திங்கள், 23 அக்டோபர், 2023

அலகுத்தேர்வு -6

                       பகுதி -அ                    10×2=20                                      

1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

2. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

3. ஒருமுக எழினி, பொருமுக எழினி-குறிப்பு எழுதுக.

4.அஞ்சத்தக்கன, அஞ்சத்தாகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

5. வறுமையும் சிறுமையும் தருவது எது?

6. பகைவராலும் அழிக்கமுடியாத அரண் எது?

7. பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக.

8. கான்-காண் பொருள் வேறுபாடு அறிந்து தொடரமைக்க.

9. பெயர்ச்சொற்களை தொடருக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க.

   1. உங்களுக்கு --------(யார்) நன்மை என நினைக்கிறீர்கள்?

   2. நம்முடைய ----------(தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

10. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடரமைக்க.

       குதிரை, வேகம்,ஓடு,தாவு

                           பிரிவு-ஆ.                   4×4=16

11. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.

12. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

13. சொற்பொருள் பின்வரு நிலையணி- எடுத்துக்காட்டுடன் விளக்குக.

14. அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க

    இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - இக்கறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

                      பிரிவு - இ.                    4+2=6

15.குழல்வழி... எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்பாடலை அடிபிறழாமல் எழுதுக.     

16. எப்பொருள்... எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                         1×8=8

16. திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.


    

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...