புதன், 22 நவம்பர், 2023

பன்னிரண்டாம் வகுப்பு முக்கிய வினாக்கள்

 

முக்கிய குறுவினாக்கள்

1.      நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.

2.      கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

3.      விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க.

4.      இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.

5.      நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.

6.      புக்கில் தன்மனை சிறுகுறிப்பு வரைக.

7.      நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

8.      எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

9.      சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

10.   வசனம் கவிதை வேறுபாடு தருக

11.   எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும் யாருக்கு?

12.   அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

13.   சினத்தை ஏன் காக்க வேண்டும்?

14.   மறக்கக்கூடாதது மறக்கக் கூடியது எவற்றை?

15.   வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

16.   கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக

17.   கீழ்த்திசை சுவடிகள் நூலகம் குறிப்பு வரைக

18.   காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

19.   பாவிகம்- விளக்குக.

20.   காப்பியத்தின் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக

21.   எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

22.   பின்னணி இசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக

23.   நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை  இடித்துரைக்கிறார்?

24.   அஞ்சத்தகுந்தன அஞ்சத்தகாதன பற்றி வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

25.   பெருந்தேர் புணர்ச்சி விதி கூறுக

26.   தொன்மம் விளக்கம் தருக

27.   பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக

28.   அறிவுடைவேந்தனின் நெறி குறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?

29.   செவியறிவுறூஉ துறையை விளக்குக

30.   தமிழர் வளர்த்த அழகு கலைகள் நூல் குறிப்பு வரைக

31.   இறை மகனாரின் இன்னலை கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

சிறுவினாக்கள்

1.      ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

2.      வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக

3.      யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே உவமையையும் பொருளையும் பொருத்தி எழுதுக.

4.       அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?

5.      அகலாது அணுகாது தீக்காய்வர் போல இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

6.      எடுத்துக்காட்டு உவமையணி விளக்குக

7.      நாட்டிய அரங்கின அமைப்பை இளங்கோவடிகள் எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்?

8.      திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

9.      பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற முறையை திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

10.   நெல்லின் நேரே வெண்கல் உப்பு இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக

11.   நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

12.   மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க.

13.   சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

14.   சினத்தால் வரும் கேட்டினை கூறுக

15.   சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக

16.   வருபவர் எவராயினும் நன்றி செலுத்து’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

17.    பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் தருக.

18.    வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

19.    பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக

20.    மழை வெள்ளப்பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

21.    சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் -  விளக்குக

22.   ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

23.   செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்து பூக்காடாம் வானமெல்லாம்- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...