திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஈரொற்று எங்கு வரவேண்டும்?

தமிழில் இரண்டுஒற்றுகள் அடுத்தடுத்து வருவது சில எழுத்துகளாக மட்டுமே இருக்கும். ய் ர் ழ் இந்த மூன்று மெய்யெழுத்துக்கள் மட்டுமே இவற்றை ஏற்கக்கூடிய தன்மையுடையன ய் ர் ழ் இந்த எழுத்துக்களை தொடர்ந்து க் ங் ச் ஞ் த் ந் ப் ம் - எட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே ஈரொற்றாய் வரக்கூடியது. (எ.கா)
ய்
 வாய்க்கால் - க் 
வேய்ங்குழல் - ங் 
பாய்ச்சல் - ச் 
மெய்ஞ்ஞானம் - ஞ் 
காய்த்தல் - த் 
பாய்ந்தது - ந் 
வாய்ப்பு - ப் 
ம் - இணைந்து வரும் சொல் தற்காலத்தமிழில் இல்லை ---------------------------------------- 
ர்
 பார்க்கும் - க்
 ஆர்ங்கோடு - ங்
 உயர்ச்சி - ச்
 பார்த்தான் - த்
 சேர்ந்தது - ந்
 பார்ப்பு - ப்
 ஞ் ம்- இரண்டு எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை --------------------------------------- 
ழ்
 வாழ்க்கை - க்
 தாழ்ங்கிளை - ங்
 தாழ்ச்சி - ச்
 வாழ்த்து - த்
 ஆழ்ந்து - ந்
 காழ்ப்புணர்ச்சி - ப்
 ஞ் ம் - இரண்டு எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை --------------------------------------
- இவற்றைத் தவிர வேறு எழுத்துகள் தமிழில் ஈரொற்றாய் வராது

 இராம் முருகன் தமிழாசிரியர்

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...