வியாழன், 29 அக்டோபர், 2020

பத்தாம் வகுப்பு இரண்டு மதிப்பெண் வினா விடைகள்

                பத்தாம்வகுப்பு

இரண்டு மதிப்பெண் வினா விடைகள்
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
1.செழுமை மிக்க மொழி எம் உயிர்
2.சொல்லுதற்கு அரிய நின் பெருமைகளை என்னுடைய நா விரித்துரைக்கும்.
3.பழம் பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டது தமிழ்.
4.வியக்கத்தக்க நீண்ட நிலைத்த தன்மையும் வேற்றுமொழி யார் உரைத்த புகழ் உரையும் உணர்வும் கொண்டவை தமிழ்மொழி.
------------------------------------------------------
2. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
வெளியூர் சென்று வந்திருந்த பாவாணரிடம் அவரது நண்பர் பகல் உணவும் இராவுணவும் எப்படி இருந்தது? எனக் கேட்டார் அதற்கு பாவாணர் பகலுணவு பகல் உணவாகவும் இராவு 'இரா'உணவாகவும் இருந்தன என்றார்.
(இரா உணவு- உணவின்றி இரவைக் கழித்தார்)
-------------------------------------------
3.வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை ---வேங்கை என்பது மரத்தைக் குறிக்கும் இது தனி மொழி.
வேம்+கை-வேங்கை
வேகின்ற கை எனப் பொருள்படும்.
-----------------------------------
4. உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்க தொடர்களை எழுதுக.
மரங்கள் வளர்ப்போம்; உயிர்கள் வாழ தூய்மையான காற்றை பெறுவோம்.
மண் வளத்தைக் காக்க, மரங்களை வளர்ப்போம்.
----------------------------
5. வசன கவிதை குறிப்பு வரைக
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்.
---------------------------
6.மாஅல்-பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக.
மாஅல் என்பதன் பொருள் 'திருமால்'
மாஅல் என்பதன் இலக்கணக்குறிப்பு செய்யுளிசை அளபெடை.
------------------------------
7. விருந்தினரை மகிழ்வித்துக்கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வணக்கம் வாருங்கள்.
உட்காருங்கள்.
உங்கள் பயணம் இனிமையாக இருந்ததா?
தங்கள் வீட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா?
தண்ணீர் குடியுங்கள்.
-------------------------------
8."இறடிப்பொம்மல் பெறுகுவீர்"- தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.
கூத்தரே! தினைச் சோற்றை பெறுவீர்கள்.
--------------------------------
9. 'நச்சப்படாதவன்' செல்வம் இத்தொடரில் வண்ணம் இட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன் ஆகையால் எவராலும் விரும்பப்படாதவர்.
-----------------------------------
10.முல்லை நிலத்திலிருந்தும்
மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
முல்லை நிலம்
தினை, வரகு சாமை,முதிரை, பால் ,நெய்
மருதநிலம்
செந்நெல் அரிசி
 வெண்ணெல் அரிசி 
தினைச்சோறு




கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...