'புளி' என்னுஞ்சொல்லின் புணர்ச்சி
=================================
புளியம்பழம்,புளியங்கொம்பு இச்சொற்களைப்போல புளியங்குழம்பு,புளியஞ்சோறு என எழுதலாமா?
1) புளி- மரப்பெயர்ச்சொல்லாகவிருந்தால் புணர்ச்சியின் போது 'அம்' சாரியை பெற்றுப்புணரும்.
புளி+அம்+பழம்- புளியம்பழம்
====={=============================
2. வருமொழி முதலில் வல்லின எழுத்துகளான க, ச , த எழுத்துகள் வரின் 'அம்' சாரியையின் இறுதி மகரம் (ங, ஞ, ந ) திரியும்.
புளி+அம்+காய்
புளி+அங்+காய் ( இறுதி மகரம் ஙகரமாக திரிந்தது)
புளியங்காய்
===================================
3. வருமொழி முதலில் மெல்லினம் வரின் 'அம்' சாரியையின் இறுதிமகரம் கெடும்
புளி+மரம்
புளி+அம்+மரம்
புளி+அ+மரம் ( மகரம் நீங்கியது)
புளியமரம்
===================================
4. புளி- சுவைப்பெயர்ச்சொல்லாயின் சாரியை பெறாது இடையில் மெல்லெழுத்து மிகும்.
புளி+கூழ்- புளிங்கூழ்
இவற்றில் வல்லெழுத்து மிகுத்து எழுதினாலும் குற்றமில்லை .
புளி+குழம்பு - புளிக்குழம்பு
புளி+கூட்டு-புளிக்கூட்டு.
புளி+சோறு-புளிச்சோறு.
புளி என்னுஞ்சொல் மரப்பெயராகும்போது புணரும் முறையும் சுவைப்பெயராகும்போது புணரும் முறையும் மாறுபாடுள்ளதைக்காணலாம்.
இரா.முருகன்
26.07.24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக