1.செய்யுளிசை அளபெடை- சான்றுடன் விளக்குக.
செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்யும் பொருட்டு உயிர் நெடில் எழுத்துக்கள் தனக்குரிய அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும். இதனையே "செய்யுளிசை அளபெடை" என்கிறோம்.
எ.கா
உழாஅர்-இச்சொல்லில் 'ழா' என்ற நெடில் தனக்குரிய அளவில் இருந்து நீண்டு ஒலிக்கிறது எனவே இதனை செய்யுளிசை அளபெடை எனலாம்.
2. இன்னிசை அளபடை- சான்றுடன் விளக்குக.
செய்யுளில் இனிய இசைக்காக உயிர்க்குறில் எழுத்துக்கள் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்.
எ.கா
கெடுப்பதூஉம்-இச்சொல்லில் 'து' என்னும் குறில் 'தூ' என்னும் நெடிலாக மாறி(தூஉ) அளபெடுத்து இருக்கிறது. எனவே இதனை இன்னிசை அளபடை எனக் கூறலாம்.
3. சொல்லிசை அளபெடை சான்றுடன் விளக்குக
செய்யுளில் ஓசை இசை நிறைவாக இருக்கும் போது ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை எனப்படும்.
எ.கா
தழீஇ-இச்சொல் அளபெடுக்கும் போது பெயர்ச் சொல்லில் இருந்து வினைச்சொல்லாக மாறுகிறது. இதுபோல செய்யுளில் ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி அளவெடுப்பதை சொல்லிசை அளபெடை என்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக