சனி, 21 மே, 2022

மெய்யீற்றின்முன் உயிர் - புணர்ச்சி விதிகள்

 மெய்யீற்றின்முன் உயிர் -புணர்ச்சியறிவோம்

இரண்டுசொற்கள் இணையும்போது முதலில் நிற்கும் சொல் நிலைமொழி. அடுத்ததாக வரக்கூடிய சொல் வருமொழி. நிலைமொழியின் ஈற்றில் மெய்யெழுத்து நிற்க, அதை 'மெய்யீறு' என்பர்.


சான்று:மரம்,பெண்,ஆண்,அறன், குறள், நிரல்


வருமொழி முதலானது உயிரெழுத்தாக இருந்தால் (அழகு,அடி,ஆற்றல், இன்பம் ) இருவேறு வழிகளில் சொற்களிணையும்.இதையே 'மெய்யீற்றின்முன் உயிர்' என்று கூறுகிறோம்.


1. நிலைமொழியில் தனிக்குறிலைச்சாராத மெய் அதாவது,தனிநெடிலடுத்த மெய்யாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்குப்பின் இடம்பெறும் மெய்யாகவோ இருப்பின்,வருமொழிவுயிர் மெய்யின்மேல் ஏறிநிற்கும்.


சான்று :

ஆண்+ஆதிக்கம் 

ஆ(ண்+ஆ) திக்கம்

ஆணாதிக்கம்

ஆண் - தனிநெடிலடுத்த மெய்

ஆதிக்கம்-உயிர்முதல்

ண்+ஆ -ணா -உயிர் மெய்மேல் ஏறியது. 


மரம்+அழகு

மர(ம்+அ)ழகு

மரமழகு


மரம் -ஒன்றுக்குமேற்பட்ட எழுத்தின்பின் மெய்

அழகு- உயிர்முதல்

ம்+அ - ம - உயிர் மெய்மேல் ஏறிது.

இதற்குரிய புணர்ச்சி விதி


'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'


2 . தனிக்குறிலையடுத்த மெய் வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டித்துப்புணரும்.


சான்று

பெண்+அழகு

பெண்ண்+அழகு (மெய் இரட்டித்துள்ளது)

பெண்(ண்+அ)ழகு(உயிர் மெய்மேல் ஏறியது)

பெண்ணழகு 


இப்புணர்ச்சியில் இரண்டுவிதிகள் செயல்பட்டுள்ளன.

1.தனிக்குறில்முன் மெய் உயிர்வர இரட்டும்.(கண்ண்+அழகு)


2.உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (ண்+அ -ண)


இவ்விரண்டு புணர்ச்சிவிதிகளையுமறிந்து மொழியைச் செழுமைசெய்வோம்.


புணர்ச்சியிலக்கணத்தொடர்: 3


ஆக்கமும் இடுகையும்

இராம்முருகன்

ம்.ரெட்டியபட்டி

விருதுநகர் மாவட்டம் 626118

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...