செவ்வாய், 6 அக்டோபர், 2020

பத்தாம் வகுப்பு -உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுதல்

உணவு விடுதியொன்றில் உணவு விலை கூடுதலாகவும் தரமற்றதாகவும் இருப்பதை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்,
                 த.இளங்கோ,
                  18- தெற்குத் தெரு,
                 ம.ரெட்டியபட்டி(அஞ்சல்),
                  அருப்புக்கோட்டை (வட்டம்),
                   விருதுநகர் மாவட்டம்.
பெறுநர்,
       உணவுப் பாதுகாப்புஆணையர் அவர்கள்,
        உணவுப்பாதுகாப்பு  அலுவலகம்,
                விருதுநகர்.
ஐயா,
பொருள்; உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கக்கோருதல்-சார்பு
வணக்கம் நேற்று நான் அருப்புக்கோட்டையில் வங்கிக்கு சென்று இருந்தேன். மதிய நேரத்தில உணவு உண்பதற்காக அருகிலிருந்த குமரன் உணவு விடுதிக்குச் சென்றேன். சாப்பாட்டின் விலை 50 ரூபாய் என விலை பட்டியலில் இருந்தது சாப்பிட்டு முடித்துவிட்டு காசாளரிடம் பணம் கொடுக்கும்போது 70 ரூபாய் என்று கூறினார் நான் அவரிடம் விலைப் பட்டியலில் உள்ள விலையை காட்டினேன் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், உணவு உண்ட அரை மணி நேரத்தில் எனக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. இந்த உணவகத்தில் விலை கூடுதலாகவும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாலும் தாங்கள் இந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
                      நன்றி
                               இப்படிக்கு,
                               த.இளங்கோ
உறைமேல் முகவரி,
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
விருதுநகர்.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...