நாள்: 12/8/24 முதல் 16/ 8/24
வகுப்பு: பதினோராம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு:இயல்4
பிள்ளைக்கூடம், நற்றிணை, தொல்காப்பியம்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்க வேண்டும் என்பதை இலக்கண நூல் வழி அறிந்து பின்பற்றுதல்
வளமையும் வறுமையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நற்றிணை வழி அறிதல்
கற்றல் விளைவுகள்
கல்வி கற்றல் காலம் தோறும் அடைந்துள்ள மாற்றங்களை அறிகின்றனர்
சங்ககால வாழ்வியலை நற்றிணை வாயிலாக அறிகின்றனர்
துணைக் கருவிகள் விளக்கப்படம் மடிக்கணினி கரும்பலகை
ஆர்வமூட்டல்
நீ விரும்பும் வகையில் பள்ளிக்கூடம் அமைய வேண்டுமானால் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என வினவுதல்
வறுமை வளமான வாழ்வுக்கு தடையாகுமா? மாணவர்களுடன் கலந்துரையாடல்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
பாட அறிமுகம்
மாணவர்கள் பள்ளியில் இன்பமாக கல்வி கற்க ஏதுவான வகையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று மாணவர்களுடன் கலந்துரையாடல்
பாட வளர்ச்சி
பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் பற்றியும் தாய்மொழி கல்வி பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைத்தல்
கவிதையை வாசித்துக் காட்டுதல் கவிதையில் ஏற்புடைய நயங்களை சுட்டிக்காட்டுதல்
கவிஞர்.இரா மீனாட்சி குறித்த குறிப்புகளை அவர் படைத்த நூல்களை கூறுதல்.
திணை துறை விளக்குதல்
பாடலைப் பதம் பிரித்துப் படித்தல் அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறல் எட்டுத்தொகை நூல்களை பட்டியலிடல்
நற்றிணை நூல் அமைப்பு பற்றி விளக்குதல்
தொல்காப்பியம் பற்றி விளக்குதல். கல்வி கற்கும் முறையை விளக்குதல்.
மாணவர் செயல்பாடு
தனக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என பட்டியலிடல்
தாய்மொழி கல்வியின் சிறப்பு குறித்துக் கலந்துரையாடல்
எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடல்
நற்றிணையின் நூலமைப்பை அறிந்து வகுப்பறையில் கூறுதல்
தொல்காப்பியம் பற்றி அறிந்த செய்திகளை வகுப்பில் பகிர்தல்
பதம்பிரித்து பொருளோடு பாடலைப் படித்தல்
வலுவூட்டுதல்
பாடக் கருத்துக்களை மீண்டும் கூறுதல் எளிய வினாக்கள் கேட்டல்
கடினப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
துணைக்கருவி பயன்பாடு
பிள்ளைகள் கற்க விரும்பும் பள்ளிகளின் மாதிரிக் காணொளிகளை காட்டுதல். நற்றிணைப் பாடலின் பொருள் விளங்கும் விளக்கப்படம் காட்டுதல்
தொல்காப்பியம், தொல்காப்பியர் பற்றிய செய்திகளை இணையத்தில் காட்டுதல்
குறைதீர்க்கற்பித்தல்
கடினப் பகுதிகளை கண்டறிந்து எளிய சான்றுகள் மூலம் விளக்குகள்
துணைக் கருவி கொண்டு பாடப் பகுதிகளை சிறு பகுதிகளாக பிரித்து கற்பித்தல்
மதிப்பீடு
1)மகள் நிலை உரைத்தல் துறையை விளக்குக
2)பிரசம் பொருள் கூறுக
3) நற்றிணை நூற்குறிப்பு தருக
4)தொல்காப்பியத்தின் உரையாசிரியர்கள் யாவர்?
தொடர்பணி
தாய்மொழி கல்வி பற்றிய உங்கள் எண்ணங்களை கவிதை ஆககுக.
சூழலோடு பொருந்தி கல்வியை வளர்த்துக் கொள்பவர் ஆணே! பெண்ணே! விவாதிக்க.
நன்றி 🙏
இரா.முருகன்
முதுகலைத்தமிழாசிரியர் ,
அரசுமேனிலைப்பள்ளி, ஆனையூர்
கோவை மாவட்டம்