அலகுத்தேர்வு- இயல்1
மதிப்பெண்கள்:50. காலம்:1.30 மணி
பலவுள் தெரிக. 5×1=5
1. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க
அ) அ.முத்துலிங்கம் -யுகத்தின் பாடல் ஆ)பவணந்தி முனிவர் -நன்னூல். இ). சு. வில்வரத்தினம்- ஆறாம் திணை ஈ)இந்திரன்- பேச்சு மொழியும் கவிதை மொழியும்
1) அ ஆ 2) அ ஈ 3) ஆ ஈ 4) அ இ
2) பாயிரம் அல்லது ----------அன்றே
அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல் ஈ). கவிதை
3) மொழி முதல் எழுத்துக்கள்------
அ) 24 ஆ) 22 இ) 18 ஈ) 216
4) மாநகர் இலக்கணக்குறிப்பு தருக
அ) பண்புத்தொகை ஆ) முற்றும்மை
இ) உரிச்சொற்றொடர் ஈ) தொழிற்பெயர்.
5) எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எந்த நூல் இலங்கை அரசின் சாகித்தியப்பரிசைப்பெற்றது?
அ) வம்சவிருத்தி ஆ) திகடசக்கரம்
இ) அக்கா ஈ) வடக்கு வீதி
அனைத்துக்கும் விடையளி. 5×1=5
6) அணிந்துரை - புணர்ச்சி விதி கூறுக.
7) வைத்தார் - பகுபதஉறுப்பிலக்கணம் தருக.
8) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது- பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
9) The pen is mightier than sword - தமிழாக்கம் தருக.
10) விசா, பாஸ்போர்ட் - தமிழ்ச்சொல் தருக.
குறுவினாக்கள். 5×2=10
11) இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக
12) பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
13) பேச்சு மொழி, எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது ஏன்?
14) உயிரீறு மெய்யீறு விளக்குக.
15) பாயிரத்திற்கு வழங்கும் பிற பெயர்கள் யாவை?
சிறுவினாக்கள். 3×4=12
16)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுமானால் நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?
17) சு. வில்வரத்தினம் ஆழத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
18) சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி எவ்விதம் அமையும்? சான்றுடன் விளக்குக.
நெடுவினா. 2×6=12
19) நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளை தொகுத்துரைக்க.
20) தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?
அடிபிறழாமல் எழுதுக. 4+2=6
'ஏடு தொடக்கி' எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்
'ஆக்கியோன் பெயரே' எனத் தொடங்கும் நன்னூல் பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக