிதழில் கட்டுரையை வெளியிட வேண்டுதல்-சார்பு
வணக்கம், தங்கள் நாளிதழில் பொங்கல் மலர் வெளியிடவிருப்பதை
அறிந்தேன். அந்தப் பதிப்பிற்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும் விதமாக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்'என்ற கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன்.எனது கட்டுரை சிறப்பாக இருந்தால் தங்கள் நாளிதழில் வெளியிட்டு உதவும் படி
பணிவன்புடன் வேண்டுகிறேன்.
                       நன்றி
                                        தங்கள்                                                           உண்மையுள்ள,
                                         இரா.அமுதன்
உறைமேல் முகவரி,
பதிப்பாசிரியர்,
தினத்தந்தி நாளிதழ்,
மதுரை.



   

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...