சனி, 1 ஜூலை, 2023

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்


 நாள்: 3.07.23 - 7.07.23

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: பெருமழைக்காலம், முதல் கல்

கற்றல் நோக்கங்கள்

பருவ மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெறுதல்

நீர்வழிப்பாதைகளை பராமரிப்பதன் தேவையை உணர்ந்து கொள்ளும் திறன் பெறுதல்

கற்றல் விளைவுகள்

பேரிடர்க்காலங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் திறன் பெறுகிறான். இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாது இருக்கிறான்.

நீர்வழிப்பாதைகளில் குப்பைகளைப் போட்டு சீரழிக்கும் எண்ணத்திலிருந்து விடுபடுதல்

துணைக் கருவிகள்

படங்கள், விளக்கப்படங்கள், மடிக்கணினி

ஆர்வமூட்டுதல்

வெள்ளம் தொடர்பான செய்திகளைக் காட்டுதல் வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்புகளை காணொளிகளாக் காட்டுதல். 

நீர்வழிப்பாதைகள் அடைபட்டால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துக்கலந்துரையாடல்

கற்றல் கற்பித்தல் செயல்பாடு

ஆசிரியர் செயல்பாடு

பெருமழை பெய்த பகுதிகளையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் பட்டியலிட்டு காட்டுதல் .

புவி வெப்பமடைவதற்கான காரணங்களைக் கலந்துரையாடல்.

 பசுமைக்குடில் வாயுக்கள் குறித்து கூறுதல்.

 பணித்திட்ட பேரவை உருவாக்கம், வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

 கார்பனற்ற ஆற்றல் பயன்பாடு குறித்து மாணவர்களுடன் விவாதித்தல்.

 வெள்ளச்சமவெளிகள் குறித்து விளக்குதல் .

வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் .

பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கம், செயல்பாடுகள் குறித்து இணையவெளியில் மாணவர்களுக்கு காட்டி விளக்குதல்.

 பேரிடர்க்காலங்களில் நாம் செய்ய வேண்டியன ,செய்யக்கூடாதென குறித்து மாணவர்களுக்கு அறிவுரை கூறுதல்.

 மழையைக் கணிக்கும் அறிகுறிகள் பற்றி மாணவர்களுடன் விவாதித்தல்.

'முதல் கல்' கதையை உணர்வுபூர்வமாகக் கூறுதல்.

 நீர்வழிப்பாதைகளின் தேவைகள் பற்றி விளக்குதல் .

தம் சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள நீர்வழிப் பாதைகளைப் பராமரிக்கும் வழிகளைக் காட்டுதல்.

மாணவர் செயல்பாடு

வெள்ளம் தொடர்பான செய்திகளை மாணவர்கள் நாளிதழ்களை பார்த்துப் பட்டியலிடல் .

புவி வெப்பமயமாவதற்குரிய காரணங்களை மாணவர்கள் கலந்துரையாடல்.

 புவி வெப்பமடைவதைத் தவிர்க்க வழிமுறைகளை கூறுதல்.

 பெரு வெள்ள காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளிழப்புகளை மாணவர்கள் விவாதித்தல் .

பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பற்றி இணையத்தில் தெரிந்து கொள்ளுதல் 

பேரிடர்க்காலங்களில் செய்யக்கூடாத செயல்களைப் பட்டியலிடல்.

நீர்வழிப்பாதைகளின் தேவை குறித்து பேசுதல் .

நீர்வழிப் பாதைகள் அடைபட்டால் நேரக்கூடிய அவலங்கள் குறித்து கலந்தாலோசித்தல் .

நீர்வழிப் பாதைகள் அடைபடாமலிருக்க செய்ய வேண்டியவற்றை மாணவர்கள் தொகுத்து கூறுதல்.

வலுவூட்டல்

கடினமான பகுதிகளை மீண்டும் கற்பித்தல் .

வாசிப்பு பயிற்சி அளித்தல்.

 கடினப் பகுதிகளில் புரியாத பகுதிகளுக்கு விளக்கம் அளித்தல் .

எளிய வினாக்கள் கேட்டல்.

 கற்றலை உறுதி செய்தல்

மதிப்பீடு

வெள்ளச்சமவெளிகள் அழிய காரணம் யாது?

 உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கி சென்றாள் மட்டுமே புவி வெப்பமயமாதல் கட்டுப்படுத்த முடியும் இத்தொடர் மூலம் நீ அறிவன யாவை ?

பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக.

 நீர்வழிப்பாதைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

தொடர்பணி

வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ் செய்திகளைத் தொகுக்க

மரக்கன்று நடுதலின் தேவையும் இன்றியமையாமையையும் வலியுறுத்தி கட்டுரை தயாரிக்க.

.

இராம்முருகன், தமிழாசிரியர், அரசூர்



கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...