வியாழன், 12 டிசம்பர், 2019

நாம் காதல் போன்ற மென் உணர்வுகளை கவிதையில் பதிவிடும் போது தாமரை, ரோஜா, அல்லி, மல்லிகை போன்ற மலர்களை உவமையாகக்கூறியே பழகி வந்துள்ளோம். ஆனால், நெருஞ்சி மலரை உவமையாக வைத்து, தன் காதலை தலைவி வெளிப்படுத்திய ஒரு பாடலும் குறுந்தொகையில் உள்ளது. தலைவி சொல்கிறாள் தோழியிடம்," தோழி! நானும் தலைவனும் கொண்ட காதலானது இனிமையானது; அவர், என்னுடன் பழகிய ஆரம்ப நாள்களில் அழகியநெருஞ்சி மலர்களைப்போல என்காதல் இனிமையாகவிருந்தது . ஆனால், நாள்கள் செல்லச்செல்ல நெருஞ்சி மலரிலிருந்து தோன்றிய முள்ளைப்போல் நம்மோடு காதல் கொண்ட தலைவன் நம்மை வெறுக்கத் தொடங்கி விட்டான் அதனால் என் மனம் மிகவும் வருந்துகிறது
அதாவது காதல் தோன்றும் போது நெருஞ்சி மலரைப்போல கண்ணுக்கு இனிமையாகவும் காதல் முற்றும்போது நெருஞ்சி முள்ளைப் போல உறுத்தலாகவும் மாறிவிடுகிறது.

பெரும்பான்மையான குடும்பங்களில் திருமணமான புதிதில் குடும்ப வாழ்வு நெருஞ்சி மலரைப்போல  இனிமையாமாகவும், நாள்கள் செல்லச் செல்ல நெருஞ்சி முள்ளைப்போல உறுத்தலாக இருப்பதனால்தான் நீதிமன்றங்களில் திருமணமுறிவு வழக்குகள் குவிந்துகொண்டுள்ளன. 

காதலைக்கொண்டாடுங்கள்! 

பாடல்

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந்தாஅங்  இனிய செய்த நம் காதலர் இன்னா செய்த நோமென்நெஞ்சே
#அள்ளூர் நன்முல்லை

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...