மெய்யீற்றின்முன் உயிர் -புணர்ச்சியறிவோம்
இரண்டுசொற்கள் இணையும்போது முதலில் நிற்கும் சொல் நிலைமொழி. அடுத்ததாக வரக்கூடிய சொல் வருமொழி. நிலைமொழியின் ஈற்றில் மெய்யெழுத்து நிற்க, அதை 'மெய்யீறு' என்பர்.
சான்று:மரம்,பெண்,ஆண்,அறன், குறள், நிரல்
வருமொழி முதலானது உயிரெழுத்தாக இருந்தால் (அழகு,அடி,ஆற்றல், இன்பம் ) இருவேறு வழிகளில் சொற்களிணையும்.இதையே 'மெய்யீற்றின்முன் உயிர்' என்று கூறுகிறோம்.
1. நிலைமொழியில் தனிக்குறிலைச்சாராத மெய் அதாவது,தனிநெடிலடுத்த மெய்யாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்குப்பின் இடம்பெறும் மெய்யாகவோ இருப்பின்,வருமொழிவுயிர் மெய்யின்மேல் ஏறிநிற்கும்.
சான்று :
ஆண்+ஆதிக்கம்
ஆ(ண்+ஆ) திக்கம்
ஆணாதிக்கம்
ஆண் - தனிநெடிலடுத்த மெய்
ஆதிக்கம்-உயிர்முதல்
ண்+ஆ -ணா -உயிர் மெய்மேல் ஏறியது.
மரம்+அழகு
மர(ம்+அ)ழகு
மரமழகு
மரம் -ஒன்றுக்குமேற்பட்ட எழுத்தின்பின் மெய்
அழகு- உயிர்முதல்
ம்+அ - ம - உயிர் மெய்மேல் ஏறிது.
இதற்குரிய புணர்ச்சி விதி
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'
2 . தனிக்குறிலையடுத்த மெய் வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டித்துப்புணரும்.
சான்று
பெண்+அழகு
பெண்ண்+அழகு (மெய் இரட்டித்துள்ளது)
பெண்(ண்+அ)ழகு(உயிர் மெய்மேல் ஏறியது)
பெண்ணழகு
இப்புணர்ச்சியில் இரண்டுவிதிகள் செயல்பட்டுள்ளன.
1.தனிக்குறில்முன் மெய் உயிர்வர இரட்டும்.(கண்ண்+அழகு)
2.உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (ண்+அ -ண)
இவ்விரண்டு புணர்ச்சிவிதிகளையுமறிந்து மொழியைச் செழுமைசெய்வோம்.
புணர்ச்சியிலக்கணத்தொடர்: 3
ஆக்கமும் இடுகையும்
இராம்முருகன்
ம்.ரெட்டியபட்டி
விருதுநகர் மாவட்டம் 626118
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக