வேங்கை என்பது தனி மொழியாகி புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும்.
வேம்+ கை எனத்தொடர்மொழியாகப் பிரிந்து வேகின்ற கை என பொருள் தரும்.
------------------------+++-----------------------------
2. மன்னும் சிலம்பே மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
இப்பாடலில் இடம்பெற்ற ஐம்பெருங் காப்பியங்கள் 'சிலப்பதிகாரம் மணிமேகலை'.
எஞ்சிய காப்பியங்கள்:
சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
-----------------------------+--------------------------
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
சரியான தொடர்கள்:
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழையான தொடர்:
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
பிழைக்கான காரணம்:
தாறு - வாழைக்குலை சீப்பு - வாழைத்தாற்றின் பகுதி. எனவே, வாழைத்தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும்.
----------------------------------------------------------
4.உடுப்பதூஉம் உண்பதூஉம் கானின் பிறர்மேல் வடுக்காண்வற்றாகும் கீழ்''-
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
அளபெடையின் வகை: இன்னிசை அளபடை.
இலக்கணம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசை காக குறில் நெடிலாக மாறி, அளவெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
-------------------------------------------------------------
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
இசை விமரிசகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வான் உடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது 'அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்" என்று சிலேடையாகக் குறிப்பிட்டார்.
------------------------------------------------------------
சிறுவினாக்கள்:
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
தமிழன்னையை வாழ்த்துதல்:
தமிழன்னைஅன்னை மொழி யானவள்.
அழகாய் அமைந்த செழுந்தமிழானவள் .
பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி.
கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசானவள்.
பாண்டிய மன்னனின் மகள்.
திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவள்.
பதினெண் மேற்கணக்கும், பதினெண் கீழ்க்கணக்கும், நிலைத்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கொண்டவள்.
அதனால் பொங்கி எழும் நினைவுகளால் பாவலரேறு தமிழன்னையை வாழ்த்துகிறார்.
--------------------------------------------------------------
2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
1. வயலில் நெல்நாற்று நட்டனர்.
2. சாலையோரத்தில் புளியங்கன்று வளர்ந்திருந்தது.
3. வாழைக்குருத்தை கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தேன்.
4. வீட்டில் தென்னம்பிள்ளை நட்டு வைத்தேன்.
5. குளக்கரையில் பனைவடலியைக் கண்டேன்.
------------------------------------------------------------
3. அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம் அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும் - இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்று களை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
அறிந்தது -அறிதல், புரிந்தது -புரிதல், தெரிந்தது-தெரிதல், பிறந்தது -பிறத்தல்,
அழியாதது- அறியாமை , புரிந்தது-புரியாமை, தெரியாதது -தெரியாமை, பிறவாதது- பிறவாமை.
--------------------------------------------------------------
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக