செவ்வாய், 27 மே, 2025

பட்டு உடுத்தி வந்தாள் இதுஎவ்வகை ஆகுபெயர்?

 பட்டு உடுத்தி வந்தாள் 

கருவி - மூலம், காரணம் எனப்பொருள்படும்

காரியம் - மூலத்தால் உருவாகும் பொருள் 

பட்டு நூல் - மூலம் 

பட்டாடை - மூலத்தால் உருவாகும் பொருள் 

காரணத்தின் பெயர் (மூலம்) காரியத்திற்கு (மூலத்தாலானபொருள்) ஆகி வருவது கருவியாகுபெயர். 

பட்டு நூல் என்னும் மூலத்தின் பெயர் மூலத்தாலான பொருளான ஆடைக்கு ஆகி வந்துள்ளதால் இது கருவியாகு பெயராகும்.


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...